Saturday, July 20, 2013

அரசாணை வெளியிடப்பட்ட நாள் (18.01.2013) முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phill அல்லது M.Ed அல்லது P.Hdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு


பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம

               பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
 
           கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

             தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது.

           "தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

           மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


 உலகம் போற்றும் திருக்குறள் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
 
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் .

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
                 மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் "இன்ஸ்பயர்" விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, "இன்ஸ்பயர்" புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது.
 
             இதை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பொறுப்பேற்று நடத்துகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவரை, ஒவ்வொரு வகுப்பில் இருந்தும், தலைமை ஆசிரியர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். புத்தாக்க அறிவியல் விருதானது, ஒரு பள்ளிக்கு ஒரு மாணவருக்கு மட்டுமே வழங்கப்படும்.

              பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தலைமை ஆசிரியர், உதவி கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக்., கல்வி ஆய்வாளர்கள் மூலம் அனுப்ப வேண்டும். திட்டத்தில் பதிவு பெறாத பள்ளிகளுக்கு, இந்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்படும்.

             விண்ணப்பங்கள் அனைத்தும், ஜூலை 31க்கு முன்னதாக அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவருக்கு 5 ஆயிரம் ரூபாய், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையால் வழங்கப்படும். இத்தொகையை அறிவியல் மாதிரிகளுக்கு செலவிட்டு, அதன் படைப்புகளை, மாவட்ட அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெற செய்ய வேண்டும்.


ஊரகத் திறனாய்வு தேர்வு: 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

      கிராமப்புற மாணவர்களுக்கான, ஊரகத் திறனாய்வு தேர்வு, செப்., 22 ல் நடக்கிறது. விண்ணப்பங்களை, "ஆன் லைன்" ல், பெறலாம்.

          இத்தேர்வுக்கு, 8ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

            தேர்வு விண்ணப்பங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. "இந்த ஆண்டு முதல் www.peps.tn.nic.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

           விண்ணப்பத்துடன், வருவாய் சான்று இணைத்து, ஆக., 2 க்குள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

            தேர்வு மற்றும் சேவைக் கட்டணமாக தலா 5 ரூபாய் என, 10 ரூபாயை தலைமை ஆசிரியர் மூலம், முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்.

             "பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், "ஆன் லைன்" மூலம், தேர்வுத்துறை பெற்றுக் கொண்டால், மாணவர்களுக்கு எளிதாக இருக்கும், என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment