Monday, May 27, 2013

School Education BT Assts/BRTE/PET/Spl Trs - Transfer Counseling Schedule Now Announced.
           
     2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.          

28.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டத்திற்குள் )

29.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டம் விட்டு மாவட்டம் )



           இதற்கு முன்னதாக 27.5.13 அன்று சென்ற வருடம் பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
          

Department Exam - DI Paper 1 & 2 & Statistics

Department Exam - EO & Account Test Materials

பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை

              1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை 27.05.2013 முதல் 31.05.2013க்குள் அலுவலர்களுகு அளித்து பள்ளி துவங்கும் முதல் நாளான 03.06.2013 அன்றே மாணவர்களுக்கு வழங்கி 04.03.2013 அன்றுக்குள் அறிக்கை அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
 
மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை
             2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.
 
         காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்புவதற்காக மீதமுள்ள பணிநாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் மற்றொரு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
           வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களை தமிழில் படித்தவர்களுக்காக நடைபெற்ற இந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
                        தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், ஆசிரியர் கல்வி பட்டம் ஆகியவற்றை முற்றிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்,
             ஆனால், பெரும்பாலான தேர்வர்கள் முற்றிலும் தமிழ் வழியில் படிக்காமலேயே தமிழ் வழியில் முன்னுரிமை கோரியதாகக் கூறப்படுகிறது. ஆகவேதான் சான்றிதழ் சரிபார்ப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
               மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்தும், இளநிலை, முதுநிலைப் பட்டத்துக்கு கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்தும், ஆசிரியர் கல்விப் பட்டம் (பி.எட்.) பெற்றவர்கள் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்தும் சான்றிதழ்களைப் பெற்றுவர வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தச் சான்றிதழ்களைப் பெற முடியாததாலும் பெரும்பாலானோர் இதில் பங்கேற்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
             மே 27-ல் ஒரு வாய்ப்பு: தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்கெனவே பங்கேற்றவர்கள், இப்போது உரிய சான்றிதழ்களைப் பெற்றிருந்தால், அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை (மே 27) நேரில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
PG Botany - Appointment Counseling on 27.05.2013
            
       மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர்  பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு இணையதளத்தில் (Online) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. 
 
              தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் 27.05.2013 (திங்கட்கிழமை) அன்று 9.00 மணியளவில் அவரவர் முகவரிக்குட்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்குச் சென்று இணையதள கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமன ஆணை பெறுமாறு  கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.ஆசிரியர் தேர்வு வாரியம்/தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அனுப்பப்பட்ட தெரிவுக்கடிதத்தின் அடிப்படையில் கல்விச்சான்றுகளை சரிபார்த்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர்  பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

            தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

            தமிழகத்தில், இந்த ஆண்டு, 8.53 லட்சம், மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதினர். பள்ளி மூலமாக தேர்வு எழுதியவர்களில், 7.4 லட்சம் மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

           இவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளில், தங்களின் கல்வித்தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், தங்கள் கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பக இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

             மாணவ, மாணவியர், மதிப்பெண் சான்றிதழ் பெற, பள்ளிக்கு செல்லும்போது, தங்களது குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை, ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

              புதிதாக பதிவு செய்வோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, பதிவு செய்யும் நாளிலேயே, உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், தங்களுடைய கல்வித் தகுதியை, பள்ளிகளில் பதிவு செய்த பின், தங்களுடைய முன்னுரிமையை, வேறு ஒரு வேலைநாளில், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

              பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 27ம் தேதி, பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர், 27ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து, வேலைவாய்ப்பு அடை யாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும், மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு, 27ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.
         "தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

          இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியன இணைந்து, "தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாடுகள்" என்ற தலைப்பில், மண்டல அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கை, சென்னை, சி.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தில், நேற்று துவக்கின.

        கருத்தரங்கை துவக்கி வைத்து, மான்தா பேசியதாவது: தொழிற்துறையும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், தொழில்நுட்பக் கல்வியின் தரம் மேம்படுவதுடன், மாணவர்கள், படிப்பை முடித்ததும், உடனுக்குடன், வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் உருவாகும்.
ஆனால், இரு துறைகளுக்கும் இடையே, பெரும் இடைவெளி இருக்கிறது. இதை, சரி செய்ய வேண்டும்.பொது துறை நிறுவனங்கள் பயிற்சிமேலும், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் துவக்கி உள்ளோம்.

         முதற்கட்டமாக, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன், சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 43 பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள், அனைத்து நவீன வசதிகளைக் கொண்டவை.தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த மாணவர்களுக்கு, இந்த மையங்களில் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 400 மணி நேரம், இந்த பயிற்சி அளிக்கப்படும்.

          இதற்காக, மாணவர்கள், கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏ.ஐ.சி.டி.இ., சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு, நிதியை வழங்கும். அந்நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வழங்கும். இவ்வாறு மான்தா பேசினார்.

           பின், நிருபர்களிடம், மான்தா கூறியதாவது: தமிழகத்தில், 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எட்டு பொறியியல் கல்லூரிகள், தாமாகவே முன்வந்து, மூடி விடுவதாக தெரிவித்துள்ளன.

           தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த, என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என, அனைத்து மாநிலங்களுக்கும், கடிதம் எழுதினோம். மகாராஷ்டிரா மட்டும், பதில் அளித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட, வேறு எந்த மாநிலங்களும், உயர்கல்வியின் தர மேம்பாடு குறித்து, பதில் அளிக்கவில்லை. இவ்வாறு மான்தா கூறினார்.

           தமிழகத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில், 1.30 லட்சம் இடங்களே, ஆண்டுதோறும் சராசரியாக நிரம்புகின்றன. மீதம் உள்ளவற்றில், மாணவர்கள் சேர்வதில்லை.

           இந்நிலையில், 17 பொறியியல் கல்லூரிகளை, புதிதாகத் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப, இடங்கள் நிரம்பும் என்ற நிலையில், கல்லூரி ஒன்றுக்கு, தற்போதைய நிலவரப்படி, மூன்றில் ஒரு பங்கு இடங்கள், காலியாகவே இருக்கின்றன.

           புதிதாகத் துவக்கப்படும் கல்லூரிகளிலும், இதே நிலை காணப்படும்.இந்த நிலையைத் தவிர்த்து, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், இடங்களை நிரப்ப, மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மருத்துவக் கல்வியில் முன்னேறிவரும் இந்தியா!

          நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவான முறையிலான ஆராய்ச்சி போன்ற காரணங்களால், உலகளாவிய மருத்துவ கல்வியில், இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு, நூற்றுக்கணக்காக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் உள்ளதும் ஒரு காரணம்.

பழங்காலந்தொட்டே, மருத்துவ துறையில், இந்தியாவிற்கென்று ஒரு தனிப் பாரம்பரியமே உண்டு. சாரகா மற்றும் சுஸ்ருதா போன்றவர்கள், இந்திய மருத்துவப் பெருமைக்கு சில உதாரணங்கள். இன்றைய நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல மாணவர்களும்கூட, இந்தியா வந்து மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள்.
சீனாவைப் பின்பற்றி...
சமீப வருடங்களில், குறைந்த மற்றும் தரமான மருத்துவப் படிப்புக்கேற்ற வெளிநாடாக சீனாவே விளங்கி வருகிறது. உலகத் தரத்திலான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சீனாவை நோக்கி வெளிநாட்டு மாணவர்கள் செல்வதற்கு முக்கிய காரணங்கள். ஆனால், கடந்த சில வருடங்களில், இந்தியாவும் சுதாரித்துக்கொண்டு, மருத்துவ துறையில் அதிக முதலீடுகளை செய்து, மருத்துவக் கல்வியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைப் புதுப்பித்து, சீனாவின் வழியில் தானும் பயணப்பட துவங்கியுள்ளது.
தரப்படுத்தும் நடவடிக்கைகள்
இந்திய மருத்துவ கல்வி நிறுவனங்களிலிருந்து தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில், அரசு, பல கொள்கை முடிவுகளை வகுத்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணம், தனியார் மருத்துவப் பல்கலைகளை தீவிரமாக கண்காணித்தல், மருத்துவ நுழைவுத்தேர்வில் கண்டிப்பான, கடினமாக முறைகளை கையாளுதல், பாடத்திட்டங்களை, அவ்வப்போது மதிப்பாய்வு செய்து மாற்றங்களை கொண்டுவருதல், புதிய ஆராய்ச்சிகளில் மருத்துவ பேராசிரியர்களை ஈடுபடுத்தல், நவீன மருந்துகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் எளிதாக கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதன் மூலமாக, வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் செயல்பாடு நடைபெற்று வருகிறது.
அனைத்திற்கும் வாய்ப்பு
பலவிதமான மருத்துவ சிகிச்சை முறைகளை பின்பற்றும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கே, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற பல்வேறான மருத்துவ துறைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ துறையிலும் ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளதோடு, அவற்றுக்கென்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிர்வாக அமைப்புகளும் உள்ளன.
இந்தியாவிலுள்ள சில மருத்துவ கல்லூரிகள், உலகளவில், சிறந்ததாக கருதப்படுகின்றன. உலகளவில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களில், பல இந்தியர்களும் அடங்கியுள்ளனர். அவர்கள், மேல்படிப்பை வெளிநாடுகளில் முடித்தவர்களாயினும், தங்களின் ஆரம்பநிலை மருத்துவப் படிப்பை, இந்தியாவில்தான் மேற்கொண்டனர். அதுதான் அவர்களின் படிக்கல்.
இரண்டாம் ஆண்டிலேயே மருத்துவமனை
இந்திய மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, ஒரு மாணவர், தனது இரண்டாமாண்டு படிப்பின்போதே, மருத்துவமனை செல்லாம். ஆனால், சீனாவிலோ, (2, 3 மற்றும் 4வது செமஸ்டரின்போது ஏற்பாடு செய்யப்படும் வகுப்புகளுக்காக தவிர) இன்டர்ன்ஷிப்பின்போது மட்டுமே மருத்துவனை செல்ல, மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதன்மூலம், சீனாவை விட, இந்தியாவில் மருத்துவம் படிப்பவர்கள், அதிகளவிலான நடைமுறை மருத்துவ அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், இந்நாட்டின் மருத்துவ மாணவர்கள், நடைமுறை மருத்துவ அனுபவம் மற்றும் அறிவைப் பெறுவதற்கு, புகழ்பெற்ற மருத்துவர்களின் குழுவிலும் இணைய அனுமதி உண்டு.
இந்தியாவின் பல புகழ்பெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல வெளிநாட்டு மாணவர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் மருத்துவம் படிக்கவரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, கடுமையான விசா கெடுபிடிகள் என்று எதுவுமில்லை. இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்புவோர், மருத்துவ கல்வித்துறையில் உள்ள பெயர்பெற்ற அமைப்புகளிடம் விசாரித்து, அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
இந்திய மருத்துவ சேர்க்கை நடைமுறைகள்
இந்திய மருத்துவப் பல்கலைகளில், மருத்துவ சேர்க்கை செயல்பாடு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் தொடங்குகிறது. அறிவியலை முக்கியப் பாடமாக கொண்டு, பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வுகள், பொதுவாக, 2 முறைகளில் நடத்தப்படுகின்றன. அகில இந்திய நிலை மற்றும் மாநில அளவிலான நிலை போன்றவையே அவை.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள், பொது PC பிரிவு மாணவர்கள் 45%, OBC/SC/ST பிரிவினர்(OBC-non creamylayer) 40% பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும், குறைந்தபட்சம், 17 வயதை கடந்திருக்க வேண்டும். அதேசமயம், 25 வயதை தாண்டியிருக்கக்கூடாது.
இந்தியாவிலுள்ள சில புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனங்கள்
AIIMS - DELHI
CMC - VELLORE
JIPMER - PONDYCHERRY
ARMED FORCES MEDICAL COLLEGE - PUNE
MAULANA AZAD MEDICAL COLLEGE - DELHI
GRANT MEDICAL COLLEGE - MUMBAI
MADRAS MEDICAL COLLEGE - CHENNAI
ST. JOHN&'S MEDICAL COLLEGE - BANGALORE
BANGALORE MEDICAL COLLEGE - BANGALORE
STANLEY MEDICAL COLLEGE - CHENNAI
OSMANIA MEDICAL COLLEGE - HYDERABAD

No comments:

Post a Comment