Monday, February 11, 2013

வருமான வரி Income Tax - FY 2012 - 13 & AY 2013-14 பல்வேறு பிடித்தங்கள்/ விலக்குகள்

ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை


SECTION 10(13A)
House rent allowance
       Salary includes dearness pay For the purposes of calculating the house rent allowance that would be exempt under rule 2A, the term ‘salary’ includes ‘dearness pay’ also—Circular : No. 90 [F. No. 275/79/72-ITJ], dated 26-6-1972.
 
     Expenditure must have been actually incurred It is necessary for granting the exemption under section 10(13A) that the employee should have actually incurred the expenditure on rent. For purposes of deduction of tax, therefore, the disbursing officer should ensure that the employee concerned has in fact incurred the expenditure on rent. The payment of rent should be verified through rent receipts in the cases of all employees—Letter : F. No. 12/19/64-IT(A-I), dated 2-1-1967.
click here to download the IT Dept Circular for HRA Receipt exemption for Rs.3000

Living in own house or in any house rent-free House rent allowance paid to a person, who is living in his own house or in a house for which he does not actually pay any rent, is not exempt from tax in any circumstances—Letter : F. No. 12/19/64-IT(A-I), dated 2-1-1967.
Production of rent receipts Only the expenditure actually incurred on payment of rent in respect of residential accommodation occupied by the assessee subject to the limits laid down in rule 2A, qualifies for exemption from income-tax. Thus, house rent allowance granted to an employee who is residing in a house/flat owned by him is not exempt from income-tax. The disbursing authorities should satisfy themselves in this regard by insisting on production of evidence of actual payment of rent before excluding the house rent allowance or any portion thereof from the total income of the employee. Though incurring actual expenditure on payment of rent is a pre-requisite for claiming deduction under section 10(13A), it has been decided as an administrative measure that salaried employees drawing house rent allowance upto Rs. 3,000 per month will be exempted from production of rent receipt. It may, however, be noted that this concession is only for the purpose of tax deduction at source, and, in the regular assessment of the employee, the Assessing Officer will be free to make such enquiry as he deems fit for the purpose of satisfying himself that the employee has incurred actual expenditure on payment of rent - Circular : No. 9/2003, dated 18-11-2003/[Para 5.2-(9)].

தேர்வு எழுதப் போகும் மாணவ/மாணவிகளுக்கு தேவையான சில தகவல்கள்


       படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி? தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உண்டு. இவையாவும் மென்பொருள் வன்பொருள் சம்பந்தப்பட்டவை. நினைவுத் திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள்.
     பொதுவாகவே மாணவர்கள் தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம் படிப்பு என்று ஒருவித போராட்ட சூழ்நிலையில் பதட்டத்தோடு காணப்படுவார்கள்.

அப்போது உண்ணக்கூடாதது :
தேர்வை நினைத்தபடியே இருப்பதால் ஏற்படும் குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. 
எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டியவை :
காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். 
இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.
பதட்டம் குறைய :
தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் கூத்தாடும். இதை குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம். 
அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம் சிறப்பாக செயல்பட உதவும். ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும் திறனை மேம்படுத்தும்.

மேலும் தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே:
தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும். சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம் நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா? மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணங்கள் பொங்கும். இறைவன் மீது நம்பிக்கையுடன் உங்களது ஒரு காலையும், உங்கள் மீது நம்பிக்கையுடன் உங்கள் மறுகாலையும் எடுத்து வைத்து உற்சாகத்தோடு தேர்வு அறைக்கு கம்பீரமாக செல்லுங்கள். எது வந்தாலும் வரட்டும் எதிர் கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 
சிலருக்கு விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…
#இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.
#மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.
#கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.
#இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.
#ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.

#பொதுவாக காலையில் மனம், தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.இந்த நேரம் நுரைஈரலுக்கான நேரம் என்பதால் படிப்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
#ஒரு கேள்விக்கானப் பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.
#முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.
#தேர்வு நடக்கும் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக போய் விட வேண்டும்.
#அங்கு அநாவசியமாக அரட்டை அடிக்காமல் அமைதி காக்க வேண்டும்.
#ஹலுக்குள் நுழையும் முன்பு கொஞ்சம் நீர் அருந்து கொள்ளுங்கள்.
இனி எல்லாம் ஜெயமே…!!
 By டாக்டர்.செந்தில் வசந்த்!

CPS calculation Excel Sheet


பாலியல் தொழிலாளர்களுக்கான இக்னோவின் கல்வித்திட்டம்

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ), பாலியல் தொழிலாளர்‌கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வித் தி்ட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர் சுஜிஸ் கே கோஷ் கூறியதாவது, சமுதாயத்தில், இத்தரப்பு மக்கள் கல்வி சேவை பெறுவதில் பெருந்தடை உள்ளது. இதன்காரணமாக, இவர்கள் சமுதாயத்தில் மேம்பட்ட இல‌க்கை அடைய முடியாமல் உள்ளனர்.

இவர்களை மேம்படுத்தும் பொருட்டு, இந்த கல்விமுறையை, வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
வெளிநாட்டில் படிப்பு - யோசிக்க வேண்டியவை

வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

ஆனால், அவற்றிலுள்ள சாதக-பாதகங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டிற்கு உயர்கல்வி மேற்கொள்ள செல்லும் முன்பாக, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இது மாணவர் தொடர்பானது மட்டுமல்ல, பெற்றோர் தொடர்பானதும்தான்.

நிதி தொடர்பானவை
வெளிநாட்டுப் படிப்பில், அதுவும் குறிப்பாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்க செல்கையில், அதிகம் செலவாகும். ஆசைக்காக கால்வைத்து விட்டு, பின்னர் சமாளிக்க முடியாமல் திண்டாடுவது கூடாது. தகுதி அடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சிலரால் மட்டுமே அதைப்பெற முடியும்.

மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் நாட்டிற்கும், நம் நாட்டிற்குமுள்ள பண மதிப்பு வேறுபாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சில நாடுகளில் வாழ்க்கைச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், சில நாடுகளிலோ, மிக அதிகமாக இருக்கும். அனைவருக்குமே, பல்கலை விடுதிகளில் இடம் கிடைத்துவிடாது. அதற்கேற்ப, மாணவர்களும், பெற்றோர்களும் தெளிவாக திட்டமிட வேண்டும்.

நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டிற்கு சென்று வருவதற்கான விமானப் பயண கட்டணம், பல்கலை அல்லது கல்லூரி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மற்றும் பராமரிப்பு செலவு ஆகிய அனைத்தைப் பற்றியும் தெளிவான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு
கடந்த ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு தொடர்ச்சியாக ஆளானது, வெளிநாட்டுக் கல்வியின் பாதுகாப்பு குறித்த பல்வேறான கேள்விகளை இந்தியாவில் எழுப்பியது. மேலும், இங்கிலாந்தில், சில இந்திய மாணவர்களின் மரணச் செய்திகளும் அடிபட்டன. இதனால், வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க, தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் பீதி அதிகரிக்கத் தொடங்கியது.

பல பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் நாடுகளுக்கே, தங்களின் பிள்ளைகளை அனுப்ப விரும்புகின்றனர். இதுவும் ஒரு பாதுகாப்புக் காரணமே. பாதுகாப்பு விஷயத்தில், மாணவர்களைவிட, பெற்றோர்களுக்கே அதிக கவலை. குறிப்பிட்ட நாட்டில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி தங்களால் இயன்றவு விசாரித்து, அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதேசமயத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கல்வியை தடைசெய்ய, பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பழகிக் கொள்ளுதல்
ஒரு புதிய நாட்டின், பழக்கமில்லா கலாச்சார சூழலுக்கு, ஒரு மாணவர் பழகிக்கொள்வது இந்த வகையில் சேரும். அந்நாட்டின் காலநிலை, வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடனிருப்பவர்களுடன் சரியான உறவாடலை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை முக்கியமானவை.

ஏனெனில், சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சிலருக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். சிலருக்கு, நீண்டதூரம் பெற்றோரைவிட்டு, உறவினர்களைவிட்டு பிரிந்து வந்தது தாங்க முடியாததாய் இருக்கலாம். குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே இருந்தவர்கள், தனித்து வாழ கஷ்டப்படலாம்.

வெளிநாட்டிற்கு சென்று படித்தல் என்ற நிலை வரும்போதே, இந்த அம்சங்கள் அனைத்தையும், பெற்றோரும், மாணவர்களும் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துவிடலாம் என்ற மனோதைரியத்தை உருவாக்கிய பின்னர், உங்களின் ஏற்பாடுகளை தொடங்கலாம்.
உங்களின் அனுபவம் இனிதாகும்! அறிவு வளமாகும்!
+2 & 10th Standard Science Practical Exam Forms
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலை தேர்வு


         தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலைத்தேர்வு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு 33 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையாளர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 
         இந்த முதல் நிலைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை விண் ணப்பதாரர்கள்www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc.exams.netஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் எம்.விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

குரூப்-1 தேர்வு முறை மாற்றம் செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

          "குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

          கடந்த ஆண்டு, டிசம்பரில், குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அருண்குமார் என்பவர், தாக்கல் செய்த மனு:
முதல்நிலை தேர்வில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், நடுவில், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

               எழுத்துத் தேர்வில் தகுதி பெற, முதல்நிலை தேர்வு முக்கியம். இதில், தனித் திறன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பாதகம் ஏற்படலாம்; எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

             மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், தரத்தை உயர்த்தவும், திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

           தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், சேர்க்கை தகுதியில் மாற்றம் கொண்டு வருவது, மாநில அரசு வசம் இல்லை. மனுதாரர், இனி மேல் தான், முதல்நிலை தேர்வில் கலந்து கொள்ளப் போகிறார்.

          பொது அறிவு கேள்விகள் தவிர, ஒரு பதவியை வகிக்க, தனிச் சிறப்பு உள்ளதா என்பதை சோதிக்கும் வகையிலான தேர்வும் நடத்தப்படுகிறது. தனிச் சிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு, தனியாக மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தியதை, மனுதாரர் எப்படி எதிர்க்க முடியும் என, தெரியவில்லை.
         
           எந்த ஒரு பணியிலும், ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு, சரியான நடவடிக்கை, திறன் இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு தேவையான தகுதி இல்லாமல், அதில் அவரால் பணியாற்ற இயலாது.

               ஒரு பணியில் நியமிக்க, ஒருவரின் திறமையை சோதிப்பது அவசியம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குரூப்-1 பணியிடம் என்பது, மாநில அரசுப் பணியில், உயர் பதவிகளை கொண்டது. எனவே, இந்தப் பணிகளில் நுழைவதற்கு, ஒருவரின் திறமையை சோதிப்பது என்பது, அரசு மற்றும் டி.என்.பி. எஸ்.சி.,யைப் பொறுத்தது. இதில், தலையிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

 இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

அரிய விஞ்ஞானி ஆல்வா எடிசனின் பிறந்த நாள்!

         இன்றைய உலகம் சூரியன் மறைந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார்.

       இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிரால், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கன÷ கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.

அறிவியல் ஆர்வம்
           ஏழாவது குழந்தையாக பிறந்தவர் எடிசன். பள்ளி பருவத்திலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்க செல்வதை நிறுத்தினார். இவரது தாயார் ஆசியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம் அறிவியலில் கொண்ட ஆர்வம். டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்றார். அப்போதெல்லாம், தந்திப்பதவு (டெலிகிராப்) மூலம் ரயில் போக்குவரத்து நடந்தது.புள்ளிக் கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஆப்பரேட்டர் வேலையில் சேர்ந்தார். 1871ல் திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.

முதல் கண்டுபிடிப்பு
           டெலிகிராப் ஆப்பரேட்டர் வேலையில் இருந்து விலகில நியூயார்க் சென்றார். அங்கு, &'போனோகிராப்&' எனும் ரிகார்டிங் கருவி, ஒலிநாடா, மின் டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் தொழில் அதிபராக உயர்ந்தார்.

சரித்திர கண்டுபிடிப்பு
           அக்காலத்தில் வாயு விளக்குகள் தான் பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவு. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக,&'எடிசன் மின்விக்கு கம்பெனி&'தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூட்த்தில் சேர்ந்தார். இவர்கள் 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை கண்டுபிடித்தனர். பின் எலக்ட்ரிக் மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட கண்டு பிடிப்புகளø உருவாக்கினார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டு பிடிப்புகளை உருவாகினீர்கள் என்று கேட்ட போது, படைப்புக்கு தேவை &'ஒரு சதவீதம் ஊக்கமும் 99 சதவீதம் கடின உழைப்பும் தான்&' என்றார்.
இறுதி மரியாதை
          எடிசன், 1931 அக் 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்திரவிட்டார். இவரது கண்டுபிடிப்புகளை போற்றுவோம்.
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுகள் - வெற்றிகொள்ளும் முறைகள்


           இந்தியாவெங்கும் உள்ள கல்லூரிகளில் சட்டப் படிப்பில் சேர, கிளாட், எல்சாட், செட், ஐபியு-சிஇடி மற்றும் என்எல்யு போன்ற பல்வேறுவிதமான நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இவ்வகையான தேர்வுகளை எளிதில் வெற்றிகொள்ள, குறிப்பாக, 5 பாடங்கள் அல்லது தேர்வு பகுதிகளை சிறப்பாக படிக்க வேண்டியுள்ளது.

         ஆனால், எல்சாட்-இந்தியா தேர்வு மட்டும் இவற்றிலிருந்து வேறுபட்டது. சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில் வெற்றிகொள்வதற்கு தேவைப்படும் அம்சங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 ஆங்கிலப் புலமை
         சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில், ஆங்கிலப் புலமை முக்கியமான பங்கை வகிக்கிறது. ஆங்கில மொழியின் கீழ்கண்ட மூன்று அம்சங்களில் ஒருவர் தனது அறிவை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அவை,
வார்த்தை வளம்(Vocabulary)
 இலக்கணம் மற்றும் சொற்றொடர் திருத்தம்(Grammar & Sentence correction)
வாசித்து புரிந்துகொள்ளல்(Reading comprehension)

 வார்த்தை வள மேம்பாடு
             உங்களின் பாடப்புத்தகம், செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறுவிதமான தினசரி அம்சங்களின் மூலமாக, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி, உங்களின் Vocabulary திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று, சில பயனுள்ள பயிற்சி புத்தகங்களைப் பயன்படுத்தி, இலக்கணம் மற்றும் சொற்றொடர் திருத்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரென் மற்றும் மார்ட்டின் ஆகியோர் எழுதிய High school English Grammar and Composition என்ற புத்தகம், ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, ஒரு பயனுள்ள புத்தகமாகும்.
             புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள, அதிகளவு படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில மீடியம் படிக்காத மாணவர்கள், தங்களின் ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள, தினமும் சில மணிநேரங்கள் தவறாமல், ஆங்கில மொழிப் பயிற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கிளாட் தேர்வில் ஆங்கில கேள்விகள்
         கிளாட் தேர்வைப் பொறுத்தவரை, ஆங்கிலப் பாடம் தொடர்பான கேள்விகள் பின்வரும் முறைகளில் கேட்கப்படும். அவை,
English Comprehension
Fill up the blanks
Spelling Test
Vocabulary - synonyms, antonyms including Latin, French and legal terms
Phrasal verbs, idioms and phrases
Para jumbles
Sentence correction tests

பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகள்
                  சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில், பொது அறிவு என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். எனவே, தினமும் தவறாமல், நல்ல செய்தித்தாளை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 6 Past issues -ஐ படிப்பது சிறந்தது. ஒரு ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை படித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையானவற்றை குறிப்பெடுத்துக் கொள்வதும் அவசியமானது.

முக்கியமான தலைப்புகள்
            சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம், நிதி தொடர்பான விஷயங்கள், ஐ.நா அமைப்பு மற்றும் அது தொடர்பான ஏஜென்சிகளின் செயலபாடுகள், உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் போன்ற அமைப்புகள் ஆகிய முக்கிய சர்வதேச அம்சங்கள் குறித்து, தேர்வுக்கு தயாராவோர் கவனம் செலுத்த வேண்டும். இணையதளங்களில், பொதுஅறிவு போர்டல் சென்று, கடைசி ஆறுமாத விஷயங்களை நன்கு படித்துக் கொள்ளவும். மலையாள மனோரமா போன்ற புத்தகங்களும் பயன்தரும்.

லாஜிக்கல் ரீசனிங்
              ஒரு மாணவரின் தர்க்க திறமை மற்றும் அறிவை சோதிக்க, இந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது. பல்வேறு வகையான லாஜிக்கல் ரீசனிங் கேள்விகள் இப்பகுதியில் கேட்கப்பட்டிருக்கும். பொதுவாக, சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுகளில், வீசுவல் மற்றும் non - verbal reasoning போன்றவை சோதிக்கப்படுவதில்லை.

நேர மேலாண்மை முக்கியம்
             தேர்வெழுதுகையில், நேரத்தை மிகச் சரியாக கடைபிடிப்பது மிக மிக அவசியம். தேவையின்றி, எந்த கேள்விக்கும் அதிக நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது. இத்தகைய நேர மேலாண்மையை சரியாக கடைபிடிக்க வேண்டுமெனில், தொடர்ச்சியான பயிற்சியே அதற்கு தீர்வாகும்.

Legal aptitude/Legal awareness
          லீகர் ரீசனிங் கேள்விகளில் ஒருவர் நிபுணத்துவம் பெற வேண்டுமெனில், குற்றச் செயல்கள், ஒப்பந்தங்கள், சட்டவிரோத செயல்கள், குடும்பச் சட்டம் மற்றும் பொது விதிமுறைகள் குறித்த அனைத்து விஷயங்களையும் நன்கு படித்து, ஆராய வேண்டும். இதற்கு தேவையான, பொருத்தமான புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

சட்ட செய்திகளைக் கேட்டல்
         சட்டம், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்த தகவல்கள், சட்ட பொது அறிவுக் கேள்வியில் மிக முக்கியமானவை. எனவே, அவை தொடர்பான செய்திகளை எப்போதும் கவனமாக கேட்டு, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் நிகழும் சட்டம் தொடர்பான நிகழ்வுகள், புகழ்பெற்ற நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவைகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

           நாட்டின் முக்கிய செய்தித்தாள்களில், சட்டம் தொடர்பான நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறும். அவற்றை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கணிதம்
             பள்ளிப் பாடத்தில், 10ம் வகுப்பு வரை உள்ள கணிதத்தில், ஒருவரின் அறிவு சோதிக்கப்படும். இலாபம், நட்டம், விகிதாச்சாரம், அளவு, வித்தியாசம், எளிய மதிப்பீடு, சராசரிகள், நேரம் மற்றும் பணி, நேரம் மற்றும் தூரம் போன்ற அம்சங்களைத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தயாராக, ஆர்.எஸ்.அகர்வால் ஆப்ஜெக்டிவ் மேதமேடிக்ஸ் புத்தகம் போன்ற ஒரு புத்தகத்தை படிப்பது சிறந்தது. பள்ளி கணிதப் புத்தகங்களை படிப்பது மிகவும் முக்கியம். அதேசமயம், டெல்லி பல்கலை நடத்தும் 3 வருட எல்.எல்.பி. தேர்வில் கணிதக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

 டெல்லி பல்கலையின் LLB நுழைவுத்தேர்வு
           இத்தேர்வில், பொதுஅறிவு, ஆங்கிலம் மற்றும் சட்டத் திறன் ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. சில சமயங்களில், லாஜிகல் மற்றும் அனலிடிகல் ரீசனிங் கேள்விகள் அதிகளவில் கேட்கப்படும். ஆனால், எப்போதும் அவ்வாறு கேட்கப்படுவதில்லை.

            முந்தைய ஆண்டுகளில் கேள்வித்தாள்களைப் படிப்பதும் அதிக நன்மை பயக்கும். மொத்தம் 175 கேள்விகளில், 100 கேள்விகளுக்கும் மேலாக, சமீபத்திய ஆண்டுகளின் கேள்வித்தாள்களில் கேட்கப்பட்ட பொதுஅறிவு/நடப்பு நிகழ்வுகள் ஆகியவை கேட்கப்படும்.
         டெல்லி பல்கலை நடத்தும் தேர்வில், சட்ட திறனாய்வு கேள்விகள், பெரும்பாலும், சட்டப் பொதுஅறிவு அல்லது சட்ட விழிப்புணர்வு போன்ற பகுதிகளிலிருந்தும், சில கேள்விகள் லீகல் ரீசனிங் ஆகிய பகுதியிலிருந்தும் கேட்கப்படும்.

எல்சாட் தேர்வு
               இது சட்டப்பள்ளி நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. ஜிண்டால் குளோபல் சட்டக் கல்வி நிறுவனம் மற்றும் ஐஐடி-காரக்பூர் போன்றவை இத்தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் முக்கிய கல்வி நிறுவனங்களில் சில. www.pearsonvueindia.com/Isatindia என்ற வலைதளம் சென்று மாணவர்கள், தங்களுக்கு தேவையான விபரங்களை அறியலாம். மேலும், அதிகாரப்பூர்வ எல்சாட் இந்தியா கையேட்டையும் வாங்கி பயன்பெறலாம். இத்தேர்வைப் பொறுத்தவரை, பொதுஅறிவு, இலக்கணம், லீகல் ரீசனிங், கணிதம் போன்ற அம்சங்கள் கிடையாது.
 கிளாட் தேர்வில் நெகடிவ் மதிப்பெண்
              2013ம் ஆண்டில் கிளாட் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும். இத்தேர்வில் 200 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். English comprehension, பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், ஆரம்ப பள்ளி கணிதம், லீகல் திறனாய்வு மற்றும் லாஜிகல் ரீசனிங் போன்ற பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

Thursday, February 7, 2013

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு

          பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
         தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற, அனைத்து அரசு பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
        படிப்பில் திறமையான மாணவர்கள், நடுத்தர மாணவர்கள் என பிரித்து, காலை-மாலை என தினமும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனால் மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தலாம் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவை அனுப்பியுள்ளது.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார். 
அரசு தொடக்க பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

           அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

        தமிழகத்தில், ஆங்கில மோகம் காரணமாக குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில், பல்வேறு சலுகை வழங்கப்பட்டாலும், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உயர்கிறது.

        அரசு பள்ளிகளில், துவக்க நிலையில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளி கல்வி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பல பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்குள் மட்டும் படிக்கின்றனர். இதனால், அரசு கொண்டு வரும் திட்டங்களும், முயற்சிகளும் வீணாகி வருகின்றன.

         இதே நிலை நீடித்தால், ஓரிரு ஆண்டுகளில் பல அரசு பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்த்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

         முதல்கட்டமாக, தமிழ் வழி, ஆங்கில வழி கல்விக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக, பள்ளி வாரியாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

          அடுத்த கல்வியாண்டில், பள்ளி திறப்பதற்கு முன் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி முழுவீச்சில் வழங்கப்படவுள்ளது. இதில், தனியார் பள்ளிகளை போன்று, விளையாட்டு முறையுடனும், எளிமையான முறையிலும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

         இதற்கு தேவைப்படும் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் விபரம் ஆகியவை தயாரிக்கும் பணி நடக்கிறது. அதுபோல், பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

           இதற்கான, முதல்கட்ட பயிற்சி முகாம் இரு நாட்களுக்கு முன் துவங்கியது. தேர்வு நேரம் நெருங்குவதால், இப்பயிற்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்., மாத இறுதியில் மீண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

             பள்ளி திறக்கப்படும் போது, மாணவர்களை கொண்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தவும், பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு உறுப்பினர்களை கொண்டு வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இதன்மூலம், வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் காத்துள்ளனர்.

சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு


        தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

     விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த, பெரிய,கொள்ளியூரைச் சேர்ந்த ஜெயகுமார் மகள் பிரேமா. பி.காம்., முடித்த இவர், இந்தாண்டு, சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தார்.

        தேர்வில் சாதனை படைத்து, பெரியகொள்ளியூருக்கு பெருமை சேர்த்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரேமாவை பாராட்டி, பெரிய கொள்ளியூர் பொதுமக்கள் சார்பில், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு, அத்தியூர், கொள்ளியூர் ஆகிய இடங்களில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் திறன் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

          "நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

      கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், பொன் விழா கொண்டாட்ட விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:பள்ளி படிப்பை, பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி படிப்பை, பாதியில் கைவிடுவோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது. இது, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.

         நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே, நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை, அரசு உணர்ந்துள்ளது. ஐ.மு., கூட்டணி அரசு, பதவிக்கு வந்ததிலிருந்து, கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இத் துறையில், அதிகமான முதலீடு செய்யப்படுகிறது.

           சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.
 
             கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை அளிப்பதில், கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில், தங்களுக்கு அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.