Friday, November 30, 2012


அரசு மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலத்தில் 30.11.12 உலக வாசிப்பு தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் S.பரந்தாமன் முன்னிலையில் ஆறு முதல் பதினொன்றாம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் ஒன்றாக மைதானத்தில் அமரச் செய்து சிறுவர்களுக்கான வார ,மாத இதழ்கள். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் என ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகத்தை அளித்து ஆசிரியர்கள் படித்தலின் பயன்களை விளக்கி மாணவர்களைப் படிக்க செய்தனர்.






Thursday, November 29, 2012


வாசித்து மகிழ்வோம்

அரசு மேல் நிலைப் பள்ளி,சத்தியமங்கலம்

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
"போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.
சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.ஓநாயும் "நண்பா, நண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....." என்று வருத்தத்துடன் கூறியது."அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி."சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்."அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று."உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை...அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

அன்பின் மதிப்பு

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.
ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.அவன் மன்னனிடம், "அரசே........உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்" என்றான்.
அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், "அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?" என்று கேட்டார். மன்னனோ, "அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது" என்று கூறினான்.நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

Wednesday, November 28, 2012


Latest Income tax slabs for year 2012



30.11.12 - உலக வாசிப்பு தினம்.



அன்றைய தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு Library Books & News Papers வாசித்தல் பற்றி அறிவுறுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

animated gifs bullets 5BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 

மாணவர்களுக்கான விடுதிகள் கட்ட அரசு நிதி ஒதுக்கி 

செய்தி வெளியீடு


animated gifs bullets 5அரசு Cable TV மூலம் கல்வித்தொலைக்காட்சி 

அலைவரிசையினை SSA மூலம் தொடக்க/நடுநிலை/உயர்/

 மேல்நிலை பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியீடு


animated gifs bullets 5கலை பண்பாட்டு ஆசிரியர் பதிவு மூப்பு


சென்னை கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை, தேவாரம், வயலின், நாதஸ்வரம், பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு, ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
1.7.2012 அன்று 30 வயது முடிந்த, 58 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20.11.2012 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள், பதிவை இன்று (நவம்பர் 27) நேரில் பதியலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

animated gifs bullets 564 உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க

 நவ., 30 கடைசி


தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் 64 வகையான உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ பொது, எம்பிஏ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி யோகா, யோகா தெரபி, சைக்காலஜி, யோகா நேச்சுரோபதி, டிப்ளமோ இன் யோகா, பிட்னஸ் அண்டு நியூட்ரிஷன் உள்ளிட்ட 64 வகையான எம்.பி.ஏ., எம்.எஸ்சி, பி.எஸ்சி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் உடற்கல்வி படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளுக்கான காலம், தகுதி, கல்விக் கட்டணம், விண்ணப்ப படிவம் போன்ற விவரங்களை பெற www.tnpesu.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

animated gifs bullets 5அரசு சிறார் காப்பகங்கள்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


அரசு சிறார் காப்பகங்களின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள, அரசு சிறார் காப்பகத்தில் இருந்து, கடந்த, ஜூன் மாத இறுதியில், 34 சிறார்கள், நள்ளிரவில் தப்பினர். இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை செயலர்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பியது. அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயந்தி, பிறப்பித்துள்ள உத்தரவு:

அரசு சிறார் காப்பகங்களில் உள்ள பிள்ளைகளுக்கு, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவுகளை வழங்குவதுடன், மாதம் இருமுறை, அவர்களுக்கு, மனநல ஆலோசனை,யோகா மற்றும் தியானப் பயற்சி அளிக்க வேண்டும்.
கழிவுநீர் பாதையை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட, காப்பக துப்புரவு பணிகளில், சிறார்களை ஈடுபடுத்தக் கூடாது. சிறார்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க, அனைத்து காப்பகங்களிலும், புகார் பெட்டி வைக்க வேண்டும்.

மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகங்களில், மாதம் ஒருமுறையாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மேலும், மாவட்ட கலெக்டர்கள், காப்பகங்களின் செயல்பாடுகளை, தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

animated gifs bullets 5நடைமுறைக்கு வராத அரசாணை : 

பார்வையற்ற பட்டதாரிகள் அவதி


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைக்கு வராத நிலை தொடர்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கல்வி பயிலவும், பணியில் சேரவும், 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2006ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் படி, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக,"நெட், ஸ்லெட்&' தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பிஎச்.டி., பயில இடம் கிடைப்பதில்லை. இதே போல, ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், ஆசிரியராக பணியமர்த்தப்படுவதில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பும் போதும், 1 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப் படுவதில்லை. அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களும், இதுவரை பணியமர்த்தப்படாமல் உள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளில், 42 சதவீதம் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என, 2002ல் வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவும், அமலுக்கு வரவில்லை.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வு ஊதியமாக, 1,000 ரூபாய் வழங்கப்படுவது போல, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகையை, 450 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். பார்வையற்ற மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும், பார்வையுள்ளவர்களின், கல்வி தகுதிக்கேற்ப, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும், பார்வையற்ற மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகையை, இருமடங்காக உயர்த்தி தர வேண்டும். பார்வையற்ற மாணவர்களின் பாட நூல்களையும், மின் நூல்களாக மாற்றி, பேசும் மென்பொருள் பொருத்தப்பட்ட மடிக்கணினியை இலவசமாக வழங்க வேண்டும் என, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பார்வையற்ற பட்டதாரிகளுக்கான கலை, இலக்கிய சங்கத்தினர் கூறியதாவது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, முதல்வரின் தனிப்பிரிவு, சமூகநலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக மூன்றாண்டுகளாக அரசுடன் போராடி வருகிறோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த உள்ளோம்,இவ்வாறு அவர் கூறினார்.

animated gifs bullets 5கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணை 

பணியிடங்கள்


கல்வித் துறையில், கருணை அடிப்படையிலான, 1200 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இயக்குனர், கூடுதல் இயக்குனர், சி.இ.ஓ., தொடக்க கல்வி அலுவலகங்களில் 15 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன.  ஆண்டுதோறும் பணி நியமனங்களில், 25 சதவீத காலியிடங்களை கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்ட போதும், 1997 முதல், கருணை அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பணி வழங்காததால் காலிப்பணியிடம் 1200 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது: இத்துறையில் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில், 8 ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. 15 ஆண்டுகளாக இப்பணியிடங்களை நிரப்பவில்லை. அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ளதால், அதிக இழப்புகளும் இந்த துறையில்தான் ஏற்படுகிறது. இதனால், 25 சதவீதம் இடஒதுக்கீடு என்பதையும் அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

animated gifs bullets 5முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற 

டிசம்பர் 7 கடைசி


முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது.
7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக www.dse.th.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.   இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


animated gifs bullets 5கணிதத்திறன் மேம்படுவதற்கான ஒரு சிறந்த வழி!


மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.

இப்படிப்பை முடித்த பலர், TIFR, ISI, IISc, CMI, IIT and University of Wisconsin போன்ற பல்வேறான கல்வி நிறுவனங்களில், கணித ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
இப்படிப்பின் விபரம்
எதிர்கால கணிதவியல் அறிஞர்களை உருவாக்குவதே MTTS படிப்பின் பிரதான நோக்கம். ஒவ்வொரு வருடமும், கோடைகாலமான, மே மற்றும் ஜுன் மாதங்களில், 4 வாரங்கள் நடத்தப்படும் இப்பயிற்சி படிப்பில், மாணவர்கள், கணித சிக்கல்கள் குறித்து அதிக கேள்விகள் கேட்டு, தங்களின் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
இந்த MTTS படிப்பானது, இந்தியா முழுவதும் 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. பல்வேறு மையங்களில் நடத்தப்படும் இப்படிப்பில், ஒரு நிலைக்கு(level) சுமார் 35 முதல் 40 மாணவர்கள் இடம்பெறுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும், சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவழிக்கப்படுகிறது. இலவச தங்குமிடம் கொடுக்கப்படுவதோடு, திரும்பி வருவதற்கான sleeper class ரயில் டிக்கெட்டும் தரப்படுகிறது.
நடத்தப்படும் முறை
வகுப்புகள், ஒவ்வொரு நாளும், காலை 9.30 முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும். Problem sessions மற்றும் மாணவர் செமினார்கள், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். இத்தகைய தீவிர பயிற்சியின் மூலம், ஒரு மாணவருக்கு, அழுத்தமான சூழலில் பணியாற்றும் பயிற்சி கிடைக்கிறது.
இப்படிப்பில், கணித சிக்கல்களைத் தீர்ப்பதில் பயன்படுத்தப்படும் USP என்ற சிக்கல் வாய்ந்த பயிற்சி முறையானது, மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இச்செயல்முறையானது, கணிதத்தை கற்கும் வழக்கமான முறைகளிலிருந்து, MTTS முறைக்கு மாணவர்களை இட்டுச் செல்கிறது. குறிப்புகளின் நகல்களும், படிப்பதற்கான சில இலவச உபகரணங்களும் கிடைக்கின்றன.
தேர்வாதல்
இப்படிப்புக்கு, மாணவர்களைத் தேர்வுசெய்ய, 5 நடைமுறைகளைக் கொண்ட, தனித்துவமான வழிமுறைகளை, தேர்வு கமிட்டி பின்பற்றுகிறது. ஒரு ஆண்டின் டிசம்பர் மாதம் 2ம் பாதியில் துவங்கும் இந்த தேர்வுசெய்யும் நடைமுறை, அடுத்தாண்டு, பிப்ரவரி 3ம் சனிக்கிழமையன்று முடிகிறது.
1 மற்றும் 2ம் சுற்றுகள் - விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் அடிப்படையில், தகுதியற்றவர்களை நீக்குவதற்கான சுற்றுகள் இவை.
3 மற்றும் 4ம் சுற்றுகள் - ஒரே மாநிலத்தை சேர்ந்த மற்றும் தொடர்புடைய கிரேடிங் முறையைக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்த, shortlist செய்யப்பட்ட மாணவர்களிலிருந்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இச்சுற்றுகளில் நடைபெறும்.
5ம் சுற்று - பிராந்திய அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்யும், தேசிய அளவிலான சுற்று இது.
விண்ணப்பித்தல் எவ்வாறு?
விண்ணப்ப படிவம் மற்றும் ஆசிரியரின் பரிந்துரைக் கடிதம் போன்றவை முக்கியமானவை. இந்தக் கடிதத்தின் மூலமாக, ஒரு மாணவரின் உற்சாகம், புரிந்துகொள்ளும் திறன், உறுதியான மற்றும் தீர்மானமான மனப்பாங்கு ஆகியவை மதிப்பிடப்படும்.
இதுதவிர, ஒரு மாணவரின், பிராந்திய மற்றும் கிராமப்புற பின்னணியும் கணக்கில் எடுக்கப்படும். ஒரே கல்வி நிறுவனத்திலிருந்து, அதிகபட்சம், 2 பேரை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்ற விதியும் உண்டு. மாணவிகளின் பங்கேற்பை உறுதிசெய்ய, அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
பழைய மாணவர்கள், அடுத்த நிலைக்காக விண்ணப்பித்தால், முந்தைய நிலையில் அவர்களின் செயல்பாடு கருத்தில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தேர்வு நடைபெறும்.
MTTS -ஐ பொறுத்தவரை, வெறுமனே பொழுதைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், இதன்மூலம், தகுதியான மாணவர்கள், வாய்ப்பு பெறுவது தடைபடும்.
தனிநபர் கவனம்
இப்பயிற்சி படிப்பில், பல்வேறு கல்வி நிறுவனங்களின் கணிதத்துறையில் ஆசிரியராக பணியாற்றும் நிபுணத்துவம் பெற்றவர்கள், இங்கு ஆசிரியர்களாக பணியாற்றுவர். அவர்கள், வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து, மாணவர்கள், தங்களுடன் கலந்துரையாடி, சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள துணைபுரிகின்றனர்.
தேனீர் இடைவேளி மற்றும் உணவு இடைவேளை நேரங்களிலும் கூட, மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்க, ஆசிரியர்கள் துணைபுரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட, தங்களின் தனிப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக, ஆசிரியர்களின் தங்குமிடம் சென்று, அதுகுறித்து விவாதிக்க, மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மாணவர் கருத்தரங்கள்
இப்பயிற்சி படிப்பின் 2வது வார இறுதியில், தாங்கள் தேர்வு செய்த Topic தொடர்பாக, MTTS கற்பித்தல் முறையில், ஒவ்வொரு மாணவரும் ஒரு Presentation வழங்க வேண்டும். இம்முறையில், பார்வையாளர்களிடம், கேள்விகள் கேட்கப்படுகின்றன. (பார்வையாளர்கள் என்பவர்கள், இதர மாணவர்களும், ஆசிரியர்களும் அடங்கிய குழுவினர்தான்). பார்வையாளர்கள், பதிலை யோசித்து முடிவு செய்ய, இடைவேளையும் தரப்படுகிறது.
இந்த செமினார் மூலமாக, கூட்டத்தைக் கண்டு பேச பயப்படும் மாணவர்கள், தங்களின் அச்சமும், கூச்சமும் நீங்கி, தங்களின் கருத்தை தெளிவாக வழங்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள். மேலும், இதன்மூலமாக, மாணவர்களின் கற்பிக்கும் ஆற்றலும் மேம்படுகிறது.
இத்தகைய Presentation வழங்க, ஒரு சிக்கலின் பல அம்சங்களை மாணவர்கள் ஆராய வேண்டியுள்ளதால், அது அவர்களின் கணித அறிவையும், சிக்கல் தீர்க்கும் திறனையும் வளர்ச்சியடைய செய்கிறது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில், நிறைய குறுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு
பொதுவாக, 3 நிலைகளிலான பயிற்சியும் ஒரே மையத்தில் வழங்கப்பட்டாலும், மாணவர்களை அதிகம் கொண்ட 0 நிலை பயிற்சியானது, 3 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும், தனித்தனி விடுதி வசதிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில், சில சமயம், இன்ப சுற்றுலாக்களும் உண்டு.
ஒவ்வொரு பயிற்சி மையத்திலும், உள்கட்டமைப்பு வசதிகள் வித்தியாசப்படும். உணவைப் பொறுத்தவரை, தென்னிந்திய மையங்களில், அதற்கேற்ற உணவு வழங்கப்படுகிறது. இதனால், வடஇந்திய மாணவர்கள் சிரமமாக உணரலாம். சில இடங்களில், உள்கட்டமைப்பு வசதிகளும் குறைபாடுடையதாக இருக்கலாம்.
ஆனால், எத்தனை குறைகள் இருந்தாலும், கணிதத்தை காதலிப்பவர்கள், இவற்றை ஒரு குறையாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள், தங்களின் பாடம் தொடர்பாக அறிந்துகொள்ள, அனுபவம் பெற, விவாதிக்க, MTTS ஏராளமாக வாய்ப்புகளை வழங்குகிறது என்பது மட்டும் நிஜம்.
நிலைகள் பற்றிய விபரங்கள்
நிலை 0 - இளநிலை கணிதப் படிப்பில், முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள்.
நிலை I - 2 மற்றும் 3ம் ஆண்டு கணித இளநிலை மாணவர்கள் இருப்பார்கள்.
நிலை II - முதலாமாண்டு முதுநிலை மாணவர்கள்.
நிலை 0ன் பாடத்திட்டம்
Basic real analysis, Linear Algebra, Geometry(curve tracing, sketching of surfaces and classification of quadric surfaces) and Discrete probability, Combinatorics and Elementray number theory போன்றவை இருக்கும்.
நிலை 2 மற்றும் 3 பாடத்திட்டம்
MTTS முறையிலான, Algebra, Analysis, Geometry and Topology போன்றவை இருக்கும்.
தேர்வு கிடையாது
இப்பயிற்சி படிப்பை முடித்தப்பிறகு, தேர்வுகள் நடத்தப்படாது. ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும், தனித்தனியாக Grade வழங்கப்படும். மாணவர்கள் விரும்பினால், அது மற்றவர்களுக்கும் தெரிவிக்கப்படும்.
 

animated gifs bullets 5இந்தியாவின் சிறந்த பல்கலைகள்


2012ல் இந்தியாவில் உள்ள பல்கலைகளில், பாடப் பிரிவுகள், சிறப்பு தகுதி, சேர்க்கை முறை, மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வியறிவு, தேர்ச்சி விகிதம், தேர்வு முறை முதலியவற்றை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடும் சிறந்த பல்கலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 45 இடங்களை பெற்ற பல்கலைகள்
1. டில்லி பல்கலை  டில்லி
2. ஜவஹர்லால் நேரு பல்கலை  டில்லி
3. பனாரஸ் இந்து பல்கலை  வாரணாசி
4. கோல்கட்டா பல்கலை  கோல்கட்டா
5. சென்னை பல்கலை  சென்னை
6. ஐதராபாத் பல்கலை  ஐதராபாத்

7. உஸ்மானியா பல்கலை  ஐதராபாத்

8. ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை  டில்லி

9. பெங்களூரு பல்கலை  பெங்களூரு

10. மாகராஜா சாயாஜிராவ் பல்கலை  வதோதரா, குஜராத்

11. அலிகார் முஸ்லீம் பல்கலை  அலிகார், உ.பி.,

12. ஆந்திரா பல்கலை  விசாகபட்டினம்

13. அலகாபாத் பல்கலை  அலகாபாத்

14. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ்  பிலானி

15. லக்னோ பல்கலை  லக்னோ

16. பாண்டிச்சேரி பல்கலை  புதுச்சேரி

17. மைசூர் பல்கலை  மைசூரு

18. மதுரை காமராஜ் பல்கலை மதுரை

19. கோவா பல்கலை  கோவா

20. குருநானக் தேவ் பல்கலை  அமிர்தசரஸ், பஞ்சாப்

21. உத்கல் பல்கலை  புவனேஸ்வர்

22. வடகிழக்கு மலை பல்கலை  ஷில்லாங்

23. கேரளா பல்கலை  திருவனந்தபுரம்

24. குருஷேத்ரா பல்கலை  குருஷேத்ரா, அரியானா

25. கர்நாடக பல்கலை  தர்வத்

26. பஞ்சாப் பல்கலை  பாட்டியாலா

27. கொச்சின் பல்கலை (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்)  கொச்சி

28. ராஜஸ்தான் பல்கலை  ஜெய்ப்பூர்

29. சர்தார் படேல் பல்கலை  வல்லப வித்யாநகர், குஜராத்

30. பாரதிதாசன் பல்கலை  திருச்சி

31. பாட்னா பல்கலை  பாட்னா

32. கவுகாத்தி பல்கலை  கவுகாத்தி

33. ககாதியா பல்கலை  வாராங்கல், ஆந்திரா

34. இமாச்சல் பிரதேச பல்கலை  சிம்லா

35. பாவ்நகர் பல்கலை  பாவ்நகர், குஜராத்

36. கோழிக்கோடு பல்கலை  கோழிக்கோடு

37. பாரதியார் பல்கலை  கோவை

38. மங்களூர் பல்கலை  கொனாஜி, கர்நாடகா

39. பனஸ்தலி வித்யாபத்  ஜெய்ப்பூர்

40. எஸ்.ஆர்.எம்., அறிவியல் பல்கலை  சென்னை

41. அசாம் பல்கலை  சில்சார்

42. ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலை  திருப்பதி

43. ராஞ்சி பல்கலை  ராஞ்சி, ஜார்கண்ட்

44. ரவீந்திரபாரதி பல்கலை  கோல்கட்டா

45. ஆக்ரா பல்கலை  ஆக்ரா

round - green and orangeAll High Schools & Higher Secondary Schools Code


round - green and orangeபள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் உயர்த்த கோரும்

 வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு


கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

      பள்ளிக் கல்வி வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். கல்வி விளையாட்டு

கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மதுரை டிவிஎஸ் பள்ளி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் என்று நிர்ணயிக்கப்படுகிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் வழங்கப்படும் என நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அறிவித்தனர்.

பணியாளர் -- அரசுப் பணியாளர்கள் இடமாற்றம் பொது மாற்றல்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையாணை 2012 - 2013 ஆம் ஆண்டுக்கு விலக்கி ஆணை வெளியிடப்படுகிறது.



round - green and orange

வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு


  வி.ஏ.ஓ. தேர்வு முடிவை வெளியிட தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

முதுகுளத்தூர் அருகே கீழகன்னிசேரி சரவணன் உட்பட, 4 பேர் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ.,க்கள், 3488 பேரை நியமனம் செய்ய, 2011 பிப்., 20 ல் தேர்வு நடந்தது. இதில், ஆதி திராவிடர்களுக்கான, 1077 பின்னடைவு பணியிடங்கள் அடங்கும். நாங்கள் தேர்வு எழுதினோம். 2011 ஜூலை, 19 ல் முடிவு வெளியிடப்பட்டது. 

பின்னடைவு பணியிடங்களில், 270 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். பணியில் சேராதவர்கள், பணியிலிருந்து விலகியவர்கள், வேறு வேலைகளுக்குச் சென்றவர்களால் ஏற்படும், காலிப் பணியிடங்களில் எங்களை நியமிப்பதாக, அரசு தெரிவித்தது. மேலும், 1870 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க, 2012 ஜூலை, 9 ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

ஏற்கனவே, பணியில் சேராமல் ஏற்பட்ட, காலி இடங்களையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குரூப் 2 தேர்வில், ஏற்கனவே வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால், காலிப் பணியிடங்கள் ஏற்படும். முதலில், வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியிட்டால், எங்களது உரிமை, பணிவாய்ப்பு பாதிக்கப்படும். 

குரூப் 2 தேர்வு முடிவை முதலில் வெளியிட வேண்டும். வி.ஏ.ஓ.,தேர்வு முடிவை வெளியிட, தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி கல்வித்துறையின் விஷன் 2024: அரசு பள்ளிகளில்100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.35 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை, முந்தைய தி.மு.க., ஆட்சியில் மாற்றப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.

அ.தி.மு.க., அரசு, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தையும், தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம், தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம், 85 முதல், 87 வரை இருந்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது. மேலும், தென் மாவட்டங்கள், கல்வி தரத்தில் உயர்ந்தும், வடமாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன.

இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து, கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை, விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சியில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம், தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, கணிதப் பாடத்தில், 10.8 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில், 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். பாட வாரியாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடத்தில் தான், மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழில், 0.8 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில், 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும், மிகக் குறைவாக, 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள், 682. அரசுப் பள்ளி மாணவர்களில், 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதுவே, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.6 ஆக உள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த பிளஸ் 2 தேர்வில், 325 அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சி, 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து, 2024ம் ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில், சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க, தற்காலிகமாக, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியரை நியமித்துக்கொள்ள, பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன், பாட நிபுணர்களின், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இலக்கை எட்ட முடியும் என, நம்புகிறோம். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
round - green and orangeஉடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது.

அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

"மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்&' என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.