Friday, April 18, 2014

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தேர்வு கட்டணம் ஆன்லைனில் செலுத்த
ANNAMALAI UNIVERSITY EXAM FEE ONLINE PAYMENT CLICK THE BELOW LINK

கிளிக் செய்க

முதுகலை தேர்வுகள் கால அட்டவணை
POST GRADUATE COURSES EXAM TIMETABLE

கிளிக் செய்க

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர் விபரங்கள் சேகரிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவை மேற்கொள்ள, விபரங்களை சேகரிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கும் பொழுது ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே 10ம் வகுப்பு முடித்து மதிப்பெண் சான்றுகளை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 12ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், பதிவெண், முகவரி, ஏற்கனவே பதிந்த வேலை வாய்ப்பகத்தின் பதிவெண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் முறையாக பதிவு செய்யும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்கள் அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், பதிவெண், பிறந்த தேதி, பாலினம், அப்பா, அம்மா பெயர், முகவரி, மாவட்டம், ரேஷன் கார்டு எண், சாதி சான்றிதழ் எண், மதம், உயர்கல்வி படிக்க விரும்புகிறீர்கள், எனில், எந்த வகையான படிப்பு, அதை விடுத்து தொழில் செய்ய விரும்பினால், சொந்த தொழிலா, பிறரிடம் வேலைக்கு செல்கிறீர்களா? ஆகிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த விபரங்களை தலைமை ஆசிரியர்கள் வருகிற மே 2-ம்தேதிக்குள் சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கணினி ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அதிகாரிகளுடன் ஆலோசித்து, பதிவை ஆன்லைனில் செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு அடுத்த மாதம் விண்ணப்பம் வினியோகம்?

"தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம்" என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக மாநில ஒதுக்கீட்டில் 2,172 இடங்கள் உள்ளன.

இவை, இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, தமிழகத்தில் உள்ள 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 950 அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் தான் வழங்கப்படுகிறது. 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியாக உள்ளது. இதையொட்டி, இந்த கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப வினியோகம் மே இரண்டாவது வாரத்தில் துவங்கும் என, தெரிகிறது. "விண்ணப்பக் கட்டணம், வினியோக தேதி உள்ளிட்ட முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
PRESIDING OFFICERS COMPLETE WORK CHART

புதியதாக தேர்தலுக்கு செல்லும் ஆசிரியர்கள் பயப்பட வேண்டியதே இல்லை இதை பிரிண்ட் செய்து உடன் எடுத்து செல்லவும்.

CLICK HERE
SEVENTH PAY COMMISSION PROJECTED / EXPECTED PAY STRUCTURE BY VARIOUS SITES: COMPARISON TABLE

6 வது ஊதியக்குழு அறிக்கையின்படி ஊதிய நிர்ணயம் செய்யும்போது 1.86 ஆல் பெருக்கப் பட்டதற்கான விளக்கம்:

Did you know how the 6th CPC Multiplication Factor of 1.86 was derived?

The 6th Pay Commission had recommended a Multiplication Factor of 1.74, but the Central Government chose to change it to 1.86. One of the reasons for this modification was the intense pressure from various Federations of Central Government Employees. It has to be mentioned at this point that all the federations had presented demands to the Government to raise the minimum basic pay to Rs. 10,000.
Exactly how did the Government arrive at 1.86? Here is an explanation how -

Let us assume the Basic Pay, as of 01.01.2006, as 100%. Let’s take the Dearness pay (post the 50% DA Merger) as 50%. Let us also take into account the 24% Dearness Allowance that was given before 01.01.2006.
If you add Basic Pay and Dearness Pay and calculate 24% of it, then you’d get 36%. (100 + 50 = 150 / 24 x 100 = 36)
100% + 50% + 36% = 186%
This number is being taken for calculations as 1.86.

At the time of 6th CPC Pay Fixation, the last drawn Basic Pay under 5th CPC was multiplied by 1.86 and rounded off. It was also explained that a new entity named Grade Pay was created and a sum total of this was the new Basic Pay.
Hence, it was impossible to consider 1.86 as the true yardstick. For example, for a basic pay of Rs. 3050…
3050 x 1.86 = 5680 (After rounded off)
Corresponding Grade Pay for 3050 is 1900,
Band Pay 5680 + Grade Pay 1900 = Basic Pay 7580
5th CPC basic pay = 3050
6th CPC basic pay = 7580
10–ம் வகுப்பு அறிவியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு 3 மதிப்பெண்:

கடந்த 7–ந்தேதி நடந்த இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதி கேள்வி எண் 14–ல், ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில் ஆடியின் வகை என்ன என கேட்கப்பட்டது. இதற்கு ‘குவிலென்ஸ்’ என்பது விடை. ஆனால் ‘குழிலென்ஸ்’ என்ற வேறொரு விடையும் உள்ளது. எந்த கேள்விக்கு எந்த பதிலை எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இரு மதிப்பெண் பகுதி, தமிழ் வழி கேள்வி எண்.29–ல் வாகனங்களில் பயன் படுத்தப்படும் எரிபொருள் யாவை ...... என்ற கேள்விக்கு, ஆங்கில வழி கேள்வித்தாளில் பயோ–பியூல் என கேட்டு தமிழ் வழி கேள்வித்தாளில் ‘உயிரி எரிபொருள்’ என கேட்காமல் பொதுவாக கேட்டு விட்டனர். இதற்கு மாணவர்கள், பெட்ரோல்–டீசல் என விடை எழுதினர். இதனால் மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில் இந்த கேள்விக்கு 2 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


விடைத்தாள் திருத்தும் மையங்களில் (AE)க்களுக்கு பயன்படும் வகையில் 1பக்கத்தில் கணித விடைக்குறிப்பு :

DOWNLOAD SSLC APRIL 2014 MATHEMATICS ANSWER KEY FOR (AE) 1PAGE CLICK HERE

Thanks to Mr.KUMAR M.Sc,M.PHIL,.B.Ed B.T ASST IN MATHS,ST.JOHAN HRSEC SCHOOL  MELNARIYAPPANUR VILLUPURAM DT.


Monday, April 14, 2014


LIST OF POLLING STATIONS 

 நீங்கள் பணி புரிய உள்ள இடத்தை அறிந்து கொள்ளுங்கள் 

Tuesday, April 8, 2014

SSLC PUBLIC April-2014 

Question and Key 

new  by way to success

இயக்குனர் உத்தரவு

              தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டில் கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது அளித்தல் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

10th Exam Questions With Key Answers

March - 2014 Expected Key Answers

தபால் ஓட்டு நடைமுறை விதிகளால் அதிருப்தி : ஓட்டு வீணாகும் பரிதாபம்

           தபால் ஓட்டுக்காக வழங்கப்படும், படிவம் - 12ல், வாக்காளர் அடையாள எண் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஒட்டு மொத்த போலீசாரும், தபால் ஓட்டு போட முடியாமல் போவதாக புலம்புகின்றனர். தமிழகத்தில் வரும், 24ம் தேதி நடக்கும், லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டு பதிவாக, பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

           குறுகிய நாட்களே...: பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 100 சதவீதம், ஓட்டுப்பதிவு நடக்க, 1.01 லட்சம் போலீசார், தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும், குறுகிய நாட்களே உள்ளதால், தலைவர்கள் பாதுகாப்பு, முக்கிய பிரமுகர் பாதுகாப்பு, இரவு ரோந்து, பிரசார சுற்றுப்பயண பாதுகாப்பு, பொதுக்கூட்டம், மாநாடு, கோவில் திருவிழா மற்றும் வழக்கமான பணிகளில், உள்ளூர் போலீசார் தவித்து வருகின்றனர். இதனால், இவர்கள் ஓட்டளிக்க வசதியாக, தபால் ஓட்டு முறை அமலில் உள்ளது. தபால் ஓட்டு அளிக்க விரும்பும் போலீசாருக்கு, அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு மூலம், படிவம் - 12 வழங்கப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில், "தொகுதி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வரிசை எண், பிரிவு எண், வாக்காளர் அடையாள எண், ஓட்டுச் சீட்டை அனுப்ப வேண்டிய முகவரி' போன்றவற்றை குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட லோக்சபா தொகுதியின், தேர்தல் நடத்தை அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அந்த அதிகாரியின் பரிசீலனை படி, ஓட்டளிக்க விரும்பும் போலீசாருக்கு, தபால் மூலம் அவர்களின் முகவரிக்கு, ஓட்டுச் சீட்டை அனுப்பி வைப்பர். சமீபகாலமாக, 1961 தேர்தல் விதிப்படி, படிவம் - 12ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, போலீசாரால் சேகரிக்க முடியாமலும், இருவரிடம் சான்றிதழ் பெற முடியாமலும், ஓட்டளிக்கும் தகுதியை இழக்கின்றனர்.
 
           போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த தேர்தல் வந்தாலும், கட்சியினர் பிரசாரத்தில் துவங்கி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, தொகுதி வாரியாக, ஓட்டுப்பதிவு மையங்களில் வைத்து, திருப்பி எடுத்து வருவது வரை, அனைத்து பணியும் போலீசாருக்கு உள்ளது. ஓட்டுப்பதிவின் போது, வருவாய்த் துறை அதிகாரிகளை போலவே, ஓட்டுப்பதிவு சதவீதத்தை கண்காணித்து, தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
 
      எட்டாக்கனி தவிர, ஓட்டுப்பதிவுக்கு முன்னும், பின்னும், பணம் பட்டுவாடா, கட்சி சார்பாக ஓட்டுப்பதிவுக்கு தடை செய்வோர் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இவ்வளவு பணிகளுக்கு இடையே, தபால் ஓட்டு என்பது, போலீசாருக்கு எட்டாக்கனியாக உள்ளது. தேர்தல் நடத்தை அலுவலருக்கு, விண்ணப்பிக்கும் முறையில் கேட்கப்பட்டுள்ள, தொகுதி பெயரை கூட எளிதாக குறிப்பிட்டு விடலாம். வாக்காளர் பட்டியல் எண் மற்றும் தேவையற்ற விவரங்களை, பல்வேறு பணிகளுக்கு இடையே சேகரிக்க முடிவதில்லை. இதனால், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என, பல தேர்தல்களில் ஓட்டளிக்க முடியாமல் கடந்து வந்துள்ளோம். தேர்தலில், போலீசார் மற்றும் பல அரசு அதிகாரிகள் ஓட்டு, 
வீணாகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Friday, April 4, 2014

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது
10% அகவிலைப்படி 3 மாத நிலுவைத் தொகையை (ஜனவரி, பிப்ரவரி, மார்ச் - 2014) உடனே வழங்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது
GO NO 96 DATE 03.APRIL 2014

நீங்கள் வாக்குசாவடி அலுவலரா? PO, P1, P2, P3? - உங்களுக்கான பணி விபரம்


CLICK HERE for Presiding Officers Training Video for EVM operations

PDF Format 1



Important 100 Point PDF Format 2 

வாக்குச் சாவடி அலுவலர் I, II & III-கான பணி விபரம்


உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொடுத்து வரிசை எண் மற்றும் பாகம் எண்ணைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

CLICK HERE


Tuesday, April 1, 2014

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள் (ALL SUBJECTS) :
  1. MATHS TM
  2. MATHS EM
  3. PHYSICS TM
  4. PHYSICS EM
  5. CHEMISTRY TM
  6. CHEMISTRY EM
  7. ZOOLOGY TM
  8. ZOOLOGY EM
  9. COMP.SCIENCE TM
  10. COMP.SCIENCE EM
  11. ECONOMICS TM
  12. ECONOMICS EM
  13. COMMERCE TM
  14. COMMERCE EM
  15.  TAMIL I PAPER 
  16. TAMIL II PAPER
  17. ENGLISH I AND II PAPER

10 ஆம் வகுப்பு: ஆங்கிலம் முதல் தாள் மாணவர்கள் எப்படி எழுதினர்? புதிய சிந்தனை இல்லை, அலங்கரிப்பு தான் என்கிறார் வேலூர் ஆசிரியை திருமதி. விஜயலட்சுமி ராஜா:

      ஆங்கிலம் முதல் தாள் எப்படியிருக்குமோ என்ற பதைப்பு .ஆனால் எளிமையாகவே இருந்தது.மாறாக மேற்பார்வை பணி தான் அலுப்பாக இருந்தது .தனியார் பள்ளி மாணவர்கள்!அனைவரும் ஒன்று போலவே எழுதினர் .ஒரு வெரைட்டி வேணாம்?போங்கப்பா !எல்லோரும் ஒரே மாதிரி கட்டம் போடுவதும் வட்டம் போடுவதும் மேகம் வரைந்து மழை பொழிய வைப்பதும், paragraph question க்கு ஒரே மாதிரி thought சொல்லி முடிப்பதும் ,ஷப்பா !முடியல!விரைவிலே சலித்து போய்விட்டது.
அதிலும் 12 வது கேள்விக்கு சொந்தமாக construct செய்யாமல் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ,மாதிரியென்ன மாதிரி ,சொல்லியே வைத்திருக்கின்றனர் ,படிக்கும் பிள்ளை, படிக்காத பிள்ளை ,சுமாராக படிக்கும் பிள்ளை என்று எல்லோருமே ஒரே பதிலையே எழுதினர் ,"I know the word popular"அல்லது "I know the meaning of the word popular".அட உனக்கு தான் meaning தெரியுமே அந்த வார்த்தையை பயன்படுத்தி ஒரு sentence எழுதினால் என்ன என்று கேட்கலாம் போல தோன்றியது !நமக்கு எதற்கு வம்பு என்றே எல்லோரும் ஒரே பதிலைஎழுதினர் என்று நினைக்கிறேன் ..ஒரே ஒரு பெண் மட்டும் Sachin is a popular cricket man என்று எழுதினாள் .அவளுக்கும் cricket man எழுதக்கூடாது cricketer அல்லது கிரிக்கெட் player என்று எழுதவேண்டும் என்று தோன்றவில்லை .memory poem க்கு கூட ஒரு பதாகை வரைந்து அதில் poem எழுதினர் .எப்படி எழுதினாலும் பதில் இருந்தால் முழு மதிப்பெண் கிடைக்கும் வினாக்களுக்கும் கூட பிள்ளைகளை இப்படி வாட்டி வதைப்பது ஏனோ?இரண்டரை மணி நேரமும் பேப்பர் பேனாவுடன் போராடிக்கொண்டிருந்தனர் மாணவர்கள் .அவர்களது ஒரே குறிக்கோள் அலங்கரிப்பதிலேயே இருந்தது .பொங்கலுக்கு செம்மண் இடுவதை போல கிடைக்கும் இடங்களிலெல்லாம் அலங்கரித்து கொண்டிருந்தனர் அவர்கள் .ஒரு வழியாக warning bell அடிக்கும் போது வியர்க்க விறுவிறுக்க நிமிர்ந்தனர் .அதே ஹாலில் 7பெண்கள் பிள்ளைகள் தேவைக்கு மட்டும் விடைத்தாளை அலங்கரித்து 30 நிமிடங்கள் முன்னதாகவே எழுதி முடித்து அமர்ந்திருந்தனர் . ஆண் பிள்ளைகள் வேறு ஒரு பள்ளியிலிருந்து வந்திருந்தனர்.இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் பாடத்தை விட அலங்காரத்தை அதிகம் கற்பித்து அனுப்பியிருக்கிறார் என்று தோன்றியது .தேர்வு வைப்பதன் நோக்கத்தையே சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்றும் ஒரு வித பயம் ஏற்பட்டது .தேர்ச்சி பெற சிரமப்படும் மாணவர்களுக்காக என்று கூறப்பட்ட குறுக்கு வழிகளையே பெரும்பாலும்நன்றாக படிக்க கூடிய மாணவர்களும் பயன்படுத்துவது மிகவும் வருத்தப்பட கூடிய செயல் .இது போன்ற குறுக்கு வழி பயிற்சிகள் மாணவர்களின் இயல்பான கற்பனை திறனையும் படைப்பாற்றல் திறனையும் நிச்சயமாக மழுங்கடித்து விடும் .இந்நிலை தொடர்ந்தால் எல்லாவற்றிற்கும் ஒரு ready made product ஐ இளைய சமுதாயத்தினர் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிடக்கூடும் !