Tuesday, April 9, 2013


ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்

            SSLC பொதுத் தேர்வு, ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி தேர்வில் வினாத்தாள் குளறுபடி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 
 
             இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் இவ்வாறு பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் -தேர்வுத்துறை இயக்குனர்

           விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள் மாயமான விவகாரத்தில், நீண்ட ஆலோசனைக்குப் பின், "பாதிக்கப்பட்ட, 221 மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
 
             கடந்த, 1ம் தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம் முதற்தாள் தேர்வு நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு பள்ளியில் தேர்வெழுதிய, 221 மாணவர்களின் விடைத்தாள்கள், சத்தியமங்கலம் தபால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதை, பஸ்சில் எடுத்துச் சென்ற தபால் ஊழியர், விடைத்தாள் பார்சலை தொலைத்து விட்டார்.

           இந்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விருத்தாசலத்தில், தமிழ் இரண்டாம் தாள் கட்டு, ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில், 61 விடைத் தாள்கள், முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது என்றும், தமிழ் முதற்தாளில் என்ன மதிப்பெண் பெறுகின்றனரோ, அதே மதிப்பெண், இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

             இதனை பின்பற்றி, செஞ்சி மாணவர்களுக்கு, ஆங்கிலம் இரண்டாம் தாள் மதிப்பெண்கள், முதல் தாளுக்கு வழங்கப்படும் என, கூறப்பட்டது. விருத்தாசலம் முறையை, செஞ்சி மாணவர்களுக்கும் பின்பற்றலாம் என, தமிழக அரசுக்கு, தேர்வுத்துறை, பரிந்துரை அனுப்பியிருந்தது.

              தேர்வுத் துறையின் இந்த முடிவு குறித்து, கடந்த 4ம் தேதி, தினமலர் நாளிதழில், செய்தி வெளியானது. எனினும், கடந்த, 5ம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் கல்வி அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில், "செஞ்சி மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது" என, தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

              மறுதேர்வு முடிவை அரசு எடுத்தால், அது, முரண்பாடான முடிவாக அமையும் என, 6ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், செஞ்சி மாணவர்களுக்கு, மறுதேர்வு கிடையாது என்றும், அவர்கள், ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்கள், முதல் தாளுக்கு வழங்கப்படும் என்றும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா, நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

              இயக்குனர் அறிக்கை:செஞ்சி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தினால், அது, மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, 221 மாணவர்களுக்கும், அவர்களது ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களே, முதல் தாளுக்கும் வழங்கப்படும்.
               ஆங்கிலம் இரண்டாம் தாளில் தோல்வி அடைந்திருந்தால், அவர்களுக்கு, ஆங்கில பாடத்தில், குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தை அளித்து, ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.


பள்ளி செல்லா குழந்தைகள் வயது வரம்பு 18 ஆக அதிகரிப்பு

            பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின், வயது வரம்பு, 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பற்றி, வீடு வீடாகசென்று கணக்கெடுக்கப்படுகிறது.
 
 
               இதில், கண்டறியப்படும் குழந்தைகளை, உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து, முறையான பயிற்சிக்கு பின், "ரெகுலர்' பள்ளியில் சேர்க்கின்றனர்.இதற்கான கணக்கெடுப்பு, வரும், 10ம் தேதி துவங்கி, ஏப், 27ம் தேதி வரை, நடக்கிறது. இப்பணியில், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு, 14 முதல் 18 வயது வரையிலான, பள்ளி செல்லா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுத்து, இடைநிலை கல்வி திட்டத்தில் ஒப்படைக்க உத்தர விடப்பட்டுள்ளது. முதன் முறையாக, 14 முதல் 18 வயதிலான குழந்தைகளை கணக்கெடுப்பதால், இவர்களுக்கு, உண்டு உறைவிட பள்ளி, இணைப்பு பயிற்சி மைய வசதி ஏற்படுத்தப்படும். 
 
                  வணிக நிறுவனங்களில், 14 வயதுக்கு மேல் பணிபுரியும் ஏராளமான, ஏழை மாணவர்கள், இத்திட்டத்தால் பயன் பெற வாய்ப்பு உள்ளது.வட்டார வள மைய அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த தகவலை, பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், அருகில் உள்ள வட்டார வள மையத்தில் தெரிவிக்கலாம்' என்றார்.
 
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்

           தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.
 
 
         2013-2014 ஆம் கல்வி ஆண்டில் இருந்தது புதிதாக 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, அதோடு சேர்த்து மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என இன்று அறிவித்தார்.

         சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை, கரம்பக்குடி, ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

         தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என ஜெயலலிதா கூறினார்.

          தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

           அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள நான்கு மண்டல மையங்கள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த , 150 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.

                  சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குனர்கள் இது தொடர்பாக திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்பிஎல் நோட்டு புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் சப்ளை செய்ய வேண்டும். மே மாதம் 20ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட புத்தகங்களை ஏப்ரல் 8ம் தேதி முதல் வினியோகம் செய்து மே 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 
 
அத்துடன் ஒரு செட் சீருடை மே 15ம் தேதியில் இருந்து மே 28ம் தேதிக்குள் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றை பள்ளிகள் திறக்கும் வேளையில் வினியோகம் செய்ய, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சபிதா தெரிவித்துள்ளார்.
அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்' - News Paper

         தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண் பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை... :


கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், தமிழ் இரண்டாம் தாள் கட்டுகள், ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில், 63 விடைத்தாள்கள், முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும், ஐந்து மதிப்பெண்களுக்குரிய விடைகளை நிரப்ப, வங்கி செலான் வழங்கவில்லை.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள் கட்டுகள் மாயமாயின. இதைத் தொடர்ந்து, கணித தேர்வில், "புளூபிரின்ட்'படி, கேள்விகள் இடம்பெறாததும், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குளறுபடிகள் வரிசையில், நேற்று நடந்த அறிவியல் தேர்விலும் எதிரொலித்தது.
"மிஸ்சிங்' ஆன விடை:


ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியர் கருத்து தெரிவித்தனர். எனினும், ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், 14வது தமிழ்வழி கேள்விக்குரிய, "அப்ஜக்டிவ்' முறையிலான நான்கு விடைகளில், சரியான விடை, முழுவதுமாக அச்சிடப்பட்டு இருந்தது.ஆனால், ஆங்கில வழியில், அதே கேள்விக்கான விடை, முழுவதுமாக கேள்வித்தாளில் அச்சாகவில்லை. தமிழில், "மின்காந்த தூண்டல்' என்று, முழுவதுமாக அச்சாகி இருந்தது. ஆங்கில வழி கேள்வியில்,"எலக்ட்ரோ மேக்னட்டிக் இன்டக்ஷன்' என்ற விடையில், "எலக்ட்ரோ' என்ற வார்த்தை, "மிஸ்சிங்' ஆகி இருந்தது.விடையை நன்றாக தெரிந்த மாணவ, மாணவியர், சரியான விடையை எழுதியதாகவும், குழப்பம் அடைந்த மாணவர்கள், அந்த கேள்விக்கு, சரியான விடையை அளிக்கவில்லை என்றும், அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் வழங்க முடிவு:இது குறித்து, தேர்வுத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "இந்த பிரச்னை, எங்களது கவனத்திற்கும் வந்துள்ளது. "கீ-ஆன்சர்' (கேள்விக்குரிய, அதிகாரப்பூர்வமான விடைகள்) தயாரிக்கும்போது, 14வது கேள்விக்குரிய விடையை எழுத முயற்சி செய்திருந்தாலே, அதற்குரிய ஒரு மதிப்பெண் முழுவதுமாக வழங்கப்படும் என்ற உத்தரவு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்' என, தெரிவித்தன.

மாணவர்கள் கருத்து :இதற்கிடையே, அறிவியல் தேர்வு, எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
திருவல்லிக்கோணி, இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் இறையன்பு கூறுகையில்,""கணித பாடத்தை போல், அறிவியல் தேர்வு கடினமாக இருக்கும் என, நினைத்தேன். ஆனால், எதிர்பார்த்தை விட, தேர்வு சுலபமாக இருந்தது. அனைத்து வினாக்களும், சுலபமாக இருந்ததால், 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன்,'' என்றார்.

இதே பள்ளி மாணவர் நிஜேந்திரராஜ் கூறுகையில்,""மற்ற தேர்வுகளை விட அறிவியல் தேர்வு சுலபமாக இருந்தது. பாட புத்தகத்தில் இருந்தே, அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. அறிவியல் தேர்வில், நண்பர்கள் உட்பட பலர் சதம் அடிப்போம்,'' என்றார்.

பெரிய காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நதியா கூறுகையில்,""வினாத்தாள் எளிதாக இருந்தது. எனவே, 95 மதிப்பெண்கள் எடுப்பேன். எனது நண்பர்களும் வினாத்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். கணிதத்தை விட அறிவியல் தேர்வு எளிதாக இருந்தது,'' என்றார்.

எனினும், கடலூர் மாவட்டத்தில், மூன்று மாணவர்களும், தி.மலை மாவட்டத்தில், நான்கு மாணவர்களும், "பிட்' அடித்து, பறக்கும்படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைகள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


          ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணிநியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 
 
           ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவிருக்கும் இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் இலவசப் பயிற்சியை வழங்கி வருகிறது டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையம்.

             சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தப் வகுப்புக்கு திடீரென வருகை புரிந்த ஜி. ராமகிருஷ்ணன், ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு அரசியல் சட்டப்படி சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து தங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள் எனவும் தெரிவித்தார்
 
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.

இந்த விடுதியில், 2013 - 14ம் ஆண்டில் சேருவதற்கு, பிளஸ், 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான தேர்வுகள் கீழ்கண்ட விளையாட்டுகளில் நடத்தப்படும். இதன்படி, ஆண்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, தேக்வாண்டோ மற்றும் பெண்களுக்கு தடகளம், கால்பந்து மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்கான, விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளை (9ம் தேதிக்குள்) சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல், ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விவேகானந்தர் பெயரில் 9 பல்கலைகளில் ஆய்வு மையம

               "ஒன்பது பல்கலைக்கழகங்களில், 25 லட்சம் ரூபாய் செலவில், சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
 
          சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, அழகப்பா பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை மற்றும் திருவள்ளூவர் பல்கலை, ஆகிய, ஒன்பது பல்கலைக் கழகங்களில், சுவாமி விவேகானந்தரின் பெயரில் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்.

             இந்த மையம், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸ் - வார இதழ் செய்த

            இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது மாவட்ட வருவாய் மற்றும் நிர்வாகத்தை கவனித்து கொள்ள ஐ.சி.எஸ் பதவியை உருவாக்கினர். அதாவது இன்றைய ஐ.ஏ.எஸ் பணிக்கு முன்னோடி. அன்றைய ஐ.சி.எஸ் தேர்வு இன்றைய சிவில் சர்வீசஸ் தேர்வு போன்று முழுமையான போட்டித்தேர்வாகும். அந்த தேர்வை ஆங்கிலேயர் போல இந்தியரும் எழுதலாம்.
 
 
          இருந்தாலும் இந்தியர் இந்த தேர்வில் வெற்றிப்பெறவோ ஐ.சி.எஸ். பணியில் சேரவோ ஆங்கில அரசு விரும்ப வில்லை. அதை கடுமையாக தடுக்கும் முயற்சியில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்தார்கள். அதன்படி ஐசிஎஸ் தேர்வு சிலபஸில் லத்தீன் மொழி இலக்கியத்தை வைத்து இந்தியர்கள் தேர்ச்சி பெறுவதை குறைத்தனர்.

              இதன் மூலம் இந்தியர்கள் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதை வஞ்சகமாக தடுக்கப்பட்டது. இருப்பினும் இதையும் மீறி சத்யேந்திரநாத் தாகூர் (ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றிப்பெற்றது தனி கதை.

               இதேபோல தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமானால் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆங்கில ஆட்சியில் நிர்வாகத்தி லிருந்த பிரமணர்களால் நடைமுறையாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் மருத்துவ கல்வி பயில முடியாமல் தடுக்கப்பட்டனர். 1923-இல் நீதி கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த பனகல் அரசர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி சட்டம் - 1923 கொண்டுவந்தார்.

           "மருத்துவம் என்பது அறிவியல்பூர்வமானது இதற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்பதற்கு என்ன சம்பந்தம். பிராமணரல்லதோர் மருத்துவ கல்வி படிக்க தடுக்கும் இந்த சமஸ்கிருதம் புகுத்தல் அடியோடு நீக்கப் படுகிறது என பிராமண அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி கல்வி திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினார்.


           அதே வழிமுறையை தான் இப்போதும் பின்பற்றி கிராமப்புற இளைஞர்களும் அதிலும் முக்கியமாக அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் உயர் அரசு பணிகளில் சேர முடியாமல் தடுக்கும் விதமாக இன்று டி.என்.பி.எஸ்.சி, தேர்வுகளில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது. இந்த புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி திறனை குறைத்து தமிழ் வழியில் படித்த கிராமபுற இளைஞர்கள் தடுக்கப்படுவதாக தெரிகிறது. ஆக வரலாற்றின் நிகழ்வுகள் மாறினாலும் வரலாற்றின் உள்ளடக்கம் என்றும் மாறுவதில்லை.

             இன்று இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்துவருகிறது. இந்த வேகமான வளர்ச்சிக்காக இந்திய சந்தைகள் மற்றும் தொழில்களில் அன்னிய முதலீடுக்கு வழிசெய்து கொடுக்கப்படுகிறது.

          இதற்காக இந்திய கல்வி முறை முழுக்க முழுக்க ஆங்கில கல்வி முறையாக மாற்றியமைக்கப்படுகிறது.

           இதற்கேற்பவே அரசு துறைகளிலும் அரசு பணியாளர் களையும் ஆங்கில அறிவு அவசியமாக்கப்படுகிறது.

              இதன்படி தான் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்து திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. தமிழ் மொழியின் சிறப்பு திட்டமிட்டு ஒழிக்கப்படுகிறது. இதுதான் இந்த புதிய டி.என்.பிஎஸ்.சி சிலபஸ் மாற்றத்தில் ஒளிந்திருக்கும் தகவல். 

*  தரமான சிலபஸ் என்பது என்ன?

              டி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸை தரமாக தயாரித்துள்ளதாகவும், இனி இந்த மாதிரி தரமான பணியாளர் தான் தமிழக அரசுக்கு தேவை என்ற வாதம் எனக்குசிரிப்புதான் வருகிறது. தரம் என்பது என்ன?

இன்றைக்கு தமிழக அரசு ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் வேதனையே அரசு பணியாளர்களிடம் பணி பொறுப்பு குறைந்துவிட்டது, மக்களுக்கானசேவை செய்யவே நம்மை அரசு பணியில் அமர்த்தி யுள்ளது என்ற எண்ணம் அரசு அதிகாரிகளிடம் இல்லை, சுய ஒழுக்கம் குறைந்து வருகிறது என்பதாகும். ஆக முதலாவது ஒவ்வொரு அரசு பணியாளர்களுக்கும் அடிப்படையில் தேவையானது சுய ஒழுக்கம், மக்கள் சேவை, பணியில் பொறுப்பு, பணியில் நேர்மை ஆகியவையே. கணிணி அறிவு, மொழி அறிவு, அறிவுக் கூர்மை எல்லாம் இரண்டாவதுதான். எந்த ஒரு அரசு பணியாளரிடம் கம்ப்யூட்டர் அறிவிலோ, மொழி அறிவிலோ சிறு குறை இருந்தாலும் சரி செய்துவிடலாம். இதற்காக அரசு யாரையும் தற்காலிக பணிநீக்கம் செய்வதில்லை. ஆனால் நேர்மை தவறி நடந்து கொண்டால் பணி நீக்கமே கூட செய்யப்படுவதுண்டு.
 
ஆக அடிப்படையானது எது?.

நேர்மையான அரசு பணியாளர்கள் அதிகரிக்கும் போதுதான் அரசு நிர்வாகம் சிறந்த நேர்மையான அரசு நிர்வாகமாக செயல்படும். வெறும் கம்ப்யூட்டர், கணித அறிவு மட்டும் தரமான பணியாளர்களை உருவாக்கும் என்ற வாதம் அர்த்தமற்றது. புதிய பாடத்திட்டத்தில் சமுதாயபற்று, மக்கள் சேவை, ஒழுக்கம் சார்ந்த பாடத் திட்டங்களை ஏன் சேர்க்க கூடாது?

* பொதுத் தமிழை நீக்கியது மூலம் அரசுப் பணியில் கோப்புகளை கையாளுவதில் தமிழ் மொழித்திறன் தேவை இல்லையா?

அனைத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் (குரூப் -4 மட்டும் பொதுத்தமிழ் பாடம் குறைக்கப்பட்டுள்ளது) முக்கியமாக கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் பொதுத் தமிழ் பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கிராமங்களில் பணிபுரிய தமிழ் மொழித் திறனே மிக முக்கியமானது என்பது நடைமுறை உண்மை.

உதாரணமாக யாரைவிடவும் ஒரு கிராம நிர்வாக அலுவலர்தான் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர். மக்களுக்கும் அலுவலருக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு முழுக்க முழுக்க தமிழே. பொது மக்களின் விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், நில ஆவணங்கள், வரி பற்றிய விவரங்கள் என அனைத்தும் தமிழ் மொழியே நடைமுறையில் இருக்கும் போது, நாளைய கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிய இருப்பவர்களின் தமிழ் மொழித்திறன் தேவையில்லையா? பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட வி.ஏ.ஒ பணிக்கு தமிழ் மொழித்திறன் அதிகம் தேவைப்படும்போது. சிலபஸிலிருந்து பொது தமிழை அடியோடு நீக்கியதன் நோக்கம் என்ன?

* வி.ஏ.ஓ தேர்வு சிலபஸில் அடிப்படை கிராம நிர்வாகம் பற்றிய பாடம் தேவையா?

புதிய வி.ஏ.ஓ சிலபஸில் அடிப்படை கிராம நிர்வாகம் பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறந்த பாடத்திட்டம் போல தெரியலாம்.

ஆனால் இது குழப்பத்தின் உச்சம். எந்த ஒரு போட்டித் தேர்விலும் பொதுவான கல்வி பாடத்திட்டங்களையே வைத்து தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றிப்பெற்று பணியில் சேர்ந்த பின்னர்தான் அந்த பணிக்கான பயிற்சியை தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர் திருத்தத்துறை மூலம் வழங்கி பணியிடம் ஒதுக்கப்படுவது மரபு. இப்போது வி.ஏ.ஓ தேர்விலேயே அடிப்படை கிராம நிர்வாகம் படிக்க வேண்டுமானால் தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் பணி என்ன?.

தமிழகத்தில் இன்னும் பத்தாயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் தேவை இருக்க இப்படி கிராம நிர்வாக அலுவலர் பணியை கடினமாக்க வேண்டியதன் அவசியம் என்ன? ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்களே திணறும் இந்த பாடத்திட்டத்தை பத்தாவது கல்வி தகுதி கொண்ட தேர்வில் கேட்கப்படுவது நியமானதுதானா?

* நவீன இந்திய வரலாறும் கலாச்சாரமும் பாடத்திட்டத்தின் நோக்கம் என்ன?

"பண்டைய இந்திய வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டால் தான் தற்போதைய சமூக வளர்ச்சியை அரசியல் கருத்துகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். வரலாற்றை பாதியில் படித்தால் குழப்பம் தான் வரும். தெளிவான புரிதல் கிடைக்காது' என இந்தியவின் மிக சிறந்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், "வரலாறும் வக்கிரங்களும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது டி.என்.பி.எஸ்.சி அனைத்து தேர்வுகளின் பாடத்திட்டத்திலும் இந்திய வரலாறு முழுப் பாடத்தையும் நீக்கிவிட்டு, நவீன இந்திய வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம் என்ற பாடத்தை மட்டும் சேர்த்துள்ளனர்.



இந்திய வரலாறு மூன்று பிரிவுகளை கொண்டது. 1. பண்டைய இந்திய வரலாறு 2. மத்திய இந்திய வரலாறு, 3. நவீன இந்திய வரலாறு. முதல் இரண்டையும் தவிர்த்துவிட்டு நவீன இந்திய வரலாறு மட்டும் படித்தால் வரலாற்றின் போக்கை ரொமிலா தாப்பர் கூறியது போல புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அப்படியிருக்க அறிவியல் பாடங்களை முழுமையாக சிலபஸில் சேர்த்துள்ள போது, வரலாற்றில் இந்த வஞ்சனை செய்தது ஏன்? பண்டைய இந்திய வரலாற்றின் மூலம் சிந்து சமவெளி நாகரிகமும் ஆரியர் வருகையும், மத்திய இந்திய வரலாற்றின் மூலம் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சியும் இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என டி.என்.பி.எஸ்.சி கருதுகிறதா? இந்துத்துவா கருத்தியலை போல இந்திய கலாச்சாரம் என்ற புதிய பாடத்தை இந்த சிலபஸில் புகுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?

* தமிழ் இலக்கியம், தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கணம் நீக்கப்பட்டதேன்?

உலகில் தமிழ் சமூகத்தின் மிக முக்கிய அடையாளமும் தனித்துவமான சிறப்பும் உடையவை தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம். இவையே தமிழின் உயிர். இவையே தமிழின் சிறப்பு. இதற்காகவே தமிழ் செம்மொழி என அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் மிக்க இம்மூன்றும் டி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸில் தந்திரமாக நீக்கிவிட்டு, தமிழர் வழிபாடுகள் மற்றும் சடங்குகள்; தமிழர் சமயமும் பண்பாட்டு நெறிமுறையும்: சைவம், வைணவம்; தமிழர் வாழ்க்கை: சாதி,சமயம், பெண்கள், அரசியல்; ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டதன் மூலம் தேர்வாளர் களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்? இவை எல்லோருக்கும் தெரிந்த தகவல்தானே. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் இலக்கியம், தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கணத்துக்கு முக்கியத்துவம் தராதது ஏன்?

* தனி நபர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

தமிழகத்தில் தமிழுக்கு தொண்டு செய்தவர்கள், தமிழக சீர்திருத்தவாதிகள், கவிஞர்கள், புலவர்கள், மொழி அறிஞர்கள், சமூகநீதிக்காக போராடியவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடியவர்கள், என ஏராளமான முக்கியத்துவம் பெற்றவர்க

No comments:

Post a Comment