Monday, December 31, 2012


+2 New Business Mathematics Study Material


+2 New Vocational subjects Question Papers


வெளிவராத தமிழ் அகராதி: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு சிக்கல்


        கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், தமிழ் ஆட்சிமொழி அகராதி வெளி வராததால், அரசுத் துறை தேர்வு எழுதுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தமிழாசிரியர் கழகத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "கடந்த 1957 முதல் 2000ம் ஆண்டு வரை, 6 தமிழ் அகராதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக புதிய அகராதி வெளிவரவில்லை. தற்போது நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., உட்பட அரசு துறை தேர்வுகளில், தமிழ் அகராதிகளில் இருந்து, கேட்கும் சில கேள்விகளுக்கு, விடை காண முடியவில்லை.
சமீபத்தில், சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் கூட, ஈரோடு பகுதியில் பேசப்படும்,"ஈமு" எனும் வார்த்தைக்கு யாராலும், விளக்க மளிக்க முடியவில்லை. காரணம், பழைய தமிழ் அகராதிகளில் "ஈமு" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த வட்டாரத்தில் புதுப்புது தமிழ் வார்த்தைகள் பிறக்கின்றன. இவற்றிக்கு, தமிழில் சரியான வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல், தமிழாசிரியர்கள், அரசு அதிகாரிகள் திணறுகின்றனர்.
தமிழ் வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் அகராதி புத்தகங்களை பொது மக்கள் படிக்க முடியாத நிலையில், ஆசிரியர் அரசு துறையை சார்ந்தவர்கள் படிக்க, சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி கடிதம் பெறுதல் என்ற கட்டாய உத்தரவை தளர்த்த வேண்டும். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அகராதிகளை வெளியிட வேண்டும்,&'&' என்றார்.
 
தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும் 7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு

பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு (யு.ஜி.சி.)​சார்​பில் தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு சென்னை உள்​பட நாடு முழு​வ​தும் இன்று (டிசம்​பர் 30) நடை​பெ​று​கி​றது.​மொத்​தம் 77 மையங்​க​ளில் நடை​பெ​றும் இந்​தத் தேர்வை 7.8 லட்​சம் பேர் எழு​து​கின்​ற​னர்.​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ளர் தகுதி பெற புதிய விதி​மு​றை
​கள் அமல்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளன.​சென்​னை​யில் 10 தேர்வு மையங்​க​ளில் 12,500 பேர் இந்​தத் தேர்வை எழுத உள்​ள​னர்.​முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை​யி​லும்,​இரண்​டாம் தாள் காலை 10.45 மணி முதல் 12 மணி வரை​யி​லும்,​மூன்​றாம் தாள் பிற்​ப​கல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை​யி​லும் நடை​பெ​றும்.​முதல் தாளில் 60 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​இரண்​டாம் தாளில் 50 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​மூன்​றாம் தாளில் 75 கேள்​வி​க​ளும் (150 மதிப்​பெண்)​இடம்​பெ​றும்.​முதல் தாளில் 50 கேள்​வி​க​ளுக்​கும்,​மீத​முள்ள 2 தாள்​க​ளில் அனைத்து கேள்​வி​க​ளுக்​கும் கட்​டா​யம் விடை​ய​ளிக்க வேண்​டும்.​பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 40 சத​வீத மதிப்​பெண்​ணும்,​இதர பிற்​ப​டுத்​தப்​பட்​ட​வர்கள்,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 35 சத​வீத மதிப்​பெண்​ணும் தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.​மூன்​றாம் தாளுக்கு மட்​டும் 75 (50 சத​வீ​தம்)​தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​இதில் இதர பிற்​ப​டுத்​தப்​பட்​டோ​ருக்கு தேர்ச்சி மதிப்​பெண்​ணாக 68 மதிப்​பெண்​ணும் (45 சத​வீ​தம்)​,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 60 மதிப்​பெண்​ணும் (40 சத​வீ​தம்)​நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​புதிய விதி​மு​றை​கள்:​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ள​ரா​கத் தகு​தி​பெற புதிய விதி​மு​றை​க​ளை​யும் பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அமல்​ப​டுத்​தி​யுள்​ளது.​அதன்​படி,​தேர்ச்சி பெற்​ற​வர்​க​ளைக் கொண்டு பாட​வா​ரி​யாக தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும்.​அனைத்​துப் பாடங்​க​ளி​லும் தேர்ச்சி பெற்​ற​வர்​களி​லி​ருந்து முதல் 15 சத​வீ​தம் பேர் மட்​டுமே விரி​வு​யு​ரை​யா​ளர் தகுதி பெற்​ற​வர்​க​ளாக அறி​விக்​கப்​ப​டு​வார்​கள்.​இளம் ஆராய்ச்​சி​யா​ள​ருக்​கான உத​வித் தொகை வழங்க இவர்​களி​லி​ருந்து தனி​யான தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும் என்று பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அறி​வித்​துள்​ளது.​கடந்த தேர்​வில் தேர்ச்சி விதி​மு​றை​களை மாற்​றி​ய​தைத் தொடர்ந்து தேர்வு முடி​வு​களை வெளி​யி​டு​வ​தில் பல்​வேறு பிரச்​னை​கள் எழுந்​தன.​இதைத் தொடர்ந்து,​புதிய விதி​மு​றை​கள் இப்​போது அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.

No comments:

Post a Comment