ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
| |||
மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்: பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்
பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல மாணவர்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அதைப் போக்குவதற்காக ஆர்எம்எஸ்ஏ(மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம்),
எஸ்இஆர்டி(மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்) ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 10ம் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி சென்னையில் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது.
அந்த ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்வு குறித்த பயம், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றை போக்கி நல்வழிப்படுத்துவார்கள். மேலும், பொதுத் தேர்வுகளை எப்படி எதிர் கொள்வது உள்ளிட்ட விஷயங்களையும் ஆசிரியர்கள் விளக்கி மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவார்கள். இந்த பயிற்சிக்காக மொத்தம் உள்ள 67 கல்வி மாவட்டங்களில் ஒரு மாவட்டத்துக்கு தலா 2 ஆசிரியர்கள் வீதம் 134 பேர் சென்னைக்கு வரவழைத்து பயிற்சி அளிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 45 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்பார்கள். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் உடனடியாக மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.
|
RESOURCES
▼
No comments:
Post a Comment