Tuesday, July 9, 2013

NEWS

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய உத்தரவால், தொலை நிலைக் கல்வியில், எம்.பில்., படித்தவர்களின் உதவி பேராசிரியர்கள் கனவு தற்போது கேள்விக்குறி
              தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணில், தொலைநிலை கல்வி எம்.பில்., படிப்பிற்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என, புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.
 
        கலை மற்றும் அறிவியல் கல்லாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு 28.5.2013ல் வெளியானது. இதில், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணாக, பி.எச்டி., படித்திருந்தால் 9 மதிப்பெண், முதுகலை எம்.பில்., உடன் சிலட்/நெட் முடித்திருந்தால் 6 மதிப்பெண் என்றும், முதுகலை பட்டத்துடன் சிலட்/நெட் முடித்தால் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில், எம்.பில்., படிப்பு தொலை நிலைக் கல்வியில்படித்திருந்தால் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

             உயர் கல்வித் துறைற உத்தரவில், தொலைநிலை கல்வியில் எம்.பில்., படிப்பு 2007-2008 முதல் நடத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், டி.ஆர்.பி., அறிவிப்பில், 2006-2007 ஆண்டு வரை தொலை நிலைக் கல்வி எம்.பில்., படிப்பை செல்லாது என்ற உத்தரவால், அந்த ஆண்டுகளில் (2006-2007) படித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளின் பேராசிரியர்கள் கனவு கேள்விக்குறியாகி உள்ளது என, புதிய சர்ச்சை எழுந்துள்ளது.மதுரையை சேர்ந்த சுயநிதி கல்லூரி உதவிபேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில், 2008ல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களில், முதுகலை பட்டத்துடன், தொலை நிலை கல்வியில் எம்.பில்., படித்தவர்களாக பலர் உள்ளனர். ஆனால், தற்போது "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணுக்கு, தொலைநிலை எம்.பில்., படிப்பை டி.ஆர்.பி., எடுத்துக்கொள்ளாதது எந்தவிதத்தில் நியாயம், என்றனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் போட்டி; இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு

          முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 ஆசிரியர்கள் போட்டி போடுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
 
இணையதளத்தில் ஹால் டிக்கெட்

           அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பி.எட். பட்டம் பெற்ற முதுகலை பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தார்கள். தமிழ் பாடத்தில் 600–க்கும் மேற்பட்ட காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழ் முதுகலை பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்தனர்.

         இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டால் இணையதளத்திலேயே ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

1.67 லட்சம் பேர் போட்டி
         முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 பேர் மோதுகிறார்கள். காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் தமிழ் பாடத்தில்தான் போட்டி பலமாக இருக்கிறது. தமிழ் பாடத்தில் மட்டும் 33,237 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்ச எண்ணிக்கையாக அரசியல் அறிவியல் பாடத்தில் வெறும் 30 பேர் மட்டுமே விண்ணப்பம் போட்டுள்ளார்கள். இதர பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம் வருமாறு:–

ஆங்கிலம் – 14,080

கணிதம் – 22,497

இயற்பியல் – 12,469

வேதியியல் – 12,247

தாவரவியல் – 8,150

விலங்கியல் – 10,991

வரலாறு – 18,380

புவியியல் – 1,481

பொருளாதாரம் – 9,501

வணிகவியல் – 18,330

மனையியல் – 113

உடற்கல்வி இயக்குனர் – 3203

நுண்ணுயிரியல் – 1,544

உயிரி–வேதியியல் – 1,348

தெலுங்கு – 56

எழுத்துத்தேர்வு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது...

9th & 10th Handling Teacher's RMSA Training - Time Table

பணியிடைப் பயிற்சி

          அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நான்கு நாட்கள் பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013 வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது.  தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
    பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை


Date
Day
Subject
10.07.2013
Wednesday
Maths
11.07.2013
Thursday
12.07.2013
Friday
Tamil
13.07.2013
Saturday
15.07.2013
Monday
English
16.07.2013
Tuesday
17.07.2013
Wednesday
Social Science
18.07.2013
Thursday
19.07.2013
Friday
Science
20.07.2013
Saturday
22.07.2013
Monday
Maths
23.07.2013
Tuesday
24.07.2013
Wednesday
Tamil
25.07.2013
Thursday
26.07.2013
Friday
English
27.07.2013
Saturday
29.07.2013
Monday
Social Science
30.07.2013
Tuesday

1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அகஇ சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட தொடக்கக் கல்வி உத்தரவு
32, 000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர் பணி இடங்கள் வழங்க, 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் சார்பில் 92 பேர், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க உத்தரவிட்டது.
அத்துடன் வழக்கு தொடர்ந்த 92 பேருக்கும் பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


இதைத் தவிர 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களும், 782 சிறப்பாசிரியர்களும், 232 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் 32 பேரும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 30 பேரும், விவசாயத்துறை பயிற்றுநர்கள் 25 பேரும், அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு முதல் நியமனமாக இசை, ஓவியம், தையற்கலை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்துள்ளது.

முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்குரிய பட்டியல் கிடைத்ததும் இந்த நியமனப் பணிகள் தொடங்கிவிடும். அடுத்த 45 நாள்களுக்குள் இந்த பணி நியமனத்தை முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அடுத்ததாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் பேருக்கும் ஹால் டிக்கெட் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 422 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்குப் பிறகு ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடவும், அதற்கடுத்த 2 மாதங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் தாள் தேர்வு எழுத 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 466 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

செப்டம்பரில் தேர்வு முடிவு: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். அதன்பிறகு, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் பட்டதாரி ஆசிரியர்களும், மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 12,295 பட்டதாரி ஆசிரியர்கள், 817 இடைநிலை ஆசிரியர்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் அறிவிப்பு: விவசாயப் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள், அரசுச் சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் நியமனத்துக்கான விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு இந்த நியமனத்துக்கான பணிகள் தொடங்கும். பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்
விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன
ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹால் டிக்கெட்
ஆகஸ்ட் 17,18-ல் தேர்வு

செப்டம்பரில் தேர்வு முடிவு
817 இடைநிலை ஆசிரியர் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்

2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ஹால் டிக்கெட் பதிவேற்றம்
ஜூலை 21-ல் தேர்வு
ஆகஸ்ட்டில் தேர்வு முடிவு
செப்டம்பர் அல்லது அக்டோபரில் பணி நியமனம்

12,295 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்

782 சிறப்பாசிரியர்கள் நியமனம்
பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டுள்ளது
ஆகஸ்ட்டில் பணி நியமனம்

1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன
நேர்முகத் தேர்வு செப்டம்பரில் பணி நியமனம்
32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம் உடனடியாக பணி ஆணை வழங்க -உயர்நீதிமன்றம் உத்தரவு

2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.இதனை எதி்ர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி ஆணை வழங்க உத்தரவிட்டார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் (School Grant) மற்றும் பள்ளி பராமரிப்பு (Maintenance Grant) மானியம் 2013-14 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள்

இந்த கல்வி ஆண்டில் எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம்? வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014), எந்தெந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம்? என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

யார் யார் சேரலாம்?
தமிழ், உருது, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும், மனையியல், பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களும் பி.எட். படிப்பில் சேர தகுதி உடையவர் ஆவர். அவர்கள் 10–ம் வகுப்பு, பிளஸ்–2, பட்டப்படிப்பு எந்த நிலையில் படித்து முடித்திருக்க வேண்டும். இவ்வாறு படிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

குறிப்பிட்ட 3 ஆண்டு பட்டப்படிப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூடுதலாக ஒரே ஆண்டில் இன்னொரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் (அடிஷனல் டிகிரி) அந்த பாடத்தில் பி.எட். படிப்பில் சேர இயலாது. அதேபோல் 4 ஆண்டு இரட்டை பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேரத்தகுதி இல்லை. ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆனால் அவர்களின் முதுகலை பட்டப்படிப்பு மதிப்பெண்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையான கல்வி தகுதிகள்
பயன்பாட்டு கணிதம் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. கணிதம் படிப்பின் கீழும், பயன்பாட்டு இயற்பியல், புவி–இயற்பியல், உயிரி–இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் பாடங்களில் பட்டம் பெற்றோர், பி.எஸ்சி. இயற்பியல் படிப்பின் கீழும், உயிரி தொழில்நுட்பம், தாவர–உயிரியல், தாவர–உயிரி தொழில்நுட்ப பட்டதாரிகள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், சுற்றுச்சூழலியல், நுண்ணுயிரியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பின் கீழும், பயன்பாட்டு புவியியல் பட்டதாரிகள் இளங்கலை புவியியல் படிப்பின் கீழும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு பட்டதாரிகள் கணினி அறிவியல் படிப்பின் கீழும் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரம், வணிகவியல், மனையியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல் தத்துவம், தர்க்கவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப்படிப்பு பெற்றவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பை தகுதியாக கொண்ட படிப்புகளின் கீழ் பி.எட். சேர உள்ளோர் இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாமல் முதுகலை படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்தான்.

குறைந்தபட்ச மதிப்பெண்
ஊட்டச்சத்து மற்றும் டயட்டிக்ஸ் முதுகலை பட்டதாரிகள் மனையியல் படிப்பின் கீழ் பி.எட். படிப்பில் சேரலாம். இளங்கலை பட்டப்படிப்பில் முதல் பிரிவில் தமிழை படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தமிழ் மொழிப்புலமை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பி.எட். படிப்பில் சேருவதற்கு கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுப்பிரிவினர் – 50 சதவீதம்
பிற்படுத்தப்பட்டோர் – 45 சதவீதம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் – 43 சதவீதம்
ஆதி திராவிடர் – 40 சதவீதம்

சிறப்பு மதிப்பெண்
இளங்கலை, முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும். உயர் கல்வி தகுதிக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். அதன்படி, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் 4 மதிப்பெண், எம்.பில். பட்டதாரிகளுக்கு 6 மதிப்பெண், பி.எச்டி. பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்கள் கிடைக்கும். இவை தவிர என்.எஸ்.எஸ்., என்.சி.சி. ( ‘பி’ அல்லது ‘சி’ சான்றிதழ்) இருந்திருந்தாலோ, விளையாட்டு வீரராக இருந்தாலோ மேலும் 3 மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கையின்போது அரசு விதிமுறைகளின் படி இடஒதுக்கீடு பின்பற்றப்படும். அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். தேர்வு செய்யப்படும் மாணவ–மாணவிகள் அரசு டாக்டரிடம் இருந்து பெற்ற உடல்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

விரைவில் விண்ணப்பம்
நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.200 என்றும், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு ரூ.175 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் சலுகை கட்டணத்தில் விண்ணப்பத்தை பெறுவதற்கு சான்றொப்பம் பெறப்பட்ட தங்கள் சாதி சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு: 1.67 லட்சம் பேருக்கு ஹால் டிக்கெட்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, வரும், 21ம் தேதி, 422 மையங்களில் நடக்கிறது. தேர்வெழுத உள்ள, 1.67 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கும், டி.ஆர்.பி., இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஒருபக்கம், 15 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆகஸ்ட், 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடக்கின்றன. 

இதற்கிடையே, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய, வரும், 21ம் தேதி, டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்துகிறது. ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 657 பேர், 422 மையங்களில் நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். அன்று காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு நடக்கிறது.

"அப்ஜக்டிவ்" முறையில், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்"டுகள், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று மாலை வெளியிடப்பட்டன. 

தேர்வர்கள், விண்ணப்ப எண்கள் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, "ஹால் டிக்கெட்"டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். "ஹால் டிக்கெட்" எந்த காரணம் கொண்டும், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

தேர்வு நெருங்கிவிட்டதால், அதற்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., முழு வீச்சில் செய்து வருகிறது. கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பும் வகையில், தயாராக வைக்கப்பட்டுள்ளன. 

தேர்வுக்கு, ஒருசில தினங்களுக்கு முன், சம்பந்தப்பட்ட மையங்களுக்கு, கேள்வித்தாள் கட்டுகள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையங்களை பார்வையிட, பல்வேறு அதிகாரிகள் அடங்கிய குழுக்களும், அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்கள், தனித்தனியாக, மாவட்ட வாரியாக சென்று, தேர்வை பார்வையிடும்.

ஒரு பணியிடத்திற்கு, 58 பேர் போட்டி போடுகின்றனர். அதிலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுக்கு, அதிகமான போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில், 33,237 பேர்; வணிகவியலில், 18,330 பேர்; வரலாறு பாடத்தில், 18,380 பேர்; கணிதத்தில், 22,497 பேர், தேர்வை எழுதுகின்றனர். 

குறைந்தபட்சமாக, அரசியல் அறிவியல் பாடத்தை, 30 பேர் எழுதுகின்றனர். "ஹோம் சயின்ஸ்&' பாடத்தை, 113 பேர் எழுதுகின்றனர்.

Monday, July 8, 2013

NEWS 9.7.13

RMSA - அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 / 10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 10.07.2013 முதல் 30.07.2013 வரை 4 நாட்கள் பணியிடைப்பயிற்சி

1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அகஇ சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட தொடக்கக் கல்வி உத்தரவு


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2012-13 இணையதளத்தில் வெளியீடு

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click Here for Hall Ticket   

Direct Link -2

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I for the year 2012-2013
1.  List of Admitted Candidates                                      -        167657
2. Subject-wise list of candidates admitted for the examination
Subject Code
SubjectNo. of Candidates
13PG01Tamil33237
13PG02English14080
13PG03Mathematics22497
13PG04Physics12469
13PG05Chemistry12247
13PG06Botany8150
13PG07Zoology10991
13PG08History18380
13PG09Geography1481
13PG10Economics9501
13PG11Commerce18330
13PG12Political Science30
13PG13Home Science113
13PG14Physical Education Director Grade I3203
13PG15Micro-Biology1544
13PG16Bio-Chemistry1348
13PG17Telugu56
 Total167657
3. List of Rejected Candidates                    -                              2
Date of Examination: 21.07.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M


TET - Collection - New -

 

TET - Tamil 6-12th Std Notes - Prepared By Mr. Siva, B.T.Asst., Thiruvannamalai

TET - Tamil Prepared By Mr. Siva,B.T Asst., Tiruvannamalai.

TET - Tamil 6th to 12th Std Full Notes.

 

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் 

Guidence & counselling

Mental Health & Hygiene

Personality and Assessment 

Psy Learn 

Skinners

Social, Emotional and Moral Development 

கற்றல் 

நுண்ணறிவு ஈவு 

மனவெழுச்சிகளும் உடல்நலமும் 



Child Development & Psychology
  1. CD&P -4
  2. Psychology
  3. Psychology
  4. Psychology
  5. Psychology
  6. CD&P-1
  7. CD&P-2
  8. CD&P-3
Tamil
  1. Tamil Material
  2. Tamil
  3. Works & Authors
  4. 6-10th Std Tamil * New *
English
  1. Synonyms
  2. Antonyms
  3. Spell Word
  4. Phrases
  5. Adjective
  6. Noun
  7. Pronoun
  8. Tense
  9. English Test Materials
Maths
  1. Maths
  2. Maths - EM
  3. Maths - EM
  4. Maths - TM - 7th Std * New *
  5. TET-Maths Paper 1 - வாழ்வியல் கணக்குகள்-Prepared By Mr. O.Sankar, B.T.Asst., Karur District.

    TET-Maths Paper 1 - வடிவியல்-Prepared By Mr. O.Sankar, B.T.Asst., Karur District

    TET-Maths Paper 2- Prepaed By Mr.Siva, B.T.Asst., Tiruvannamalai. 

    TET - Maths Prepared By Mr. Siva,B.T Asst., Tiruvannamalai.

     
Science
  1. Physics
  2. Physics-11th Std
  3. Physics-12th Std
  4. Chemistry-12th Std
  5. Chemistry-9th Std
  6. Biology-8th Std
  7. Science - 1
  8. Science - 2
  9. Science - 3 
  10. Science - 4 * New *
  11. 10th Science - EM * New *
GK 
  1. Important Days

Sunday, July 7, 2013

செய்தி

உயர் நிலைப் பள்ளியிலிருந்து மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

news

* கடவுளிடம் உறுதியாகவும், தூய்மையாகவும், நம்பிக்கை உடையவனாகவும் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் 
அனைத்துவிதமான இடைஞ்சல்களும் மறைந்து போகும்.
* ஒழுக்கம் மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கத்தால் உருவாகிறது. பழக்கங்களால் தான் ஒழுக்கத்தை மேலும் சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்க முடியும். 
* அனைத்துவிதமான அறிவும் மனிதனுக்குள் இருப்பதாக வேதாந்தம் கூறுகிறது, குறிப்பாக, சிறுவனிடமும் 
இருக்கிற அறிவையும் விழித்து எழும்படி செய்வது தான் ஆசிரியனுடைய கடமை.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி செய்யும் வகையில் அவர்களுக்கு உதவுவது.
* நல்லவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள், மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத்தானே தியாகம் செய்ய வேண்டும், உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான் பெற முடியும், இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.
விவேகானந்தர் 
மாணவர்களே நடத்தும் அங்காடி: அரசுப்பள்ளி அசத்தல்

            உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

             உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமவராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். படிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க தன்னார்வலர்கள் மூலம் தேவையான இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. பசுமைப்படை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளும் பள்ளியில் செயல்படுகின்றன.

            மாணவர்களின் நிர்வாகத்திறமையை வளர்க்கும் வகையில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்திலேயே அங்காடி ஒன்றை துவங்கலாம் என ஆலோசித்து முடிவெடுத்தனர்.

                இதற்காக ஆசிரியர்கள் சார்பில் பங்களிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு ஒரு அங்காடி ஒன்றும் துவங்கப்பட்டது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு 6,7,8 மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்காடியில், மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், காகிதம், வரைபட அட்டைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

                மற்ற குழந்தைகளுக்கு லாபம் இல்லாமல் அடக்க விலையிலேயே விற்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் சில அவசர தேவைகளுக்காக கடனாக பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் தலையீடு இல்லாமல் கணக்கு பார்ப்பது முதல் பணத்தை பாதுகாப்பது வரை நிர்வாக ரீதியான அனைத்து பணிகளையும் மாணவர்களே மேற்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

                    தேவையான பொருட்களை மாணவர்களே ஆசிரியர்கள் உதவியுடன் கொள்முதல் செய்கின்றனர். படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், காலை பள்ளி துவங்குவதற்கு முன்பு அரைமணி நேரம், மதியம் உணவு இடைவெளியின் போதும் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

            "மாணவர்களிடம் நிர்வாகத்திறன் மற்றும் தன்னம்பிக்கையினை சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்காடித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை வெற்றிகரமாக இயக்கி வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது," என்கிறார் அங்காடி பொறுப்பாசிரியர் ஆலிஷ் திலகவதி.

                   "அங்காடித்திட்டத்தை மாணவர்கள் ஆர்வமுடன் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்திட்டம் மூலம் கிடைக்கும் லாபத்தொகை மட்டுமின்றி மாணவர்கள் சேமிப்பு திட்டம் மூலம் கிடைக்கும் தொகையினை கொண்டும், பெதப்பம்பட்டி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஒரு கணக்கு துவக்கி சேமித்து வைக்கப்பட்டு வருகிறது," என பெருமையுடன் தெரிவித்தார் பள்ளித் தலைமையாசிரியர் மணி.
 



            வேதியியலின் முக்கிய ஒரு உட்பிரிவாக விளங்குவது ஆய்வக வேதியியல். இதன் மூலம் இயற்கையிலிருக்கும் வேதிப்பொருட்களை ஆராய்ந்து, அதிலிருந்து தேவையான பொருட்களை பெற முடிவது இதன் சிறப்பு. 
 
         உலக வெப்பமயமாதல், இயற்கை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை, வேதியியல் ஆய்வுகளினால் தடுக்கலாம்.

            பொதுவாக வேதியியல் ஆய்வகத்தில் ஒரு பொருளின் அடர்த்தி, அமிலத் தன்மை, அளவு மற்றும் வடிவம் ஆகியவை ஆராயப்படுகின்றன. மேலும் பொருளின் மூலக்கூறு, அணுக்களின் அளவு ஆகியவையும் கணக்கிடப்படுகின்றன.

                   வேதியியல் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு, ஆய்வக வேதியியல் படிப்பு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். வேதியியலில் பல்வேறு உட்பிரிவுகள் காணப்படுகின்றன. பகுப்பாய்வு வேதியியல், உயிர் வேதியியல், கனிம வேதியியல், மருத்துவ வேதியியல், கரிம வேதியியல், இயல்பியல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல் என பிரிவுகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆய்வக வேதியியலே முதன்மையானது. இவற்றில் ஏதாவது ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

தகுதி மற்றும் படிப்புகள்

                       ஆய்வக வேதியியல் பாடங்களை படிப்பதற்கு பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, பொறியியல் ஆகிய படிப்புகள் ஆய்வக வேதியியலில் உள்ளன.

* பி.எஸ்சி., எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி
* எம்.எஸ்சி., எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி
* பி.டெக்., சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி
* எம்.டெக்., எலக்ட்ரோ  கெமிக்கல் இன்ஜினியரிங்
* எம்.டெக்., சர்பேஸ் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்

             பொதுவாக வேதியியல் படிப்புகள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இவற்றில் உட்பிரிவுகள் இருக்கும் நல்ல கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து படிப்பது சிறப்பானதாக இருக்கும். இந்த படிப்புகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த நிறுவனங்கள் உள்ளன.

வேலை வாய்ப்புகள்

                    ஆராய்ச்சி பொறியாளர், தொழில் நுட்பவியலார், ஆலோசகர், ஆசிரியர் போன்ற வேலைவாய்ப்புகள் வேதியியல் படித்தவர்களுக்கு உள்ளன. அரசு நிறுவனங்களிலும் வேதியியல் படித்தவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய பணிகள் இருக்கின்றன. அறிவியல் ஆய்வகங்களில் வேதியியலாளர்களின் தேவை அதிகம். வெளிநாடுகளிலும் ஆய்வக ஆராய்ச்சியாளருக்கு நல்ல பணிவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

              பொதுவாக வேதியியல் படிப்பு முடித்தவர்களுக்கான தேவை அதிகமாகத்தான் இருக்கிறது. இதனால் இந்த துறையில் ஆர்வமுள்ளவர்கள், வேதியியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
 
படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

             ஒரு செயலை செய்யும் போது, அதற்கான சூழல் இல்லையெனில் அச்செயல் வெற்றி பெறாது. அதே போல படிக்கும் அறையும், ஒழுங்காக இல்லையெனில் ஆர்வம் ஏற்படாது.

             ஒரு செயலில் ஆர்வம் இருக்கும்பொழுது தான் கவனம் ஏற்படும். கவனம் என்பது இயற்கையிலேயே உள்ள ஆற்றல் அல்ல. நம்மால் வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு திறன். பொதுவாக, ஆர்வம் உள்ள விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். உதாரணமாக பாடல்கள், கிரிக்கெட் விளையாட்டு போன்றவை. இதே கவனம், படிக்கும் விஷயங்களில் வருவதில்லை. ஏனென்றால் பாடத்தில் இந்த ஆர்வம் இருப்பதில்லை.

            இயல்பான ஆர்வம் இல்லையெனில், நமது கவனத் திறன் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை. அதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு செயல்களில் கவனம் செலுத்த முடியாது. இதற்கு விதிவிலக்காக, பழக்கப்பட்ட இயந்திரத் தனமன செயலையும், சிந்தனை சம்பந்தப்பட்ட செயலையும் சிறிது நேரம் ஒரே சமயத்தில் செய்யலாம்.

படிப்புச் சூழல் எப்படி?
                  படிப்புச் சூழலை எவ்வாறு அமைத்துக்கொள்கிறமோ, அதைப் பொறுத்துதான், படிக்கும் ஆர்வம் நிலைத்திருக்கும். பொதுவாக பலர் படுக்கையில் அமர்ந்துகொண்டு, படிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இம்முறையில் உற்சாகத்தோடு படிக்கச் சென்றாலும் கூட, சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், சிறு வயதிலேயே நமது உடலும், மனமும் படுக்கை என்றவுடன் தூங்கும் இடம் என்று பழகிவிட்டது. எவ்வாறு தூங்குவதற்கு படுக்கை அறையும், "டிவி" பார்க்க தனி இடமும் இருப்பதுபோல், படிப்பதற்கு என்று தனி இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

படுக்கை அறையைப் பார்த்தவுடன் தூக்கம் வருவது போல, சமையல் அறையை பார்த்தவுடன் பசி உணர்வு தூண்டப்படுவது போல, படிக்கக்கூடிய இடத்தைப் பார்த்தவுடன் படிக்கும் ஆவலைத் தூண்டும்படி இடம் அமைய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிக்கக் கூடிய இடத்தைத் தேடுவதால் நேரம் விரயமாகிறது.

படிக்கும் இடத்தை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

* காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நன்றாக இருக்க வேண்டும்.
* தேவையான வரைபடங்கள், முக்கிய குறிப்புகள் சுவரில் ஒட்டிவைத்துக் கொள்ளலாம்.
* இடையூறுகள் அதிகம் இல்லாத இடமாக இருக்க வேண்டும்.
* சுத்தமான இடமாக இருக்க வேண்டும்.
* படிக்கும் போது தேவையான பொருட்களை (பேப்பர், பேனா, பென்சில், தண்ணீர்) முதலிலேயே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இவற்றைத் தேடுவதால் நேர விரயம் மற்றும் மன உளைச்சல் ஏற்படும்.

இதையெல்லாம் பின்பற்றினால், படிப்பு தானாக வந்து விடும்.

SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
            2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு 
2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் (School grant) வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் – வழிகாட்டுதல் குறிப்புகள் :




  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கேற்றவாறு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை (Infrastructure) மேம்படுத்த பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. இம்மானியம் வழங்க மாவட்ட வாரியாக  2013-14ம் ஆண்டு வரைவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 அனைத்து வகையான அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், கள்ளர், சீரமைப்பு, வனத்துறை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இம்மானியம் விடுவித்தல் வேண்டும்.



 அரசு நிதி உதவிபெறும் தனியார் நிர்வாகப் பள்ளிகளை பொறுத்த வரையில் மாவட்ட திட்ட அறிக்கையில் இப்பள்ளிகள் சேர்க்கப்பட்டு, நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டிருந்ததால் மட்டுமே பள்ளி மானியம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும்.



 இம்மானியத்தை பயன்படுத்தி மேஜை, நாற்காலி, பீரோ, குடிநீர் பாத்திரம், பதிவேடுகள், சுவர் கடிகாரம், அலமாரிகள், எழுது பொருள்கள, மின்வசிறி, மின் விளக்குகள், தகவல் பலகை, கரும்பலகை, செயல் வழிக் கற்றல் அட்டைகள் வைக்கும் டிரேஸ், பாய்கள், தீயணைப்பான், தேசியக் கொடி, கயிறு, மைக், மின் அழைப்பான், உலக உருண்டை, தனிம வரிசை  அட்டவணை போன்றவை வாங்க, பள்ளி மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த ஏதுவாக பள்ளி மானியத்திலிருந்து மாணவர்களுக்கு தேவையான கைபந்து, கால்பந்து, ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்க பலகை, கேரம் விளையாட்டு போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்திட வேண்டும், பொருட்கள் தரமானதாக இருத்தல் வேண்டும்.



தொடக்கப் பள்ளி மானியம் மற்றும் நடுநிலைப் பள்ளி மானியம் வழங்குதல் (Release of Primary School Grant and Upper Primary School Grant)



1. 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5000/- வீதமும் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு

வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.7000/- வீதமும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.12000/- வீதமும் வழங்கப்பட வேண்டும்.

2. கோடிட்ட காசோலையாக கிராமக் கல்வி குழு / பெற்றோர் ஆசிரியர் கழகம் /பள்ளி நிர்வாகக் குழுவின் பெயரில் வழங்கப்பட வேண்டும்.

3. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.

4. காசோலை பெறப்பட்ட உடன் வங்கியில் செலுத்தப்பட வேண்டும்.

பொருள் வாங்குதல் (Purchase of Materials)

1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்களை கிராமக்

கல்விக்குழுவின் தீர்மானத்தின்படி வாங்கப்பட வேண்டும்.

2. பொருள்கள் வாங்க தேவைப்படும் பொழுது மட்டும் தேவைப்படும் அளவிற்கு வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும்.

3. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச்சீட்டுகள் (Vouchers)  பெறப்பட்டு பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

4. தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்கப் பதிவேட்டில் (Cash book) பதிவு செய்ய வேண்டும்.



5. பொருள்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில்  பதிவு செய்தல் வேண்டும். இருப்புப் பதிவவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்படவேண்டும்.



6. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியத் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி, தொகை  உள்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும். பள்ளி மானியம் 



பயன்படுத்தியதைக் கண்காணித்தல்

(Monitoring the utilization of school grant)



1. மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்., வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (AEEO ) பள்ளி மானியம் பயன்படுத்தியதை கண்காணித்து உறுதி செய்தல் வேண்டும்.



2. இருப்புப் பதிவேட்டையும், ரொக்க பதிவேட்டையும், பள்ளி மானியப் பதிவேட்டையும் அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.



3. தேவையின் அடிப்படையில் மட்டுமே பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பதையும் வாங்கப்பட்டுள்ள பொருள்களின் தரத்தையும் உறுதி செய்தல் வேண்டும்.



4. பொருள்கள் வாங்கும் பொழுது மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள  வேண்டும்.



பயன்பாட்டுச் சான்றிழ்கள் ஒப்படைத்தல்

(Submission of Utilisation Certificates)


1. பயன்பாட்டுச் சான்றிழ்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மூலமாக வட்டார வளமையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.



2. பார்வையின் போது அலுவலர்களுக்கு காண்பிக்க வேண்டும்.



மாவட்டத் திட்ட அலுவலகம் (DPO)



1. ஆண்டு வாரியாக பள்ளி மானியம் வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் (தொடக்க வகுப்புகள், உயர்தொடக்க வகுப்புகள்) எண்ணிக்கை, வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, தொகை, காசோலை எண்கள் போன்றவை அடங்கிய பள்ளி மானியப் பதிவேடு (School Grant Register ), பராமரித்தல் வேண்டும்.



2. கிராமக் கல்விக் குழுக்களின் பெயரில் கோடிட்ட காசோலைகள் ஜுன்- ஜுலை மாதங்களில் வழங்கப்பட வேண்டும்.



3. காசோலை வழங்கும் பதிவேட்டில் (Cheque Issue Register), பதிவு செய்யப்பட வேண்டும் (காசோலை எண், நாள், கிராமக் கல்விக் குழுவின் பெயர் மற்றும் வங்கியின் பெயர்)



4. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.



5. பயன்பாட்டுச் சான்றிழ்கள் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடமிருந்தும் ஒன்றியம் வாரியாக ஒன்றியத்துக்கு ஒரு சான்றிழ்  வீதம் பெறப்பட வேண்டும்.



6. மானியங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும், பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும்பள்ளிகளுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும்.





வட்டார வள மையம் (BRC)



1. வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஒன்றிய அளவில் பள்ளி மானியப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.



2. ஒன்றிய அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை  ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.



3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, என்ன என்ன பொருள்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க  வேண்டும்.



4. பள்ளி மானியம் பெற்ப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட வேண்டும்.



5. பள்ளி மானியம் வழங்கப்பட்ட அனைத்து பள்ளிகளிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட்டுவிட்டதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அளவில் ஒரே பயன்பாட்டுச் சான்றிதழில் பள்ளி மானியம் வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை (தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி), தொகை குறிப்பிட்டு மாவட்டத் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப் படவேண்டும்.



பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம் (CRC)

1. ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மானியப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.



2. பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.



3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது. என்ன என்ன பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க வேண்டும்.



4. பள்ளி மானியம் பெறப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்படவேண்டும்.



5. மேலும் மைய அளவிலுள்ள அனைத்து பள்ளிகளையும் பார்வையிடுதல் மற்றும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறுதல் ஆசிரியர் பயிற்றுநரின் முழுப்பொறுப்பாகும்.



கிராமக் கல்விக் குழு / பள்ளி மேலாண்மைக் குழு

1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்கள் கொள்முதல் செய்ய  தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.



2. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச் சீட்டுகள் ( Voucher  ) பெறப்பட்டு பத்திரமாக  பாதுகாக்கப்பட வேண்டும்.



3. இருப்புப் பதிவேட்டில் வாங்கப்பட்ட பொருள்களின் பெயர், தொகை, ரசீது எண். நாள்,  வாங்கிய இடம் முதலியவை பதிவு செய்தல் வேண்டும். இப்பக்க எண்ணை பற்றுச்  சீட்டில் குறித்து இருப்புச் சான்று பதிய வேண்டும்.



4. பள்ளி மானியப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். (பெற்ற தொகை, காசோலை  எண். வங்கி மற்றும் நாள்).



5. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியம் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி தொகை உட்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.



6. பயன்பாட்டுச் சான்றிழ் ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இச்சுற்றறிக்கையின் நகலினை மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கீழ்கண்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும். சுற்றறிக்கை பெறப்பட்டதற்கான  ஒப்புகைச் சான்றிழ் பெற்று தங்கள் அலுவலகக் கோப்பில் வைத்திருத்தல் வேண்டும்.

(இவ்வாறு மாநில் திட்ட இயக்ககம் செயல்முறை வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.)
Current events