Saturday, January 4, 2014

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

C  &; D-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-
A  &;   B-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-
ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர்  ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்படி, C,D பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. A, B ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Employment News : Job Highlights ( 04th – 10th January 2014)

1.National Hydroelectric Power Corporation (NHPC) Limited. Name of Post – Trainee Engineer. No. of Vacancies - 180. Last Date - 21.01.2014

2.Central Industrial Security Force. Name of Post – Constable (Bandsman-cum-GD). No. of Vacancies - 123 Last Date - 08.02.2014

3.Department Of Posts. Name of Post – Multi Tasking Staff (MTS). No. of Vacancies - 82. Last Date - 13.01.2014


4.All India Institute of Medical Sciences, Patna. Name of Post– Registrar, Junior Engineer, Medical Physicist, Store Keeper etc. No. of Vacancies - 59. Last Date – 31.01.2014.

5.Central Employment Exchange. Name of Post – Pharmacist, Navigational Assistant Grade II, and Technician. No. of Vacancies -32. Last Date - 27.01.2014.

6.Indira Gandhi Delhi Technical University for Women. Name of Post – Professor, Associate Professor and Assistant Professors. No. of Vacancies - 23. Last Date - 20.01.2014.

7.Tata Memorial Hospital, Mumbai. Name of Post – Deputy Controller of Accounts, House Keeper, Kitchen. Supervisor, Pharmacist ‘B’ etc.No. of Vacancies - 15. Last Date - for online application is 10.01.2014 upto 05.30 p.m. & receiving. hard copy of online applications is 17.01.2014.

8.Indraprastha College for Women, Delhi. Name of Post –Assistant Professor. No. of Vacancies – 23. Last Date – 25.01.2014.

9.National Board of Examination. Name of Post – Multi Skill Assistants. No. of Vacancies – 15. Last Date – 60 days after publication.

10.Ministry of Health & Family Welfare, Kanpur. Name of Post – Pharmacist (Allopathic), Staff Nurse Grade I, Pharmacist cum Clerk etc. No. of Vacancies – 13. Last Date – 21 days after publication.

Source : 
மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு
0 - 2 வருடம் = இல்லை 
2 - 5 வருடம் = 90 நாட்கள் 
5 - 10 வருடம் =180 நாட்கள் 
10 - 15 வருடம் =270 நாட்கள் 
15 - 20 வருடம் =360 நாட்கள் 
20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.
அரையாண்டு தேர்வில் அரசு பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற 10–வது, பிளஸ்–2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று கூறியதாவது:

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
கடந்த வருடம் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் எந்த அரசு பள்ளிகளில் 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் உள்ளதோ அப்படிப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டோம்.
அதன்படி நேற்று கோவையில் முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உள்பட அனைவரும் கலந்து கொண்டோம்.
சிறப்பு பயிற்சி
70 சதவீத தேர்ச்சிக்கு குறைவான தேர்ச்சி உடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
அரையாண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தவேண்டும் என்று கூறி உள்ளோம். எந்த மாணவர் எந்த பாடத்தில் தேர்வு பெறவில்லை என்பதை கண்டுபிடித்து அந்த பாடத்தில் நன்றாக விளக்கி பயிற்சி அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எப்படியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம்.
நெல்லையில் 6–ந்தேதி கூட்டம்
இது போன்ற கூட்டம் நெல்லையில் 6–ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள். இப்படியாக தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கூட்டம் நடத்தி தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உள்ளோம்.
இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேர் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் காரணமாக போட்டித்தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த வருடம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்தப்பட்டது. 421 மையங்களில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
இதில் தமிழ் பாடத்துக்கு உரிய தேர்வில் 44 கேள்விகளில் அச்சுப்பிழை இருப்பதாக பிரச்சினை எழுந்தது. அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் தமிழ்பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு உரிய தேர்வு முடிவு முதலில் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் ஆசிரியர்கள் தேர்வு
தமிழ் பாடத்திற்கு உரிய தேர்வு முடிவு வெளியிடப்பட்டு கடந்த 30 மற்றும் 31 தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. நேற்று ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 3 நாட்கள் தான் ஆகிறது. மொத்தம் 605 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரம் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான ஆணையை பள்ளி கல்வித்துறை வழங்க உள்ளது.
மார்ச் இறுதிக்குள் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை உத்தரவு
மார்ச் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும்.

வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க, முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார்.

இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.


No comments:

Post a Comment