TET Study Material
Thanks to Mr. Mani Kandan, M.A., M.Phil., B.Ed.,
Radhapuram Vil, Thandarampet TK,
Thiruvannamalai Dt.
| |||||||||||||||
LTC Bill Preparation - Model - Full Set | |||||||||||||||
பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும் வகையில், தேர்வு மைய பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை பூட்டி, சீல் வைக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வின் போது, திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சியில் உள்ள பள்ளிகளில், தேர்வுக்கு அரைமணி நேரம் முன்னதாக, பள்ளியில் இருந்த ஜெராக்ஸ் மிஷின் மூலம் வினாத்தாள், "ஜெராக்ஸ்" எடுத்து வினியோகிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அப்பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
'
நாளை மறுநாள், 10ம் வகுப்பு தேர்வுகள் துவக்கவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமையவுள்ள பள்ளிகளுக்கு, பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைக்கப்படும் பள்ளிகளில் உள்ள, ஜெராக்ஸ் இயந்திரம் உள்ள அறைகள், தேர்வுக்கு முதல்நாளே பூட்டி, சீல் வைக்க வேண்டும். தேர்வு நடத்தும் அலுவலர்கள், அதை உறுதி செய்யவேண்டும்.
மேலும், தேர்வு மைய பள்ளிகளின் பட்டியலை பெற்றுள்ள மின் வாரிய அதிகாரிகள், தடையில்லா மின்சாரம் வழங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனாலும், ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்குமாறு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், தேர்வு மைய பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
| |||||||||||||||
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றிய / நாகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் ஒன்றிய வாரியான எண்ணிக்கை விவரங்களை உரிய படிவங்களில் 26.03.2013 தேதியன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அளித்திட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களில் தீர்ப்பாணையின் நகலினையும் கொண்டு வர அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
| |||||||||||||||
விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு
"பிளஸ் 2 பொதுத் தேர்வை போல், பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான விடைத்தாள் நகல்களும் வழங்க தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை, பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயிக்கின்றன. பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறையும் போது, எதிர்பார்க்கும் பள்ளி, பாடப் பிரிவுகளை பிளஸ் 2விற்காக தேர்வு செய்ய முடிவதில்லை. மேலும், தபால், எல்.ஐ.சி., போன்ற துறைகளில், உதவியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கும் "வெயிட்டேஜ்" மார்க் கொடுக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியின்போது பிளஸ் 2 தேர்வில் ஏற்படுவது போன்ற "மனித தவறுகள்", பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தலின் போதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் நவநீதிகிருஷ்ணன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது: பி.எட்., ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போது நடத்தப்படும் தகுதி தேர்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, "வெயிட்டேஜ்" மார்க் கொடுக்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் குறைவால், பிளஸ் 2வில் விருப்பமான பாடங்களை தேர்வு செய்ய முடியாமலும் போகலாம். விடைத்தாள் நகல் கிடைக்கும் பட்சத்தில், மறுமதிப்பீடு செய்து, மதிப்பெண்களை அதிகரிக்க மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். தேர்வுதுறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். | |||||||||||||||
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்
மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 9ம் தேதி, லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மாணவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டம், கலை கல்லூரிகளும், கடந்த, 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகளுக்கு, கடந்த, 18ம் தேதியும் காலவரையற்ற விடுமுறையை அரசு அறிவித்தது. கல்லூரி விடுதிகளில் தங்கி படித்த மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர். கல்லூரி தேர்வுகளும், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டும், மாணவர்கள் ஒன்றிணைந்து, அமைப்புகளை உருவாக்கி, கடந்த, 14 நாட்களாக போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், நேற்று மாணவர்கள் சார்பில் எந்தவித போராட்டங்களும் நடைபெறாத நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, எஸ்.எம்.எஸ்., மூலம், மாணவர்களிடையே, பரபரப்பாக செய்தி பரவியது. உயர்கல்வி துறை தரப்பில், கல்லூரி திறப்பு குறித்து நேற்று வரை, எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், எஸ்.எம்.எஸ்., குழப்பத்தால், இன்று கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உயர் கல்லூரி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மூலம், மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்து செய்திகள் சேகரிக்கப்பட்டு, உயர்கல்வி துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களிடமும், மாணவர்களின் போராட்ட நிலவரங்களை, உயர்கல்வி துறை விசாரித்து வருகிறது. மாணவர்களின் போராட்டங்கள் தணிந்துள்ள நிலையில், கல்லூரி திறப்பு குறித்து, உயர்கல்வி துறை விவாதித்து, இன்று முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். | |||||||||||||||
திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியில், இந்தாண்டு "திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு" பிழை இல்லாமல் திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள், தமிழகம் முழுவதும், 55 மையங்களில் துவங்கியுள்ளது. இந்தாண்டு தேர்வு மார்ச் 27ல் முடிகிறது. அதற்கு முன்பாகவே விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து, தேர்வு முடிவுகளை முன் கூட்டியே வழங்க, பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியை, கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு செய்தார். அங்கு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரும்படியும், இடையூறு இன்றி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அவர் கூறுகையில், "தேர்வு முறையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர்களுடன் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோது, பொதுத்தேர்வு விடை தாள்களை ஆசிரியர்கள், பிழையில்லாமல் திருத்த வேண்டும், என முடிவு செய்தோம். அதற்கு "திருத்தம் இல்லா திருத்தம் ஆண்டு&' என இருக்க வேண்டும் என்று, நான் குறிப்பிட்டேன். ஆசிரியர்கள் விடை தாள்களை திருத்துவதற்கு முன், ஒரு உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். அதன்படி, திருத்தும் பணியை சுமையாக கருதாமல், சுகமாக எண்ண வேண்டும். மகிழ்ச்சியுடன் இப்பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டால் தான், பிழைகள் இல்லாமல் திருத்த முடியும்" என்றார். | |||||||||||||||
அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்
கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் படி, அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் அனைத்து கட்டாய கட்டணங்களை செலுத்த தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, டியூசன், பதிவு, விளையாட்டு, நூலகம், இதழ்கள் போன்றவற்றிற்கு, கட்ட வேண்டிய எந்த கட்டணத்தையும் கட்டத்தேவையில்லை. இந்த அரசாணை, 2011 - 2012ம் கல்வி ஆண்டிலிருந்து, நடைமுறைப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, துடி மாணவர் இயக்கத்தின் செயலர் பாரதி பிரபு கூறியதாவது:அரசாணை வந்தவுடன், தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் நிகழும் என, நினைத்தோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இனி கல்வி கற்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என, மகிழ்ந்தோம்.ஆனால், அரசு தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என, கூறி, கல்லூரி நிர்வாகத்தினர் எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். மொத்த கட்டணத்தையும் செலுத்த, கல்லூரி நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள், சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். பல மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார். | |||||||||||||||
பாரதியார் பல்கலைக்கழகம் DEC-2012 தேர்வு முடிவுகள் வெளீயீடு
| |||||||||||||||
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் அமைச்சர் வைகைசெல்வன் ஆய்வு
விருதுநகரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு செய்தார்.
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது. எனவே விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் அதற்கான முதல் கட்ட பணிகளை அமைச்சர் வைகைசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதோடு, இடையூறு ஏதும் இல்லாமல் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். அதனால், இம்மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதோடு, வருகிற 27 தேதியோடு தேர்வு முடிகிறது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும், டம்மி எண் போடும் பணிக்காகவும் பல்வேறு மையங்களுக்கு விடைத்தாள்கள் பிரித்தனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி முதல் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் இப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி, தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணி கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியிலும், அதேபோல் அறிவியல் தொடர்பான பாடங்களுக்கு மாற்று எண் போடும் பணி ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக இம்மாவட்டத்தில் 800 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு ஆசிரியர்கள் சிறப்பாக பணிகள் செய்வதற்காகவும், திருத்தம் இல்லாமல் இருப்பதற்காகவும் திருத்தம் இல்லாமல் திருத்தும் ஆண்டாக கடைபிடிக்கும் வகையில் ஆசிரியர்கள் உறுதிமொழியேற்று இப்பணியை தொடங்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உடன் ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.பகவதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பழனியாண்டி, சுப்பிரமணி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். | |||||||||||||||
அண்ணாமலைப் பல்கலை: நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். | |||||||||||||||
Central Teacher Eligibility Test (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION-Previous year Question Paper
| |||||||||||||||
CPS - பங்களிப்பு ஓய்வு ஊதியம் குறித்து தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி இதோ!
| |||||||||||||||
பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வ
பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்கள், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பணியாற்றி வருபவர்களில், பணிமூப்பு அடிப்படையில், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்" முறையில், நடந்தது. துறை இணை இயக்குனர் கண்ணப்பன் கையெழுத்திட்ட உத்தரவு கடிதங்கள், உடனுக்குடன், ஆன்-லைன் மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, உதவியாளர்களாக இருப்பவர்களில், 100 பேர், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
| |||||||||||||||
4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்
இந்து அறநிலையத் துறையில், உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையில், 2,800 இடங்களுக்கான உதவி மருத்துவர் தேர்வு என, 4,000 காலி பணியிடங்களை நிரப்ப, தொடர்ச்சியாக, வரும், 30ம் தேதி முதல், பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
இந்து அறநிலையத் துறையில், நான்கு உதவி ஆணையர் பணியிடங்களுக்கான தேர்வுகள், இரு இடங்களுக்கான செயல் அலுவலர் தேர்வுகள் வரும், 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கின்றன.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், 164 புள்ளியியல் ஆய்வாளர் பணி இடங்களுக்கான தேர்வு, ஏப்.,7ல், நடக்கிறது. சுகாதாரத் துறையில், 2,800 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, ஏப்ரல், 21ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது.
காவல்துறை பயிற்சிப் பள்ளியில், இரு விரிவுரையாளர்களை (சட்டம், நிர்வாகம்) தேர்வு செய்வதற் கான தேர்வு, ஏப்ரல், 27ல், நடக்கிறது. மேலும், கால்நடை துறையில், உதவி மருத்துவர்கள், 921 பேரை, நியமனம் செய்வதற்கான தேர்வு, ஏப்., 28ல், நடக்கிறது.
இந்த, ஐந்து வகையான தேர்வுகளிலும், ஏராளமான, தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில், டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
| |||||||||||||||
RESOURCES
▼
No comments:
Post a Comment