Tuesday, January 22, 2013

நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் CPS தொகை AG அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த RTI தகவல்



      இந்த தகவல் நிதி உதவி பள்ளியில் பணிபுரிந்து TET தேர்வில் வெற்றி பெற்று  தற்போது அரசு பள்ளி பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்

        எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், இளங்கலையுடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியில் சேர்ந்த பின், முதுகலை மற்றும் எம்.எட்., படித்தால், இரு ஊக்க ஊதியம் பெற தகுதி பெறுவர். ஆனால், முதுகலை பட்டம் பெற்று, எம்.பில்., ஆய்வு படிப்பு, பட்டம் பெற்றால், ஒரு ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது.

        தமிழகத்தில் எம்.பில்., பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் உட்பட, பல ஆசிரியர் சங்கங்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், எம்.பில்., முடித்தவர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்கப்படும் என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

          இதன்படி, தற்போது பணியில் சேரும் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடிப்படை 9,300 ரூபாய் மற்றும் தர ஊதியத்தில். 4,600 ரூபாயில், 6 சதவீதம் வரை ஊக்க ஊதியம் வழங்கப்படும். குறைந்தது, ஒரு ஆசிரியரின் சம்பளம், 1500 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

           தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக, மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "ஆசிரியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை, அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்,&'&' என்றார்.
ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

     பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றை சாரள முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


         இதுகுறித்து, உயர்கல்வி துறை செயலருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாண்டியன் அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சுயநிதி கலை கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, முறையான நெறிமுறைகளை ஆண்டுதோறும் அரசு வெளியிட்டாலும், அவை பின்பற்றப்படுவதில்லை.

         இதனால், மாணவர் சேர்க்கையில் அதிகபட்ச கட்டண வசூல், இடஒதுக்கீட்டை பின்பற்றாத மாணவர் சேர்க்கை, கட்டாய நன்கொடை வசூல், சுயநிதி பாடப்பரிவுகளுக்கு முன்னுரிமை, மாணவர் சேர்க்கை இல்லையென கூறி, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

        அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையை பின்பற்றினால் மட்டுமே, இம்முறைகேடுகளை களைய முடியும் என, உயர்கல்வி துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு, கடந்த கல்வியாண்டின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்கள், கால அவசாகம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், அடுத்த கல்வியாண்டில், ஒற்றை சாளர முறையை அமல் செய்ய பரிசீலிக்கப்படும் என, உறுதியளித்தனர்.

         தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி, வரும் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். இவ்வாறு பாண்டியன் கூறியுள்ளார்.
சமூக பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண வலியுறுத்தல்

         "சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்,' என, மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

        சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய அளவிலான தொழில்நுட்ப திருவிழாவின் துவக்க விழா, நேற்று நடத்தப்பட்டது. பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் சிந்தியா பாண்டியன், தலைமை வகித்து பேசியதாவது:

          தமிழக உயர்கல்வியில், இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. உலகளவிலான கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையில், இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது. 600 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. 62 சதவீத மாணவர்கள் கலைத் துறையிலும், 38 சதவீத மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உட்பட இதர பல பிரிவுகளிலும் பயில்கின்றனர்.
உயர்கல்வி மாணவர்களிடையே, திறன் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பது, இன்றைய சூழலில் மிகவும் அவசியம். மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள், சிந்திக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். திறன் மேம்பாடு சார்ந்த கல்வியே கட்டாயம் தேவை. இவ்வாறு, சிந்தியா பாண்டியன் பேசினார்.
        சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தேசிய தொழில்நுட்ப கழக (மணிப்பூர்) ஆட்சி மன்றக் குழு தலைவர் ராஜன் பேசுகையில், "விவசாயத் துறையில் தான், நாட்டின் எதிர்காலமே உள்ளது. இத்துறையில், ஆராய்ச்சிகளும், புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம்.
         அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கு, கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நம்மிடம் இருக்கும் வளங்களை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்த வேண்டும்,&'&' என்றார்.
மூன்று நாள் விழாவில், தொழில்நுட்பக் கண்காட்சி, பயிலரங்கம், கருத்தரங்கம், ஆய்வுக் கட்டுரை சமர்பித்தல் என, பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 1,719 ஆய்வுக் கட்டுரைகளில், 309 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலாம் வலியுறுத்தல்

        "புதிதாக படைக்கும் சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்,' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.


      தஞ்சையை அடுத்த வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலையில் விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று காலை பல்கலை வளாகத்தில் நடந்தது. துவக்க விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:
எழுச்சியுற்ற இளைய சமூகமாக மாணவ, மாணவியரை காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு இடம்பெற்றுள்ள கண்காட்சியில் அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு மாதிரிகள், மாணவ, மாணவியர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
          
        பிரமோஸ் ஏவுகணை திட்டம் என்பது, பிற நாடுகளுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழும் திட்டமாகும். கார், பஸ் மற்றும் வாகனங்களில் பயணம் செய்யும் போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களால் வெளியேறும் புகை, காற்று மண்டலத்தை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலுக்கும் கேடு உண்டாகிறது. அதனால், இதை தடுக்க வேண்டும்.
சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை, 90 சதவீதம் பெற முடியும். இதை மனதில் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை பல்கலை மாணவ, மாணவியர் ஆராய்ச்சி மூலம் நிகழ்த்த வேண்டும். என்னால் முடியும் என்றால் நம்மால் முடியும், நம்மால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும். அதனால், முதலில் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கவிதை ஒன்றை கூற விரும்புகிறேன்.

          இதை திரும்பக்கூறி, நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். "நான் பிறந்தேன், அரும்பெரும் சக்தியுடன், நற்பண்புகளுடன், கனவுகளுடன், நான் வளர்ந்தேன். நல்லெண்ணங்களை செயல்படுத்த, என்னால் முடியும் எனும் உள்ள உறுதியுடன் நான் பிறந்தேன். ஆகாய உச்சியில் பறக்க நான் பிறந்தேன். நான் ஒருபோதும் தவழ மாட்டேன். தவழவே மாட்டேன். ஆகாய உச்சி வரை பறப்பதே, என் லட்சியம். வாழ்வில் பறப்பேன். பறந்து கொண்டே இருப்பேன்."
இந்த நம்பிக்கை தரும் கவிதையின் படி நடந்தால், பறக்க வேண்டும் எனும் உள்ளுணர்வு உங்களை லட்சியத்தை அடைய வைக்கும். லட்சியம் அறிவாற்றலை தரும். உழைப்பு, உழைப்பு என, உழைத்து கொண்டே இருந்தால், வெற்றி வந்து சேரும்.

        நமக்கு முன்னே ரைட் சகோதரர்கள், தாமஸ் ஆல்வா எடிசன், மைக்கேல் பாரடே, சர்.சி.வி., ராமன் என, எண்ணற்ற விஞ்ஞானிகள் உழைப்பாலும், ஆராய்ச்சியாலும் உயர்ந்துள்ளனர். எதையும் உற்று நோக்கி ஆராய்ச்சி செய்து, புதிதாக படைக்கும் சிந்தனையாற்றலை வளர்ந்து கொண்டால், நீங்களும் சாதனை படைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

         ரஷ்யா நாட்டின் தென்னிந்திய தூதர் நிக்கலோவ், அமெரிக்கா நாட்டிலுள்ள மேரிலேண்ட் மாநில கவர்னரின் ஆலோசகர் ராஜன் நடராஜன், விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், பல்கலை., பதிவாளர் அய்யாவு ஆகியோர் பங்கேற்றனர். பல்கலை வேந்தர் வீரமணி தலைமை வகித்தார்.
லட்சியம் நிறைவேற தேவையான நான்கு குணங்கள்"

      "உழைப்பு, அறிவுத் தேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும்,' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.

          திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், "கல்விக் கூட்டம்" என்ற விழா நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:

உங்கள் சிந்தனை, செயல் ஒன்றுபட்டால், 2020ம் ஆண்டில் லட்சியம் நிறைவேறும். அதற்கு, கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடைப்பட்ட, சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்றவேண்டும்.
சுத்தமான குடிநீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி, எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி, பண்பாடு நிறைந்த, தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி, வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும்.
தொடர்ந்து அறிவைப் பெற, அதை தேடி சென்றடைய வேண்டும்.

       விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடைச் செய்ய வேண்டும். உழைப்பு, அறிவுதேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்கள் பணி படிப்பது மட்டுமே: அப்துல்கலாம் அறிவுரை

      மாணவர்களின் பணி படிப்பது மட்டுமே, அதை மட்டுமே நீ செய்ய வேண்டும்&'&' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

      பரமக்குடியில் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியின் வைரவிழாவில் மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களிடம், "எனக்குள் ஒரு அறிய சக்தி புதைந்துள்ளது. வெற்றி இலக்கை என்றென்றும் வளர்த்து என் சக்தியாலேயே நான் வெற்றி அடைந்தே தீருவேன். ஒவ்வொரு நாளும் வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தரும் அனைத்தும் பாடங்களையும் அன்றே படிப்பேன். படித்ததை ஓவியம் போல் என் ஆழ்மனதில் பதியச் செய்வேன்" என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

        நான் குடியரசுத் தலைவராக இருந்த போது, தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஸ்ரீகாந்த் என்ற மாணவரை சந்தித்த போது, அவர் ஜனாதிபதி ஆக வேண்டும், என்றார். அது போல் மிகப் பெரிய கனவு காண வேண்டும். "நாம் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என்னால் வெற்றி பெற முடியும்" என்பதை உணர வேண்டும்.

        கார் டிரைவர் ஒருவர் பத்தாம் வகுப்பு படித்தார். நான் அவரிடம் ஏன் படிக்கிறாய் என கேட்டதற்கு என் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க படிக்கிறேன் என்றார். அவர் தற்போது பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டம் பெற்று மதுரை கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.என்றார்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில், மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கலாம் அளித்த பதில்கள்:

  உலகம் வெப்பமயமாதலை தடுக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு மரமும் வருடத்திற்கு 20 கிலோ கிராம் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒருவர் இரு மரம் வைத்தால் புதிய, சுத்தமான இந்தியா உருவாகும். "இன்றிலிருந்து நாம் மரங்களை நட்டு அதை வளர்ப்பேன். எங்கள் வீடு, பார்க், பள்ளி அருகில் அவசியம் செய்வோம்", என உறுதி மொழி ஏற்றனர்.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிந்து வர காரணம் என்ன?
விவசாயம் அழியாது. கடந்த வருடம் இந்தியாவில் 250 மில்லியன் டன் அரிசி உற்பத்தியாகியுள்ளது.

இந்தியா வல்லரசாக மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீ, நீயாக இரு.. மாணவர்களின் பணி என்ன. படிப்பது மட்டும். அதை மட்டும் நீ செய். நீ நன்றாக படித்தால் இந்தியா வல்லரசாக முடியும். என்றார்.

ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இனி வெளிநாட்டு மொழிகள்

     வெளிநாட்டு மொழிகளுக்கான கிராக்கி அதிகரித்து வருவதால், ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், விரும்பும் வெளிநாட்டு மொழிகளை படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


        இதற்கு முன்னர், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வெளிநாட்டில் இருந்த மாணவர்கள் ஆகியோர்தான், வாரியத் தேர்வை வெளிநாட்டு மொழியில் எழுத முடியும் என்ற விதிமுறை இருந்தது. மற்றபடி, அனைவரும், இந்திய மொழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
        ஆனால், ICSE பாடத்திட்டத்தில் படிக்கும் பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், வெளிநாட்டு மொழிகளைப் படிக்க விரும்பினர். எனவே, ICSE கவுன்சிலிலிருந்து, அனைத்து ICSE பள்ளிகளுக்கும் ஒரு சர்குலர் அனுப்பப்பட்டது. இதன்படி, வரும் 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு வாரியத் தேர்வு முதல், வெளிநாட்டு மொழிகளில் எழுதக்கூடிய சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 21, 2013

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்.,1ம் தேதி துவக்கம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தொடங்கி18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு செய்முறை தேர்வு பிப்.,1ம் தேதி முதல் பிப்.,18ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
2009-2010 - இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு

click here to download the GO 18 for BTs for 2nd Increment for M.phil/ PHd/ M.Ed  

பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட். படிப்பிற்குப் பதிலாக எம்.பில்., பி.எச்டி. பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வைப் பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி., தேர்வு பெற்ற பிறகு முதல் ஊதிய உயர்வைப் பெறுகின்றனர். அவர்கள் ஆசிரியர்களாகவோ, தலைமையாசிரியர்களாகவோ பணிபுரியும்போது எம்.எட் பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் தொலைநிலைப் பாடப்பகுதிகளில் எம்.எட். பட்டத்தை நீக்கிவிட்டன. இதையடுத்து, அவர்கள எம்.எட். கல்வித் தகுதியை பெற முடியாத சூழல் உள்ளது.

எனவே, இப்போது எம்.பில். அல்லது பி.எச்டி. பட்டம் மட்டுமே தொலைநிலைக் கல்வி நிறுவனங்களில் பெறும் சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியர் மொத்த பணிக் காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில், இரண்டாவது ஊக்கத் தொகை பெற தகுதியான உயர் கல்வி எம்.எட். மட்டுமே என்பதை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இவர்களது கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற உயர் கல்வி தகுதியாக எம்.எட் மட்டுமே என்பதற்குப் பதிலாக, எம்.எட். அல்லது எம்.பில் அல்லது பி.எச்டி. பெற்றிருந்தாலும் அதை உயர் கல்வியாகக் கருதி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.எனினும், ஒரு ஆசிரியரின் பணிக்காலத்தில் அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான வட்டார அளவில் உண்டு உறைவிடப் பயிற்சி 04.02.2013 முதல் 07.02.2013 வரையும், 11.02.2013 முதல் 14.02.2013 வரையும், 18.02.2013 மற்றும் 19.02.2013 ஆகிய நாட்களில் வட்டார அளவில் நடத்த SCERT உத்தரவு

மாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம், பயிற்சி, வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு

SSLC March 2013 - Examination Time Table


23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து , அந்நகலினை உடன் அனுப்ப - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு



CLICK HERE TO DOWNLOAD THE FILE



23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனத்திற்கு  ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பின் அந்த நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின்   நியமனங்களை உடன் இரத்து செய்து ,

அவ்வனையினை உரிய பள்ளிகளுக்கும் , அந்நகலினை இயக்ககத்திற்கும் உடன் அனுப்ப கல்வி அலுவலர்களுக்கு - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 
மாணவர்களின் மனநிலையை புரிந்து பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை

"மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும்" என, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சியில் அறிவுரை வழங்கப்பட்டது.

டி.இ.டி., தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், ஆசிரியர்களாக சேர்ந்துள்ளனர். புதியதாக பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பணியிடை பயிற்சி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  கடந்த 2 நாட்களாக நடந்தது.

பயிற்சி முகாமில், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தா பேசியதாவது: புதியதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களின் செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும். அனைத்து துறையிலும் வல்லுநர்களை உருவாக்குவது, ஆசிரியர்களாகிய நீங்கள் தான். 

பணம் ஈட்டுவது பெரிய விஷயமல்ல, பெயர் ஈட்டுவது தான் சிறப்பானது.மாணவர்களின் குணநலன்கள், மனநிலையை புரிந்து அரவணைத்து, ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கல்வி அறிவை கற்பிப்பதோடு, மன நிலையை நன்கு புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடக்க கல்வி அலுவலர் லட்சுமணன் பேசும் போது, "ஆசிரியர் பணி என்பது சிறப்பான ஒன்று; ஓய்வு பெறும் வரை, உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். சிறந்த சமுதாயத்தை உருவாக்க, மாணவர்களின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது" என்றார்.

முதன்மை கல்வி அலுவலர் வாசு பேசுகையில், "ஆசிரியர்கள், தங்களின் சிறப்பான பணியின் மூலம், மாணவர்கள் சிறந்து விளங்கி, அதன் பயன் சமுதாயத்தை சென்றடைய வேண்டும். இப்பயிற்சியில் கூறப்படும் பல்வேறு கருத்துகளை உள்வாங்கி, நன்றாக பயன்படுத்தி, சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) அர்ஜூனன், ஆர்.எம்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் என். ஆர்ஜூனன், பள்ளி தலைமையாசிரியர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாம், நேற்றுடன் நிறைவடைந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்தும் என எதிர்பார்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:

இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
(மேற்காணும் எண்ணிக்கைகள் கூடுதல் பெற வாய்ப்புண்டு)
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், தொடக்கக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிகளுக்கு கடந்த ஆண்டுக்கான இறுதிகற்பிப்பு மானியம் (ஊதியம்) மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிட்டு வழங்கப்படும். அதன்படி 2012ம் ஆண்டிற்கான கணக்கிடும் பணி உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வருகிற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

இதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் வழங்குவது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணியாகும். இறுதி கற்பிப்பு மானி யம் கணக்கிடும்போது, ஆய்வு செய்யப்படும் பள்ளி வேலை நாட்கள் 220 பூர்த்தி செய்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தலைமையாசிரியர் 5 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி முழு நிதியுதவியுடன் கூடிய முழுமை பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 100 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைத்தொழில் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 2010 ஆக.23க்கு பிறகு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்களுக்கே மானியம் விடுவித்தல் வேண்டும். 

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் தற்காலிக பட்டச்சான்றின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், 2 ஆண்டுக்குள் அசல் பட்டச்சான்றினை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் ஊதியம் குறித்து மாநிலக் கணக்காயரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநிலக் கணக்காயர் மற்றும் துறை அதிகாரிகள் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால் இறுதி கற்பிப்பு மானியத்தை பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தொடர் அங்கீகாரம் ஆணை பெற்ற பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். சுயநிலைப்பிரிவு, சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது. பள்ளி செயலர் நியமனங்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மட்டும் மானியம் கணக்கிடுதல் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது : விழுப்புரம் சி.இ.ஓ. அறிவுரை

 பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஜீன்ஸ் பேன்ட், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுரை வழங்கினார்.


தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற 18,000 பேர்களுக்கு ஆன் லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணையை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 

இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 596 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முறை, பாடத்திட்டம் குறித்த நிர்வாக பயிற்சி முகாம் ஜனவரி 19, 20ம் தேதிகள் என இரு நாள்கள் நடைபெற்றன. 

விழுப்புரத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது. சனிக்கிழமை தொடங்கிய இப்பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி பேசியது:

 மாவட்டத்திலுள்ள 509 அரசு பள்ளியில் பணிபுரியவுள்ள நீங்கள், மாணவர் கல்விக்கு முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் மீது குறை கூறக்கூடாது. பள்ளிக்கு ஆசிரியை, ஆசிரியர்கள் சுடிதார், ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட்டுகளை அணிந்து வரக்கூடாது. ஆசிரியர்கள் சட்டையில் பட்டன்களை முறையாக போட வேண்டும்.
மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க பாடுபட வேண்டும்  என்றார்.  
+2 March - 2013 - Science Practical Exam Instructions | மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க திட்டம்: 50 பேராசிரியர்ளுக்கு நிதியுதவி

அரசு கல்லூரி பேராசிரியர்களிடம், ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில், "சிறிய ஆய்வு திட்டத்தை" அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம், 50 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆய்வுக்கு, 1 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள, அரசு கல்லூரி பேராசிரியர்கள், புதிய ஆய்வுகளை மேற்கொண்டு, கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர, சிறிய ஆய்வு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில், சேர விரும்பும் ஆசிரியர்கள் குறித்து, தகவல்களை அனுப்ப, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

இதில், பேராசிரியர்கள் மேற்கொள்ளும் ஆய்வு தலைப்பு மற்றும் விவரங்கள், ஆய்வினால் சமுதாயத்திற்கு ஏற்படும் பயன் உள்ளிட்ட, தகவல்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களின், எம்.பில்.,-பி.எச்டி., படிப்பின் ஆய்வு தலைப்புகளை, இத்திட்டத்தில் பயன்படுத்த கூடாது. ஒரு ஆண்டிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும். ஆய்வுக்காக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
முடிக்காத நிலையில், ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். அதிலும் முடிக்கவில்லையெனில், சம்பளத்தில் இருந்து, ஆய்வு தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், அரசு கல்லூரி பேராசிரியர், தங்கள் ஆய்வு தகவல்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை, 100க்கும் மேற்பட்ட, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மூவர் குழு இந்த விண்ணப்பங்களிலிருந்து, சிறந்த ஆய்வு தலைப்பை தேர்ந்தெடுக்க, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழு, இத்தலைப்பில் ஆய்வுகள் வந்துள்ளதா, ஆய்வு மக்களுக்கு உதவுமா உள்ளிட்டவை குறித்து, ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது: 

அரசு கல்லூரி ஆசிரியர்களிடம், ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு கல்லூரிகளின் கல்வி, ஆராய்ச்சி தரம் உயரும்; தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளை போல, அரசு கல்லூரிகளும் மேம்படும். இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.
ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன்: அப்துல் கலாம்
"மனித சமுதாயம், மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.


ராமநாதபுரத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசியதாவது: நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன், அடுத்தவர் துன்பத்தை துடைப்பதின் மூலம் மனநிறைவோடு வாழலாம். 

மகாத்மா காந்திக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, அவரது தாயார், "மகனே, உன் வாழ்வில் அடுத்தவரின் துன்பத்தை துடைத்து, அவரது வாழ்வில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், நீ மனிதனாக பிறந்ததற்கான பலனை அடைந்து விடுவாய்" என்றார். 

எனவே, அந்த அறிவுரையை பின்பற்றி, நீங்கள் அடுத்தவர் துன்பப்படும் வேளையில், அவர்களது துன்பங்களை துடைத்து, துணையாக இருக்க வேண்டும். உலகில் யாராக இருந்தாலும் சாதிக்க முடியும், அதற்கு நான்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி இவைகள் இருந்தால் சாதனை எளிது, என்றார். 

அணு மின்சாரத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என, கலாமிடம் சிலர் கேட்டதற்கு, அவர், "நீர் மின்சாரம், அணு மின்சாரம் தூய்மையானது, மற்றவை சுற்றுசூழலை பாதிக்கக்கூடியது. இதனால், அணுமின்சாரத்தை வரவேற்கிறேன்,'' என்றார். 

மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை, நான் ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன், இதுதான் எனக்கு மனநிறைவை தருகிறது என்றார்.

எல்லையில் ராணுவ வீரர்கள் தலையை வெட்டி எடுத்த சென்ற சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, மனித சமுதாயம் மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என்று கலாம் தெரிவித்தார்.

>பணியாற்றிய கல்லூரியை மறக்காத ஜனாதிபதி பிரணாப்

"ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தான் அரசியலுக்கு வருவதற்கு முன், பணியாற்றிய கல்லூரியையும், அதில் படித்த மாணவர்களையும், இன்னும் மறக்கவில்லை" என, அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். அரசியலில் நுழைவதற்கு முன், 1960ம் ஆண்டுகளில், மேற்குவங்கத்தின் 24-பர்கானா மாவட்டம், வித்யா நகர் கல்லூரியில், இந்திய அரசியல், இந்திய சட்டம் ஆகிய, பாடங்களுக்கான பேராசிரியாக பணியாற்றினார்.
இதன்பின், அரசியலுக்குள் நுழைந்து, படிப்படியாக வளர்ச்சி அடைந்து, தற்போது, நாட்டின் முதல் குடிமகனாகி விட்டார். இந்நிலையில், இந்த கல்லூரியின், பொன்விழா கொண்டாட்டங்கள் நேற்று நடந்தன. இந்த விழாவில், பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, கல்லூரியின், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
விழாவுக்கு வந்திருந்த, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஸ்வபன் ராய், சுதாகன்சு கரார் ஆகியோர் கூறியதாவது: நாங்கள், பிரணாப் முகர்ஜியிடம், பாடம் படித்தவர்கள். எங்களை, இப்போதும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, அவருக்கு, அபார ஞாபக சக்தி உள்ளது.
இந்த கல்லூரியிலிருந்து, விரைவிலேயே சென்று விட்டாலும், இந்த கல்லூரியையும், அதில் படித்த மாணவர்களையும், அவர் எப்போதும் மறந்தது இல்லை. அரசியலில், மிகப் பெரிய பதவிகளை வகித்தபோது கூட, முன்னாள் மாணவர்களான, எங்களுடன், அவர் தொடர்பில் இருந்தார்.
எங்களின் நிலை குறித்தும், கல்லூரியின் வளர்ச்சி குறித்தும், அவ்வப்போது கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கல்லூரியில் பணியாற்றியபோது, எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார். இப்போதும் அப்படித் தான் இருக்கிறார்.
இது தான், அவரது வெற்றியின் அடையாளம். கல்லூரியின் வளர்ச்சிக்கு, பிரணாப்பின் பங்கு, மிக முக்கியமானது. சில மாணவர்கள் மட்டுமே படித்து வந்த, இந்த கல்லூரியில், தற்போது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இதற்கு, பிரணாப்பும் ஒரு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

B.T's Can get Incentive for M.Phil Without M.ed GO has been Released Recently 

கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...

         தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
        ஏப்ரல்2013 முதல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு ஆரம்பநிலை பள்ளிகளில்(primary level) செயல்படுத்தஉள்ளது. கலை மற்றும் அழகியல் (arts and aesthetics) கல்வித்துறையின் கீழ் இந்த பைலட்திட்டம் செயல்படும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) NCF 2005 பரிந்துரை படி இது தொடங்கபடுள்ளது, பொருள் உணராமல் கற்கும் முறையை மற்றுவது இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி கற்பிப்பதற்கான செயல் முறை பயிற்சி மே2011 இல் தொடங்கப்பட்டது. RTE சட்டம் 2009 படி, பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை, அதற்கு பதிலாக NCERT பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கற்பிக்கும் தரத்தை உயர்த்த உள்ளது.

+2 March - 2013 - Science Practical Exam Instructions

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20% ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 2013-14 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



 
 
Posted: 20 Jan 2013 06:24 AM PST
Posted: 20 Jan 2013 01:06 AM PST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேதி முதற்கட்டத் தேர்வு பிப்.16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெற இருந்தது.

plus two | +2 Study Materials


வளர் இளம்பருவ மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள்: முதல்வர்

வளர் இளம்பருவ மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மன பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மொத்தம் 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இன்றைய உலகில் வளர் இளம் பருவத்தினர், வறுமை, குடும்ப பிரச்சினை மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களால் பல்வேறான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால், படிப்பில் கவனம் சிதறுதல், தவறான வழிக்கு செல்லுதல் மற்றும் தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வாழ்வில் நடக்கின்றன.

எனவே, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம்(counselling centre) என்று 31 மையங்களும், சென்னையில் 3 மையங்களுமாக சேர்த்து, மொத்தம் 34 மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கென 2 கோடியே 51 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவைத்தவிர, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறான கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, சென்னையிலுள்ள பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்புக்கான இருக்கைகளை 35லிருந்து 58ஆக உயர்த்தவும், 27 பல் மருத்துவ ஆசிரியர்கள், 6 மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் 3 மருத்துவம் சாராத பணியிடங்களைத் தோற்றுவிக்க அனுமதியளித்து, இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அக்கல்லூரி வளாகத்தில், 5 கோடி செலவில், 3 நிலைகள் கொண்ட, அடுக்குமாடி கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.