Wednesday, February 20, 2013


தாய்மொழி கற்போம்!

(இன்று - பிப்.21: சர்வதேச தாய்மொழி தினம்.)

இன்று பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தின் குழந்தைகள் ஆங்கில பள்ளிகளில் படிக்கிற காரணத்தினால் தமிழ்மொழியை அறவே ஒதுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் மட்டுமில்லாமல் சில வீடுகளிலும்கூட ஆங்கிலத்தில்தான் தகவல் பரிமாற்றங்கள் தவறாமல் நடக்கிறது. பள்ளி கலைநிகழ்ச்சிகளிலும் தமிழ் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெறுகிறது. தமிழில் பேசுவது கேவலமாகவும், மட்டமானதாகவும் கருதப்படுகின்ற நிலை நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது.

எத்தனை மொழிகளை அறிந்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் அறிவு ஆழப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த ஒரு மொழியை ஒதுக்குவது நமக்கு மிகப்பெரிய நஷ்டம்.

தமிழில் இருக்கும் இலக்கணச்செறிவும் இலக்கிய வளமும் ஈடு இணையற்றது. எத்தனையோ வெளிநாட்டு அறிஞர்கள் தமிழைக் கற்று, தம்மை 'தமிழ் மாணாக்கர்' என்று அறிவிக்க ஆசைப்பட்டனர்.

மொழி என்பது வெறும் அடையாளம் மட்டுமன்று, ஒரு நாட்டின் பண்பாட்டை பதிவு செய்கிற ஊடகமாக அது விளங்கி வருகிறது.

நம் மொழி இலக்கியங்களை விரிவாக படிக்கிறபோது நம்மையும் அறியாமல் நம் பெருமை புலப்பட்டு பூடகமாக நம் நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டுவரும். அடுத்தவருக்கு உதவுகிற குணம், நட்பு, பாராட்டுதல், விருந்தோம்பல், உண்மையை போற்றுதல், ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகியவற்றை திறம்பட வெளிப்படுத்தும் சொற்சித்திரங்கள் இலக்கியம் முழுவதும் இழையோடுகின்றன. அவற்றை திரும்பத்திரும்ப வாசிக்கும்போது நமக்கு குழப்பம் ஏற்படும்போதெல்லாம் சரியான வரிகள் நினைவுக்கு வந்து நம்மை சரியான திசையில் செயல்பட வைக்கின்றன.

மக்களுக்கு மட்டுமில்லாமல் ஆட்சியாளர் களுக்கும், நிர்வாகிகளுக்கும், வணிகர்களுக்கும், நீதிமான்களுக்கும் அவை கைவிளக்குகளாக வெளிச்சம் காட்டுகின்றன. சிலப்பதிகாரம் ஆராயாமல் நீதி வழங்கப்படாது. இருபக்க நியாயமும் கேட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் காவியம் அது. தன் மகனுக்கும் சமநீதி வழங்கவேண்டும் என்பது மனுநீதியில் வெளிப்படும் உண்மை. அநியாயம் செய்பவர்களுக்கும் உடன்பிறந்த சகோதரர்கள் கூட உதவுவதில்லை என்று இராமாயணத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். உலகத்தில் முதல் முறையாக எழுதப்பட்ட சுயமுன்னேற்ற நூல் திருக்குறள்.

விருந்தோம்பலை நேசித்து வாசிப்பவர்கள் தங்கள் உணவை வருகிறவர்களுக்கு அளித்துவிட்டு மகிழ்ச்சியால் வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். வறுமையிலும் செம்மையாக வாழ்வதை செல்வச்செழிப்பிலும் பணிவாக இருப்பதை உயிர்போகிற நேரத்திலும் கௌரவமாக இருப்பதை நம் தாய்மொழி இலக்கியத்தை போல வேறெதுவும் நம் மனதில் ஆழமாக வேர்விடச் செய்யாது.

ஆங்கில மொழியோடு நம் மொழியையும் நன்றாக கற்போம்.

- வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.
தாய்மொழி கற்போம்!

இன்று பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தின் குழந்தைகள் ஆங்கில பள்ளிகளில் படிக்கிற காரணத்தினால் தமிழ்மொழியை அறவே ஒதுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் மட்டுமில்லாமல் சில வீடுகளிலும்கூட ஆங்கிலத்தில்தான் தகவல் பரிமாற்றங்கள் தவறாமல் நடக்கிறது. பள்ளி கலைநிகழ்ச்சிகளிலும் தமிழ் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெறுகிறது. தமிழில் பேசுவது கேவலமாகவும், மட்டமானதாகவும் கருதப்படுகின்ற நிலை நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது.

எத்தனை மொழிகளை அறிந்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் அறிவு ஆழப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த ஒரு மொழியை ஒதுக்குவது நமக்கு மிகப்பெரிய நஷ்டம்.

தமிழில் இருக்கும் இலக்கணச்செறிவும் இலக்கிய வளமும் ஈடு இணையற்றது. எத்தனையோ வெளிநாட்டு அறிஞர்கள் தமிழைக் கற்று, தம்மை 'தமிழ் மாணாக்கர்' என்று அறிவிக்க ஆசைப்பட்டனர்.

மொழி என்பது வெறும் அடையாளம் மட்டுமன்று, ஒரு நாட்டின் பண்பாட்டை பதிவு செய்கிற ஊடகமாக அது விளங்கி வருகிறது.

நம் மொழி இலக்கியங்களை விரிவாக படிக்கிறபோது நம்மையும் அறியாமல் நம் பெருமை புலப்பட்டு பூடகமாக நம் நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டுவரும். அடுத்தவருக்கு உதவுகிற குணம், நட்பு, பாராட்டுதல், விருந்தோம்பல், உண்மையை போற்றுதல், ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகியவற்றை திறம்பட வெளிப்படுத்தும் சொற்சித்திரங்கள் இலக்கியம் முழுவதும் இழையோடுகின்றன. அவற்றை திரும்பத்திரும்ப வாசிக்கும்போது நமக்கு குழப்பம் ஏற்படும்போதெல்லாம் சரியான வரிகள் நினைவுக்கு வந்து நம்மை சரியான திசையில் செயல்பட வைக்கின்றன.

மக்களுக்கு மட்டுமில்லாமல் ஆட்சியாளர் களுக்கும், நிர்வாகிகளுக்கும், வணிகர்களுக்கும், நீதிமான்களுக்கும் அவை கைவிளக்குகளாக வெளிச்சம் காட்டுகின்றன. சிலப்பதிகாரம் ஆராயாமல் நீதி வழங்கப்படாது. இருபக்க நியாயமும் கேட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் காவியம் அது. தன் மகனுக்கும் சமநீதி வழங்கவேண்டும் என்பது மனுநீதியில் வெளிப்படும் உண்மை. அநியாயம் செய்பவர்களுக்கும் உடன்பிறந்த சகோதரர்கள் கூட உதவுவதில்லை என்று இராமாயணத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். உலகத்தில் முதல் முறையாக எழுதப்பட்ட சுயமுன்னேற்ற நூல் திருக்குறள்.

விருந்தோம்பலை நேசித்து வாசிப்பவர்கள் தங்கள் உணவை வருகிறவர்களுக்கு அளித்துவிட்டு மகிழ்ச்சியால் வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். வறுமையிலும் செம்மையாக வாழ்வதை செல்வச்செழிப்பிலும் பணிவாக இருப்பதை உயிர்போகிற நேரத்திலும் கௌரவமாக இருப்பதை நம் தாய்மொழி இலக்கியத்தை போல வேறெதுவும் நம் மனதில் ஆழமாக வேர்விடச் செய்யாது.

ஆங்கில மொழியோடு நம் மொழியையும் நன்றாக கற்போம்.

- வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

(இன்று - பிப்.21: சர்வதேச தாய்மொழி தினம்.)

கடந்த 1999-ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை; ஓர் இனத்தின் பண்பாடு, கலாசாரம் ,வாழ்க்கைமுறை, சிந்தனை எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றும், நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு அன்னை மொழிக்கு உண்டு.

அன்னை மொழியை பிழையறப் பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது வருத்தமானது.

உலகில் அதிக இலக்கிய நோபல் பரிசுகளை அள்ளி இருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள், தாய் மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

கவனம் அன்பர்களே!

பாரதி, காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். உங்கள் அன்னை மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே? என கேள்வி எழுப்ப, இனிமேல் அவ்வாறே செய்கிறேன். நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் என காந்தி கேட்க, பிறர் மனம் நோக எழுதும்பொழுது அன்னை மொழியை உபயோகபடுத்த கூடாது என்பதே எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார்.

தாய்மொழி வெறும் தாய் சொல்லித் தந்த மொழி மட்டுமில்லை; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப் பாடம் நடத்தினார் பாரதி.

அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத் தேவை மட்டுமல்ல; அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

- பூ.கொ.சரவணன்

குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.
 
      துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நேரடியாக நிரப்புவதற்காக கடந்த 16–ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதல்நிலைத்தேர்வை நடத்தியது. புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்த தேர்வை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினார்கள். 
 

         ஏதேனும் போட்டித்தேர்வு நடந்தால் அதற்கான வினா–விடையை (கீ ஆன்சர்) தேர்வு எழுதியவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. 

        விடைகளில் ஏதும் சந்தேகம் இருந்தாலோ அல்லது தவறு இருந்தாலோ அதுகுறித்து 26–ந்தேதிக்குள் தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment