Monday, January 21, 2013


B.T's Can get Incentive for M.Phil Without M.ed GO has been Released Recently 

கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...

         தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Research and Training – NCERT) புது தில்லியில் இருபது பள்ளிகளில் கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
        ஏப்ரல்2013 முதல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு ஆரம்பநிலை பள்ளிகளில்(primary level) செயல்படுத்தஉள்ளது. கலை மற்றும் அழகியல் (arts and aesthetics) கல்வித்துறையின் கீழ் இந்த பைலட்திட்டம் செயல்படும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) NCF 2005 பரிந்துரை படி இது தொடங்கபடுள்ளது, பொருள் உணராமல் கற்கும் முறையை மற்றுவது இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி கற்பிப்பதற்கான செயல் முறை பயிற்சி மே2011 இல் தொடங்கப்பட்டது. RTE சட்டம் 2009 படி, பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை, அதற்கு பதிலாக NCERT பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கற்பிக்கும் தரத்தை உயர்த்த உள்ளது.

+2 March - 2013 - Science Practical Exam Instructions

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20% ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 2013-14 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



 
 
Posted: 20 Jan 2013 06:24 AM PST
Posted: 20 Jan 2013 01:06 AM PST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேதி முதற்கட்டத் தேர்வு பிப்.16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெற இருந்தது.

plus two | +2 Study Materials


வளர் இளம்பருவ மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள்: முதல்வர்

வளர் இளம்பருவ மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மன பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மொத்தம் 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இன்றைய உலகில் வளர் இளம் பருவத்தினர், வறுமை, குடும்ப பிரச்சினை மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களால் பல்வேறான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால், படிப்பில் கவனம் சிதறுதல், தவறான வழிக்கு செல்லுதல் மற்றும் தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வாழ்வில் நடக்கின்றன.

எனவே, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம்(counselling centre) என்று 31 மையங்களும், சென்னையில் 3 மையங்களுமாக சேர்த்து, மொத்தம் 34 மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கென 2 கோடியே 51 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவைத்தவிர, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறான கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, சென்னையிலுள்ள பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்புக்கான இருக்கைகளை 35லிருந்து 58ஆக உயர்த்தவும், 27 பல் மருத்துவ ஆசிரியர்கள், 6 மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் 3 மருத்துவம் சாராத பணியிடங்களைத் தோற்றுவிக்க அனுமதியளித்து, இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அக்கல்லூரி வளாகத்தில், 5 கோடி செலவில், 3 நிலைகள் கொண்ட, அடுக்குமாடி கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment