Friday, June 28, 2013

தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி உத்தரவு.

தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.


பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் பெனின் தேவகுமார் தமிழக கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து அளித்துள்ள மனு விவரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியில் பணிவரன் முறை செய்யப்பட்ட நாளை மட்டுமே கணக்கில் எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். பிற பாடங்களுக்கு 7 பாடவேளை இருப்பதுபோல், சமூக அறிவியல் பாடத்துக்கும் 7 பாடவேளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


மொபைல் பாங்கிங் பற்றி சில டிப்ஸ்

இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் `மொபைல் பாங்கிங்’ Mobile Banking வசதி ஒரு வரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர்வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலையும் அவஸ்தையைப் பெருமளவு குறைத்துள்ளது. மொபைல் பாங்கிங்’ Mobile Banking வசதி மூலம் நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை அறியலாம்.

ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம், பணப் பரிமாற்றம் செய்யலாம்… இப்படிப் பல வசதிகள்.


உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பாங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) என்ற அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்ட `மொபைல் பாங்கிங்’ சேவை, தற்போது பிரபலமாகி வருகிறது. தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி `பேமன்ட்களுக்கான’ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்புதான் என்.பி.சி.ஐ.



தற்போது ஒரு வாடிக்கையாளர் செல்போன் மூலம் ஒருநாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். ஆனால் மேலும் பல வங்கிகள் இந்த வசதியில் இணையும்போது இந்த `லிமிட்’ அளவு கூடலாம் என்று கருதப்படுகிறது. இப்போதைக்கு சில முன்னணி தேசியமய மாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் மொபைல் பாங்கிங் சேவையை வழங்கி வருகின்றன.


`மொபைல் பாங்கிங்’கை பொறுத்தவரை அது தவழும் நிலையில் இருக்கிறது. ஆனால் இதில் பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புஇருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு சில அடிப்படைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தச் சேவை வளரும்போது மேலும் பல விரிவான, எளிதான வசதிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் `மொபைல் பாங்கிங்’ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
(குறிப்பு: நல்ல அறிமுகமான, நம்பகமான நண்பரிடம் இதன் விழி முறைகளை கற்று பின்பு பயன்படுத்துவது, தவறுகள ஏற்படாமல் இருக்க உதவும்.)

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) இணைய வழியில் விவரங்களை தொகுக்க / பராமரிக்க 03.07.2013 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் மண்டலங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

PG TRB Hall Ticket- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

              இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

இந்த மாதம் வருகிறது... அடுத்த மாதம் வருகிறது... நாளை வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு நமக்கு மிக அருகில் வந்து அமர்ந்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் 17,18 தேதிகளில். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ சிந்தனைக்கு சில...

*  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

*  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.


*  சுய சிந்தனையுடையவராய் உங்களை நீங்கள் நினைக்க வேண்டும்.

*  தேர்வுக்குத் தயார் செய்வதற்கு செலவிடும் காலத்தையும், வருவாய் இழப்பையும் வாழ்நாள் முதலீடாக கருத வேண்டும்.

*  தகுதித் தேர்வை வெறுக்காமல் வாழ்க்கையில் கிடைக்க பெற்ற வரப்பிரசாதமாகவும், உங்களின் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

*  தகுதித் தேர்வினை ஆதரிக்காவிட்டாலும் அதை எதிர்க்காத மனநிலையைப் பெற்றிருந்தால் அல்லது இனி பெறப்படுவீர்கள் என்றால் உங்கள் வெற்றி உங்களால் உறுதி செய்யப்படும்.

*  முதலில் சந்தையில் கிடைக்கும் கண்டதை எல்லாம் படிக்காமல் தேவையானதை மட்டும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

*  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த 9,10,11,12-ம் வகுப்பு பாடங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அதாவது நம்முடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்தில் மரியாதையையும், பிற பணிகளில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இதர பயன்களையும் அளிக்கப் போகும் இந்த தகுதித் தேர்வின் வெற்றிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மிகவும் குறைவு என்ற எண்ணம் முதலில் வரவேண்டும்.

*  6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் வாசிக்க வேண்டும். அதுவே தேர்வின் பயத்தினை போக்கி, அதிக மதிப்பெண்ணை பெற்றுத்தரும்.

*  ஒவ்வொரு பாடத்தையும் வாசித்து விட்டு அதில் 30/30, 60/60 எடுத்துவிடுவேன் என்ற நிலையை அடைந்த பிறகு அடுத்த பாடத்திற்கு செல்வது மிகவும் பயனளிக்கும்.

இவ்வாறு உங்களின் திட்டமிடுதல் இருந்தால் பிற பாடங்களை படிக்க முடியாமல் போனாலும் கூட அதிலிருந்து எப்படியும் 12/30 மதிப்பெண்களை பெற்று விடலாம்.

அதாவது 30+30+12+12+12=96 தகுதி மதிப்பெண்களை பெறுவது மிகவும் எளிது.
*  தொடர்ந்து படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால், சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  சைக்காலஜிக்கென்று கண்டதையெல்லாம் வாங்கி படிப்பதைவிட பேராசியர்.கி.நாகராஜன் அவர்களால் எழுதப்பட்ட கல்வி உளவியல் புத்தகங்களை வாங்கி படிக்கலாம்.

*  தமிழ், கணிதம் - அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், உளவியல் என்ற வரிசையில் ஒவ்வொரு பாடமாக படித்து முடித்த பின்னர் அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

*  எந்தவிதத் தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும் இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.

*  ஒரு தேர்வு முடிந்ததும் அதைப் பற்றிய கவலைகளை விட்டுவிட்டு, அடுத்த நிலைக்கு தயாராகுங்கள்.

Thursday, June 27, 2013

அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி ஊக்க ஊதியத்திற்க்கு எம்.பில்  MAY 2007  தேர்வு அட்டவணை

 நன்றி .தாமோதரன் ,தமிழ் ஆசிரியர்

CLICK TO DOWNLOAD   page  1
CLICK TO DOWNLOAD  page2


தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

          நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

           மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

          ஜூலை முதல் வாரத்தில், "ஆன்-லைன்" வழியாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எவை என்ற விவரங்களை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

               www.tnscert.org என்ற இணைய தளத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியின் முகவரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

              இது, ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர முடிவு செய்துள்ள மாணவருக்கு, பெரிதும் உதவியாக இருக்கும்.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு

          இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

             இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். நமது கல்வித்துறை திட்டங்களில் கற்பிக்கும் திறன் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்க கல்வித்துறை தவறுவதாகவும், புரிந்து கொள்ளாது மனப்பாடம் செய்து எழுதுவது நாகரிகமாக மாறி விட்டதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


''ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல!''

           ''உலகம் முழுவதும் ஆரம்ப கல்வி கற்பிக்கவே 1.7 மில்லியன் ஆசிரியர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள். 
 
          பல நாடுகளை சேர்ந்த பல ஆசிரியர்களை நான் பார்த்துவிட்டேன். பலர் ஆசிரியர் பணியை ஒரு தொழிலாக, வேலையாக தான் பார்க்கிறார்கள். சம்பளத்திற்கான‌ பணி அது, அவ்வளவே. ஒரு மருத்துவரை போல, வழக்கறிஞரை போல, நான் ஒரு ஆசிரியர் என்றே வாழ்கிறார்கள்.

               எவ்வளவு பெரிய தவறான கண்ணோட்டம் அது. நாளைய சமுதாயத்தையே அன்பும் அறிவும் கலந்து கட்டும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதை உணராமலேயே பலர் இயங்குகிறார்கள். பல நாடுகளில் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர கொடுக்கப் படுவதில்லை. ஆசிரியர்கள் பலர் வறுமையில் வாடுகிறார்கள்.

             குழந்தைகளின் வாழ்க்கைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆசிரியரும் முக்கியம். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு ஆசியர்கள் இல்லை. 114 நாடுகளில் இந்த கவலை அதிகமாக இருக்கிறது. பல நாடுகளில் 1,815 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தான் இருக்கிறோம். 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 21% ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள்''

-பான் கி மூன் (ஐ.நா பொது செயலாளர்)

பிளஸ்–1 மாணவிகளுக்கு நன்னெறி பயிற்சி முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள் அறிவுரை

பிளஸ்–1 வகுப்புகள்

          தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கி உள்ளன. 10–வது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பை தொடர்கிறார்கள். சிலர் வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

           பிளஸ்–2 படிப்பில் உள்ள மதிப்பெண்தான் உயர்கல்வியையும், அதைத் தொடர்ந்து வாழ்க்கைத்தரத்தையும் நிர்ணயிக்கிறது. எனவே பிளஸ்–2 படிப்புக்கு அடித்தளமாக அமைவது பிளஸ்–1 வகுப்பு.

          இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகராஜன் ஏற்பாட்டில் நன்னெறி பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.

          இதில் புதிதாக சேர்ந்த பிளஸ்–1 மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இதே பள்ளியில் படித்து சமூகத்தில் மதிக்கத்தக்க பணியில் இருப்பவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

டாக்டர் மெலித்தா கிளாடி

           அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் டாக்டர் மெலித்தா கிளாடி, அவரது தங்கை என்ஜினீயர் ஏஞ்சலின் ஆகியோர். அவர்கள் இருவரும் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள். அதுமட்டுமல்ல இவர்களின் தங்கை என்ஜினீயர் தபிதாவும் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிதான்.

டாக்டர் மெலித்தா கிளாடி மாணவிகள் மத்தியில் பேசியதாவது:–

           நான் இதே பள்ளியில் படித்தேன். எனது அம்மா தமிழ் ஆசிரியை. தந்தை சரத்குமார் டெலிபோன் அலுவலக அதிகாரியாக இருந்தார். வீடு அருகே இருந்ததாலும் அரசு பள்ளியில் படித்து சாதனை படைக்க வேண்டும் என்று எனது பெற்றோர் சொன்னார்கள். அதன்படி நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும், பிளஸ்–2 தேர்விலும் பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன்.

           இந்த மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவ–மாணவிகள் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இங்குதான் தொடக்ககல்வியை முடித்துள்ளார்.

           மாணவிகளே இந்த பள்ளியில் தகுதியான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் கற்பிக்கும் பாடங்களை வகுப்பறையிலேயே நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். சந்தேகம் இருந்தால் அப்போதே கேட்டு நிவர்த்தி செய்யவேண்டும். வீட்டுக்கு போய் நன்றாக படிக்கவேண்டும்.

         ஆரோக்கியமாக இருந்தால்தான் நோய் வராது. நன்றாக படிக்கவும் முடியும். நான் நன்றாக படித்ததால் தான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பையும். எம்.டி. படிப்பை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும் படித்து இன்று கிளினிக் நடத்தி வருகிறேன்.

எனவே மாணவிகளே சிரமப்பட்டு படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

இவ்வாறு டாக்டர் மெலித்தா கிளாடி பேசினார்.

ஆசிரியை திலகவதி பேசியதாவது:–

தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்

             நான் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறேன். மாணவிகளே உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும்போது சாலை விதிகளை கடைபிடித்து போக்குவரத்தை மட்டும் மனதில் கொள்ளுங்கள். ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

             படிக்கும்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கவனத்தை எந்த நேரத்திலும் சிதறவிடாதீர்கள். கவனச்சிதைவுதான் நமது லட்சியத்தை அடையவிடாமல் தடுக்கும். நீங்கள் தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.

இவ்வாறு ஆசிரியை திலகவதி கூறினார்.

Tuesday, June 25, 2013

நிறைய மதிப்பெண் வேண்டுமா?
கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சென்ற ஆண்டு படித்ததை விட, இந்தாண்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை மாணவர்களிடம் இருக்கும். அதற்கு எப்படி தயாராகப் போகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை, படிப்பு கடினமாக தோன்றுவதற்கு காரணம், தேர்வுகளும் தொடர்ந்து வரும் முடிவுகளும். நமது கல்வி இதுவரை, மதிப்பெண் முறையை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மார்க் அதிகம் எடுத்தால் தான் சமுதாயத்தில் மதிப்பு என்ற நிலை உள்ளது. எப்படி படிக்க வேண்டும்:

* ஒவ்வொரு நாளும் ஆசிரியர் நடத்தும் பாடங்களை, அன்றே படிக்கம் பழக்கத்தை கடைபிடித்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.

* புத்தகத்தை எடுக்கும் போது, புன்னகையுடன் எடுங்கள். புத்தகத்தை விரும்பி எடுத்தால் தான் நீண்ட நேரம் படிக்க தோன்றும். பெற்றோர், ஆசிரியர் வற்புறுத்தலுக்காக, புத்தகத்தை எடுத்தால் நன்றாக படிக்க முடியாது. மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தால், அதிக காலம் நினைவில் நிற்கும்.

* சில பாடங்கள் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்கும். அவற்றை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள். அது ஆர்வத்தையும், அதிலிருந்து புதிதாக மேலும் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தூண்டும்.

* ஒரு பாடத்தை ஆசிரியர் நடத்தும் முன்பே, வாசித்துப் பாருங்கள், சில பகுதி புரியும்; சில பகுதிகள் புரியாது. புரியாதவற்றை குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, நீங்கள் புரிந்து கொண்டது சரிதானா என சோதித்துப் பாருங்கள். புரியாதவற்றை ஆசிரியர் நடத்தும் போது அறிந்து கொள்ளுங்கள். ஒரு பாடம் நடத்துவதற்கு முன், அந்த பாடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கு பதில், சில பகுதிகள் தெரிந்து பாடத்தை கவனிக்கும் போது, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். கேள்வி கேட்கவும் தோன்றும்.

* ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு விதமான படிக்கும் முறை இருக்கும். சிலர் நடந்துகொண்டே படிப்பர். சிலர் சப்தமாகவும், சிலர் மனதுக்குள்ளேயும், சிலர் அதிகாலையிலும், சிலர் இரவிலும், சிலர் குழுக்களாகவும் படிப்பர். எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து படியுங்கள்.

* படித்தவற்றை எழுதிப் பாருங்கள். 10 முறை படிப்பது, ஒருமுறை எழுதிப்பார்ப்பதற்கு சமம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதை விட, சிறிது நேரம் விளையாடுவது, சாப்பிடுவது, இசை கேட்பது என செய்து விட்டு மீண்டும் படித்தால், புத்துணர்ச்சியோடு படிக்கலாம்.

* நம்மால் முடியாது, நமக்கு படிப்பு வராது, குறைந்த மதிப்பெண்களே எடுக்க முடியும், என எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்பதற்கு தயங்கக் கூடாது. நன்றாக படிக்கும் மாணவர்களிடமும் சந்தேகத்தை கேளுங்கள். ஒரு பாடம் புரியவில்லை என்றால், விட்டுவிட்டு அடுத்த பாடத்துக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள், எளிதாக புரியும்.

* டிக்ஷனரி பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது வார்த்தை புரியாமல் இருந்தால், விட்டுவிடாமல் அதில் பார்த்துக் தெரிந்து கொள்ளலாம். தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கல்வி ஆண்டின் தொடக்க நாளில் இருந்து படித்தால், ஆண்டின் இறுதியில் கண்டிப்பாக வெற்றிக்கோட்டை எட்டலாம்.
01.04.2013 க்கு முன்னர் நிதியுதவி பள்ளியில் பணிபுரிந்து, பணி இடைமுறிவு இன்றி தற்போது அரசு பள்ளியில் பணியில் சேர்ந்து இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடரலாம்.
திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்




அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல் சார்பான விளக்கம்

          "ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.
 
        NET, SLET, TNTET, TNPSC தேர்வுகள், TRB தேர்வு, துறைத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுத அலுவலகத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும்.

         உயர்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள நியமன அதிகாரியிடம் அனுமதியும் தடையின்மைச் சான்றும் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேறு பணிக்காகத் தெரிவு செய்யப்படும் நேர்வில், தற்போதுள்ள பணியிலிருந்து விடுவிப்புப் பெறவும் முந்தைய பணிக்காலத்தைப் புதிய பணிக்காலத்துடன் சேர்த்துக் கொள்ளவும் சிக்கல் ஏற்படாமல் சுலபமாக அமையும்.

தொடக்கக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.
நியமன அலுவலர்- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
துறைத் தலைவர்- இயக்குநர்.

பள்ளிக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- தலைமையாசிரியர்.
நியமன அலுவலர்- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
துறைத் தலைவர்- இயக்குநர்.

குறிப்பு:
        ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு நியமனம் மூலம் செல்கையில் முந்தைய பணிக்காலம் மட்டுமே இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றின் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். முந்தைய சம்பளம் எந்த விதத்திலும் கருதப்படமாட்டா. அதாவது புதிய பணியில் நுழைவுநிலை ஊதியம் மட்டுமே வழங்கப்படும். ஊக்க ஊதிய உயர்வுக்குத் தகுதி இருப்பின் பெறலாம். ஒத்த பணியெனில் தேர்வுநிலை, சிறப்புநிலைக்குத் தகுதியுள்ள முந்தைய பணிக்காலம் எடுத்துக் கொள்ளப்படும். பழைய பணியிலிருந்து விடுவிப்பானவுடன் மீள்உரிமை துண்டிக்கப்படும். அதாவது ஒருவேளை புதிய பணியைத் தொடர்ச்சியாகச் செய்ய இயலாத நேர்வில் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பழைய பணிக்கு வந்து சேர எவ்வித வாய்ப்பும் வழங்கப்படாது. மீண்டும் போட்டித் தேர்வில் தேர்ச்சி அல்லது வேலைவாய்ப்பகப் பதிவு சீனியாரிட்டிப்படி தான் நியமனம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்

        "பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

        தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.

         ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி அளிக்க, ஏழு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

         அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அடுத்த மாத துவக்கம் வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என தெரிகிறது. "முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்த உடன், ஆங்கில பயிற்சி வகுப்பு துவங்கப்படும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

            இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
          இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்  என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். 
 
                ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய (24.06.2013) தலைமையாசிரியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்:
ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

          நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு


ஐ சி டி தேசிய விருதுகள் கருத்துருக்கள் பரிந்துரை செய்யும் பொது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் குறித்து உத்தரவு 
பள்ளிப் பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் - நாளிதழ் செய்தி
             பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
             தமிழகம் முழுவதும், பள்ளிகள் இயக்கப்படும், 9:30 மணிக்கு, அரசு, தனியார் அலுவலகங்களும் செயல்படத் துவங்குகின்றன. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களைத் தவிர, அரசு பேருந்துகளில், சொந்த வாகனங்களில் செல்லும் மாணவர்கள், இதனால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலைகள் போதுமான அளவு இல்லாத நிலையில், வாகன பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதில் மாணவர்கள் சிக்கி, உரிய நேரத்தில் பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், "ஷிப்ட்" அடிப்படையில் பள்ளிகளை இயக்கலாமா? என்ற, ஆலோசனையும் இருந்தது. சில தனியார் பள்ளிகள், இம்முறையை பின்பற்றியும் வருகின்றன.

               இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன், பஸ் நேரத்திற்கு வராததால், பால் வேனில் சென்ற மாணவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவற்றை கருத்தில் கொண்டு, பள்ளி நேரத்தை மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. இதன்படி, இன்று முதல், காலை, 9:30 மணிக்கு பதில், 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும் என்றும், மாலை, 4:30 மணிக்கு பதில், 4:15 மணிக்கு முடியும் என்றும், 2013-14ம் கல்வியாண்டிற்கான நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், "பள்ளி நேரத்தில் மாற்றமில்லை" என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

             இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு, போதிய உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நீதி போதனை, உடல்நலம், வாழ்க்கை, சுற்றுச்சூழல் கல்விகள், முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள், இன்றைய காலகட்டத்தில், மாணவ, மாணவியருக்கு அவசியம். மேலும், பள்ளி செயல்பாடுகள், மாணவர்களுக்கு முழுமையான கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழக அரசு, கடந்தாண்டு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில், காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்பட வேண்டிய முறை, தியானம், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா, நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மதிய இடைவேளைக்குப் பின், வாய்ப்பாடு சொல்லுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதை கேட்டு எழுதுதல் மற்றும் வெள்ளிக்கிழமை, இறுதி வகுப்பில், மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

            இதனை செயல்படுத்த, பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கூறியதன் பேரில், அவர்களை கொண்டு ஒரு குழு அமைத்து, பாடவேளைகள் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்காக மாதிரி பாட கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டது.இதேபோல், பாடவேளை நேரங்களை, பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்கு உட்பட்டு, மாற்றி அமைத்துக் கொள்ள, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

           பாட கால அட்டவணையில் மட்டுமே, மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே, பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறானது. பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக, தற்போது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பள்ளி துவங்கும், முடியும் நேரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால், நாள்காட்டி தகவலும், இந்த அறிவிப்பும் மாணவர்களை குழப்பமடைய செய்யும் வகையில் உள்ளன.
ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம் - நாளிதழ் செய்தி
           தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
 
              அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராம மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில், ஆங்கில வழிக் கல்வியை அரசு செயல்படுத்தியது. இந்தாண்டு, மதுரை மாவட்டத்தில் 194 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், 178 தொடக்க பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் தலா 40 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.

             தற்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மீடிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை. ஜூன் 10ல் வகுப்புகள் துவங்கிய நிலையில், ஆங்கில வழிக் கல்வி நடத்தும் ஆசிரியர்கள் விவரம், பாட அட்டவணை குறித்தும் பள்ளிகளில் இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்று, பெற்றோர் கூறுகின்றனர்.

           ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஆங்கில வழிக் கல்வி வகுப்பில், ஒவ்வொரு பள்ளியிலும் 40 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், ஆங்கில வழிக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கவில்லை. கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், "புத்தகங்கள் விரைவில் வந்துவிடும். அதுவரை ஆங்கில அடிப்படையை கற்றுக்கொடுங்கள்" என்கின்றனர். இதனால், தமிழ் வழிக் கல்வி புத்தகங்களை வைத்துத்தான் பாடம் நடத்துகிறோம், என்றனர்.

           மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி கூறுகையில், "தாமதமாக ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் தான் இப்பிரச்னை உள்ளது. உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் சென்று ஆசிரியர்கள் வாங்காமல் உள்ளனர். ஒரு வாரத்திற்குள் அனைத்து புத்தகங்களும் வழங்கப்படும்" என்றார்.


  

Monday, June 24, 2013

பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை, பாடவேளைகளில் மட்டுமே மாற்றம் - இயக்குனர் தகவல்
      பள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

பள்ளிக்கூட நேரத்தில் மாற்றம்

         தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
 
         இதை மறுத்துள்ள பள்ளி கல்வித்துறை வகுப்புகள் நேர கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

யோகா, நீதிபோதனை

         பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி, யோகா ஆகியவை வழங்கப்படவேண்டும் என்றும் நீதிபோதனை, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, வாழ்க்கை கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி, தற்காப்பு விதிகள் முதலியவை இன்றைய காலக்கட்டத்தில் மாணவ–மாணவிகளுக்கு தேவைப்படுகின்றன. பாடம் கற்பிப்பதுடன் இந்த பயிற்சிகளையும் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை எண் 264ஐ வெளியிட்டது. அந்த ஆணையில் காலை வழிபாட்டு கூட்டம் நடத்தப்படவேண்டிய முறை, தியானம், எளிய உடற்பயிற்சி, யோகா, நீதிபோதனை உள்ளிட்ட வகுப்புகள் மற்றும் மதிய இடைவேளைக்கு பின்னர் வாய்ப்பாடு சொல்லுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதை கேட்டு எழுதுதல், வெள்ளிக்கிழமை இறுதி வகுப்பில் மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

         இதை செயல்படுத்துவதற்காக பாடவேளைகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக ஒரு குழு அமைத்து பாடவேளை மாற்றி அமைக்கப்பட்டது. அதற்காக மாதிரி பாட கால அட்டவணை தயார் செய்யப்பட்டது. இதுபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்திற்கு உட்பட்டு மாற்றி அமைத்துக்கொள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாடவேளைகளில் மாற்றம்

          பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள் தொடங்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும். இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடவேளை கால அட்டவணை 10–வது மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு பொருந்தாது. அத்துடன் சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் யோகா, உடற்பயிற்சி, நீதிபோதனை வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சில பயனுள்ள இனையத்தளங்கள்!
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிடhttp://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்http://www.tn.gov.in/appforms/cert-income.pd

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டுhttp://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டுhttp://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதிhttp://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதிhttps://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதிhttp://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதிhttp://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதிhttp://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதிhttp://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்யhttp://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதிhttp://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்யhttp://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதிhttp://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதிhttp://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறியhttp://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறியhttp://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதிhttp://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சிhttp://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
2) சிறார்களுக்கு கணினி பயிற்சிhttp://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
3) இ – விளையாட்டுக்கள்http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
G. பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதிhttp://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதிhttp://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்யhttp://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ளhttp://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php
6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதிhttp://www.way2sms.com/
7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்http://www.youtube.com/இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்http://www.justdial.com/
9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.http://www.indiapost.gov.in/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்http://www.filehippo.com/
I. வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்http://www.gocurrency.com/
http://www.xe.com/
H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யhttp://www.tn.gov.in/services/employment.html
J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டைhttp://www.tn.gov.in/appforms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனுhttp://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனுhttp://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdfபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf
K. விவசாய சந்தை சேவைகள் (Online)
1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்http://agmarknet.nic.in/
2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதிhttp://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்http://indg.in/agriculture/major-traders-database/
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/
6) கொள்முதல் விலை நிலவரம்http://www.tnsamb.gov.in/price/login.php
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்http://www.tnsamb.gov.in/mktcom.phpதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்http://59.90.246.98/pricelist/
9) வானிலை செய்திகள்http://services.indg.in/weather-forecast/
L. தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed
3) உயிரிய தொழில்நுட்பம்http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html
5) உயிரி எரிபொருள்http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html
M. வேளாண் செய்திகள்
1) பாரம்பரிய வேளாண்மைhttp://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html
2) வளம்குன்றா வேளாண்மைhttp://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html
3) பண்ணை சார் தொழில்கள்http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html
4) ஊட்டச்சத்துhttp://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html
5) உழவர்களின் கண்டுபிடிப்புhttp://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html
N. திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்http://www.tnrd.gov.in/schemes_states.html
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html
3) வட்டார வளர்ச்சிhttp://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html
4) வங்கி சேவை & கடனுதவிhttp://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm
5) பயிர் காப்பீடுhttp://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html
7) NGOs & SHGshttp://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.htmlஅக்ரி கிளினிக்http://www.agriclinics.net/
9) கிசான் அழைப்பு மையம்http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html
11) கேள்வி பதில்http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html
12) பல்கலைக்கழக வெளியீடுகள்http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html
O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
1) தோட்டக்கலைhttp://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html
2) வேளாண் பொறியியல்http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html
3) விதை சான்றிதழ்http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html
4) அங்கக சான்றிதழ்http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html
5) பட்டுபுழு வளர்புhttp://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html
6) வனவியல்http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html
7) மீன்வளம் மற்றும் கால்நடைhttp://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.htmlதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்http://services.indg.in/weather-forecast/
9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்http://www.tnsamb.gov.in/seedcomp.html
http://www.tnsamb.gov.in/fertilizers.html
10) உரங்களின் விலை விபரம்http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php
P. போக்குவரத்து துறை
1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவுhttp://www.tn.gov.in/appforms/form2.pdf
2) புகார்/கோரிக்கைப் பதிவுhttp://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do
3) வாகன வரி விகிதங்கள்http://www.tn.gov.in/sta/taxtables.html
4) புகார்/கோரிக்கை நிலவரம்http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do
5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவுhttp://tnsta.gov.in/transport/transportTamMain.do
6) தொடக்க வாகன பதிவு எண்http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do