Saturday, January 19, 2013

 

RTI- Details

    நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே "SENIORITY"யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது மற்றும் உயர்நிலை/மேல்நிலை நிதியுதவிப்பள்ளிகளில் (6, 7, 8) வகுப்புகளுக்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதம்.

நிதியுதவி தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் (FTG) மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள்

      25.01.2013 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 24.01.2013 அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாக்காளர் உறுதி மொழி எடுக்க அரசு உத்தரவு 

பைக்கா தேசிய விளையாட்டுப் போட்டி - மாணவர் ஆர்வம் குறைகிறது- Dinamalar

    "பைக்கா" தேசிய விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் சான்று தரப்படாததால், கிராமப்புற மாணவர்களிடம், போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.

         கிராமப்புற மாணவர்களிடையே, விளையாட்டில் ஆர்வத்தை தூண்டும் வகையில், பைக்கா விளையாட்டு போட்டிகள் நடத்த, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஒன்றிய,மாவட்ட, மாநில அளவில் குத்துசண்டை, கத்தி சண்டை, எடை தூக்குதல், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட, 11 வித போட்டிகள் நடக்கிறது.
         மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், தமிழக அணி சார்பில், தேசிய போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர். அங்கு, முதல், இரண்டாம் பரிசு, வெள்ளி பதக்கம் பெறும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்-பார்ம்-2, சான்று வழங்க வேண்டும்.
         முன்னுரிமை கிடைக்கும்: இச்சான்றுகளை பெற்று வரும் மாணவ, மாணவிகள் பிளஸ் 2க்கு பின், இன்ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர, முன்னுரிமை கிடைக்கும். இது தவிர, மத்திய, மாநில அரசு நிறுவன வேலைவாய்ப்புகளிலும், முன்னுரிமை தரப்படும். இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, பைக்கா தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்தது. சில ஆண்டுகளாக,தேசிய போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வழங்கப்படும்-பார்ம்-2, சான்றுகள் வழங்குவதில்லை.
     பள்ளிகள் மூலம் மாணவர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பித்து, பல ஆண்டுகளாகியும், சான்று கிடைக்காமல் பலர் காத்திருக்கின்றனர். இதனால், நாளுக்கு நாள், பைக்கா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, கிராமப்புற மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது.
       சான்று பெறுவதில் சிக்கல் ஏன்?: விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, பங்களிப்பு சான்று உடனே வழங்குவோம். அந்த சான்று எண்ணை குறிப்பிட்டு, எந்ததேதியில், என்ன விளையாட்டிற்காக, என்ன பரிசு கிடைத்தது என, குறிப்பிட்டு, மாணவர்களின் விலாசத்துடன் எழுதி, பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர் ஒப்புதலுடன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
         அங்கிருந்து, தேசிய ஒலிம்பிக் ஆணையத்திற்கு அனுப்புவோம். அங்கிருந்து-பார்ம்-2, சான்றுகள் வழங்கப்படும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், இவற்றை முறையாக கடைபிடிக்காததால், இச்சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
RTE 2009 Awareness Competitions to 1 to 11 std Students

       மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், இம்மாதம், 21 முதல், பிப்., 6 வரை, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பல்வேறு கலை இலக்கிய போட்டி நடக்க உள்ளது.இதில், ஒன்று முதல் எட்டு வகுப்புகள் ஒரு பிரிவாகவும்; ஒன்பது முதல், 10 வகுப்புகள் வரை, ஒரு பிரிவாகவும்; 11 மற்றும் 12 வகுப்பு வரை, ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப் படுவர். இதில், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு, முறையே, 500, 300, 200 ரூபாயும்; மாவட்ட அளவில், 5,000, 3,000, 2,000 ரூபாயும்; மாநில அளவில், 20 ஆயிரம், 10 ஆயிரம், 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. பள்ளி அளவிலான போட்டிகள், இம்மாதம், 21 முதல், 25 வரையிலும்; ஒன்றிய அளவிலான போட்டிகள், 28 முதல், 30 வரையிலும்; மாவட்ட அளவிலான போட்டிகள், பிப்.,முதல், 6 வரையிலும் நடக்கின்றன.

சிகப்பு மையினால் திருத்துவது மாணவர்கள் மனதை மிகவும் பாதிக்கிறது: ஆய்வுகள்


       மாணவர்களின் வீட்டுப் பாடம், தேர்வுகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் சிவப்பு மையினால் திருத்துவது, மாணவர்களின் மனதை மிகவும் பாதிக்கிறதாம். இது லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
          குழந்தைகள், சிறுவர்களின் நோட்டுப் புத்தகங்களில் சிவப்பு மையினால் ஆசிரியர்கள் திருத்தம் செய்வது, மனதை மிகவும் பாதிக்கிறது என்றும், நீல வண்ணம் போன்ற கண்ணை உறுத்தாத வண்ண மையினால் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது அது அவ்வளவாகத் தெரிவதில்லை என்றும் டெய்லி மெயில் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

          கொலராடோ பல்கலையின் சமூகவியலாளர்கள் ரிச்சர்ட் டியூக்ஸ், ஹீதர் அல்பனெசி ஆகியோர் ஒரு குழுவாக இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

        சிகப்பு வண்ண மையினால் போடப்படும் திருத்தங்கள் ஆசிரியர்-மாணவர் உறவை மோசமாக்குகிறது; மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று கூறியுள்ளனர்.

        கடந்த 2008ல் நூற்றுக்கணக்கான பள்ளிகள், தங்கள் ஆசிரியர்கள் சிகப்பு மை பயன்படுத்துவதைத் தடை செய்துவிட்டன. அது மாணவர்களை அச்சுறுத்துவதாகக் கூறின. ஆனால், உண்மைக் கல்வி இயக்க தலைவர் கிரிஸ் மெக்கவர்ன் இந்த ஆய்வு முடிவுகளை கேலி செய்துள்ளார். என்னுடைய 35 வருட பணியில் பெரும்பாலான மாணவர்களும் தங்கள் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் திருத்தங்களை  உன்னிப்பாகக் கவனிக்க சிவப்பு மையே சிறந்தது. அதைத்தான் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிவேன் என்றார்.

        இது ஒரு முட்டாள்தனமான ஆய்வாகத் தெரிகிறது. பச்சை அல்லது நீல நிற மை, அவ்வளவு தெளிவாகத் தெரியாது என்றார்.

        சிகப்பு என்ற வண்ணம், எச்சரிக்கை, பாதுகாப்பு, கோபம், தடுப்பு உள்ளிட்ட மன எண்ணங்களை வெளிப்படுத்துகிறது என்பது கொலராடோ பல்கலையின் ஆய்வு முடிவு.

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு: இந்த மாத இறுதிக்குள் முடிவு வெளியீடு


          மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
        விரிவுரையாளர்களுக்கான மாநில அளவிலான தேர்வை கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வை 51,500 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.

        இதுதொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியது:-  மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின் படி,  மானியக் குழு நேரில் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இந்த நடைமுறை முடிந்ததும் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள் மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு - அதிர்ச்சி தகவல் - Dinamalar

       அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் சொல்லி கொள்ளும் அளவிற்கு உள்ளதாகவும் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
         கல்வி தரம்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில் 10 ல் 5 கிராமப்புற மாணவர்களுக்கு எளிய கணக்குகளை கூட போட தெரியவில்லை என ஆய்வு அறிக்கை கூறுகிறது. நாட்டின் கல்வி தரம் குறித்து மிகப் பெரிய கேள்விக்குறியை ஆண்டு கல்வி அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கையின்படி 2010ல் பாதிக்கும் மேற்பட்ட ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 2ம் வகுப்பு பாடங்களை படிக்கும் அளவிற்கே திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

          2012ம் ஆண்டு இந்த அளவு 46.8 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்துள்ளதாகவும், 2010ல் 50.7 சதவீதமாக இருந்த மாணவர்களின் படிக்கும் திறன் 2012ல் 41.7 சதவீதமாக குறைந்துள்ளது.

          அமைச்சர் தகவல்: விரிவான விளக்கங்கள் மற்றும் தெளிவான கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள குறைபாடே அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவதற்கான காரணம் என கூறப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் தெரிவித்துள்ளார். கூடுதல் சுமையை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என்ப‌தற்கே இவ்வாறு நடைபெறுவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வு அர்த்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

     மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் 3 ஆண்டுகளுக்க ஒரு முறை புள்ளி விபரம் மற்றும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், அதில் நாட்டின் கல்வி தரம் சிறப்பாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

        ஆய்வு அறிக்கை: நாடு முழுவதும் 567 மாவட்டங்களில் உள்ள 3 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் வாசிக்கும் திறன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையின்படி, 5ம் வகுப்பு படிக்கும் 10 ல் 7 குழந்தைகளுக்கு சாதாரண இரண்டு இலக்க கழித்தல் கணக்குகள் கூட தெரியவில்லை என தெரிய வந்துள்ளது.

          2010ல் 70.9 சதவீதமாக இருந்த மாணவர்களின் கல்வி தரம் 2012ல் 53.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அடிப்படை கணக்குகள் குறித்த கல்வி அறிவு திறன் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

             அரசு நிலைப்பாடு: கல்வி தரம் குறித்த ஆய்வு அறிக்கை ஒருபுறம் இருக்க 2012ம் ஆண்டை கணித ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆய்த்தி உள்ளது. கல்வி தரம் மற்றும் அதற்கான விதிமுறைகள் 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின்படி கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான பள்ளி குழந்தைகள் குறைந்தபட்சம் மூன்றாம் தரத்திற்கும் கீழாகவே உள்ளனர்.

         அதே சமயம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் தர அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CCE Extends to 9th standard

9-ஆம் வகுப்புக்கும் வகுப்புக்கும் வருகிறது முப்பருவத் தேர்வு முறை!

     தமிழ்நாட்டில் இதுவரை ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முப்பருவத் தேர்வு முறை வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


     தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று பருவங்களுக்கும் தனித்தனியே புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. காலாண்டுப் பருவத்துக்கு அந்தப் பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டு வந்தால் போதும். 
          அரையாண்டுக்கு அதற்குரிய பாடப்புத்தகங்கள் மட்டும் கொண்டு வந்தால் போதும். மூன்றாவது பருவத்துக்கும் இதே முறைதான். இதனால், பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை தூக்கிச் செல்லுகின்ற சிரமம் பெரிதும் குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (சிசிஇ) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் வளரறி மதிப்பீட்டு முறை, தொகுத்தறி மதிப்பீட்டு முறை என்ற இரு பிரிவுகளின்கீழ் மாணவர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவத் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி, மத்திய கல்வி ஆலோசனை போர்டு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை 2013-14 கல்வியாண்டிலிருந்து 10-ஆம் வகுப்புக்கும் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார் அவர்.

      தமிழகப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் முப்பருவத் தேர்வு முறை குறித்து பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் என்ன கூறுகிறார்கள்? “ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவத் தேர்வு முறை கொண்டு வருவதன் மூலம் 11-ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு குரூப் ஒதுக்கீடு செய்வது சிரமமாக இருக்கும்” என்கிறார், தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எம்.எஸ். பிரபாகரன். “பிளஸ் ஒன் படிப்பதற்கு பத்தாம் வகுப்புத் தேர்ச்சி முக்கியமானது. எனவே. தற்போதுள்ள முறையே தொடர வேண்டும்” என்கிறார், அதே பள்ளியைச் சேர்ந்த கணித ஆசிரியர் தாமஸ்.

        “முப்பருவ முறை பாடத்திட்டத்தில் படிக்கும் போது, பாடங்களை மாணவர்கள் எளிதாகக் கற்க முடியும். முடிந்து போன பருவத்தின் பாடங்களை மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், சராசரி மாணவர்களும் எளிதாகத் தேர்ச்சி பெற முடியும்” என்கிறார், மாதவரம் மாத்தூர் செயின்ட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியை சரளா. “முப்பருவக் கல்வி முறையினால் படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்களும் மற்ற திறமைகளின் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்கிறார், தாம்பரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரேவதி. “தற்போதுள்ள முறைப்படியே பத்தாம் வகுப்புத் தேர்வு இருந்தால்தான் எங்களது முழுத் திறமையையும் காட்ட முடியும்” என்கிறார், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் உமேஷ். “முப்பருவத் தேர்வு முறை எளிமையாக உள்ளது. தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதாக உள்ளது. இதனை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்” என விரும்புகிறோம் என்கிறார்கள், 9-ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி, பிரியங்கா.

        “9 -ஆம் வகுப்பிலும் முப்பருவத் தேர்வு முறையைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. தற்போதுள்ள பாடத்திட்டத்தையே மூன்று பருவங்களாகப் பிரித்துத் தருவது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தாது. அதற்கு மாறாக, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினால் கல்வித் தரம் உயரும்” என்கிறார், கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்.

         “முப்பருவத் தேர்வு முறையின் முக்கிய அம்சம் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பது. வளரறி மதிப்பீட்டு முறை, தொகுத்தறி மதிப்பீட்டு முறை மூலம் மாணவர்களின் முழுத் திறமையையும் மதிப்பிட முடிகிறது” என்பது பல கல்வியாளர்களின் பொதுவான கருத்து. காலத்துக்கேற்ற மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை. மாற்றம்தானே நிரந்தரம்!

தன்னுடன் இணைப்பு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


  இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

        இணைப்பு பெறாத மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எந்தப் பதிவும், எந்தத் தேர்வும் நடத்தப்படாது. www.tnmgrmu.ac.in என்ற பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியலைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் பெயர்கள்
* தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்
கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் - வேலூர்
* பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - கோவை
* ஐ.ஆர்.டி பெருந்துறை மெடிக்கல் காலேஜ் - பெருந்துறை
* ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - கன்யாகுமரி
* மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - மேல்மருவத்தூர்
* கற்பக வினாயகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் - காஞ்சிபுரம்
* சென்னை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர் - திருச்சி
* ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - மாங்குடி(அருகில்).
* தனலட்சுமி சீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - பெரம்பலூர்
* அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - சென்னை
* கற்பகம் பேகல்டி ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் - கோயம்புத்தூர்.

சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?


    பள்ளிகளில், குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய திறன்களில், அலட்சியப்படுத்தப்படுவதில் முக்கியமான ஒன்றாக திகழ்வது வாசிக்கும் திறன்தான்.

        பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளிகள், உள்ளார்ந்து வாசிக்கும் திறனை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
       ஒரு சிறந்த கற்றல் செயல்பாட்டில், வாசிக்கும் திறன் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வாசிப்பு என்பது இல்லாமல், படித்தல் என்ற செயல்பாடே கிடையாது.
        வாசிக்கும் திறன் என்பது ஒரு குழந்தையிடம் பயிற்சியின் மூலமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி, தொடக்கக் கல்வி நிலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒரு பத்தியை சிறப்பாக படிப்பதற்கு, சில முக்கிய திறன்கள் தேவை. அந்த திறன்கள், முறையான உதவியின் மூலமே பெறப்பட முடியும்.
         முதலில், வகுப்பறையில் சக மாணவர்களின் முன்பாக, பயமின்றி வாசிக்கும் பழக்கம் ஒரு குழந்தைக்கு ஏற்பட வேண்டும். இந்த தைரியத்தை, ஒரு ஆசிரியரின் தொடர்ச்சியான உற்சாகத்தின் மூலமாகவே குழந்தை அடையும். குழந்தையின் சிறு தவறுகளை ஆசிரியர் பெரிதுபடுத்துதல் கூடாது. வாசிக்கும்போது, தனது தவறுகளுக்காக தான் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் குழந்தைகளுக்கு இருத்தல் கூடாது. இதை ஆசிரியர் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், இந்த பயம் இருந்தால், குழந்தையானது முன்னேற்ற பாதையில் செல்வது தடைபடும்.
       வாசிக்கும் திறனை வளர்த்தல் என்பது, பதட்டமற்ற மற்றும் தெளிவான மனோநிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அமைதியான மற்றும் தெளிவான மனோநிலையை, நல்ல விளையாட்டுக்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலமாக பெறலாம். மேலும், ஆசிரியரின் பங்களிப்பும் இன்றியமையாதது.
      வேகமாகவும், அவசரமாகவும் வாசிப்பதென்பது, படித்தல் செயல்பாட்டிற்கு உதவாது. ஒரு விஷயத்தை சிறப்பாக உள்வாங்க வேண்டுமெனில், நிதானமாகவும், பொறுமையாகவும் வாசிப்பது முக்கியம்.
         ஆரம்ப வகுப்பிலிருந்தே, வாசிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையாக புரிந்துகொள்வதோடு, அதன் தொடர்புடைய அர்த்தங்களையும் புரிந்துகொள்ள பழக வேண்டும். இதன்மூலம், படிக்கும் விஷயத்தைப் பற்றிய, பரவலான மற்றும் தெளிவான புரிதல் ஏற்படும்.
        ஒவ்வொரு பள்ளியும், கட்டாயம் ஒரு நூலகத்தை வைத்திருக்க வேண்டும். ஒருவேளை, தான் படிக்கும் பள்ளியில் நூலகம் இல்லையெனில், பள்ளிக்கு வெளியேயுள்ள ஊர் பொது நூலகம் அல்லது மாவட்ட மைய நூலகம் ஆகியவற்றில் உறுப்பினராகி, ஒர மாணவர், வாசிக்கும் பழக்கத்தை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை, நூலகத்தையே அணுக முடியாத நிலை ஏற்படினும்கூட, தனது பாடப் புத்தகங்களையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி, வாசிக்கும் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கையில், தெரியாத வார்த்தைகளை அறிந்துகொள்ள, அகராதியையும்(dictionary) அருகே வைத்துக் கொள்ளலாம்.
       சிறப்பான வாசித்தல் திறனை வளர்த்துக் கொள்வதானது, ஒரு மாணவரின், ஆர்வம் மற்றும் விடா முயற்சியினை பொறுத்தே அமைகிறது என்பதை எப்போதும் மறக்கலாகாது.

No comments:

Post a Comment