Thursday, February 28, 2013

Latest Materials - 2013
பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்

          நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம்  இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை

* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.

*10 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி

* சிகரெட் மீதான கலால் வரி 18 விழுக்காடு அதிகரிப்பு.

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

* ஒரு லட்சம் பேர் வசிக்கும் நகரங்களில் புதிய எப்.எம். சேனல் தொடங்கப்படும்.

* ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான நில ஒப்பந்தங்கள் மீதான டிடிஎஸ் 1 விழுக்காடாக நிர்ணயம்.

* அஞ்சல் நிலையங்களில் வங்கிப் பணிகளுக்கு ரூ.532 கோடி.
* ரூ. 10 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் உடைய உள்ளூர் கம்பெனிகளுக்கு 5-10% சர்சார்ஜ் விதிக்கப்படும்

* கல்வி வரி தொடரும்

* அதிகரிக்கப்பட்ட சர்சார்ஜ் ஒரே ஒரு நிதியாண்டுக்கு மட்டுமே


* 2014 ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.3 %

* வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியை ஊக்கப்படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படும்;ஒரு ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களை தயார்படுத்த முடியும்

* காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்.

* நிலக்கரி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் ரூ.253 கோடி செலவில் பாட்டியாலாவில் அமைக்கப்படும்.

* தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 5 கோடி பேருக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு.

* விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு ரூ.5,400 கோடி ஒதுக்கீடு.

* அணு சக்தி துறைக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு.

* ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

* பாதுகாப்பு துறைக்கு ரூ.2,20,000 கோடி ஒதுக்கீடு.
 * நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதி, இறக்குமதி 43 விழுக்காடு. * கடந்த ஆண்டில் இந்தியாவை விட வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவும், இந்தோனேஷியாவும் மட்டுமே. * நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே. * மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது.
* சர்வதேச பொருளாதாரம் 3.9 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக சரிவு

* 2013-14 ல் சீனா மட்டுமே இந்தியாவைவிட வேகமாக வளர்ச்சி அடையும்
 * நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே. * மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது. * பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக 41,000 கோடி மற்றும் 28,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. * மொத்த செலவினம் 16,30,825 கோடி ஆக உள்ளது. இதில் 5,55,322 கோடி திட்டச் செலவுகள். * சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாற்றுத் திறனாளிகள் நலனிற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,200 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவத் துறைக்கு மொத்தமாக 33,000 கோடி ஒதுக்கீடு.

*கல்வித் துறைக்கு ரூ.65,000 கோடியும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.27,257 கோடியும் ஒதுக்கீடு.

*குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ.11,700 கோடி நிதி ஒதுக்கீடு.

*குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

*தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வி உதவித் தொகை ரூ.5,200 கோடி ஒதுக்கீடு.

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.
* வேளாண் துறைக்கு ரூ. 27,500 கோடி ஒதுக்கீடு
* *தூய்மையான குடி நீர் வழங்க ரூ.15,260 கோடி ஒதுக்கீடு
* மருத்துவ கல்வி, பயிற்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு

* ஊனமுற்றோர் நலத்துறைக்கு ரூ. 110 கோடி ஒதுக்கிடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ. 37,330 கோடி ஒதுக்கீடு. இதில் ரூ.21,239 கோடி புதிய தேசிய சுகாதார திட்டத்திற்கு அளிக்கப்படும்

* ஆயுஷ் திட்டத்திற்கு ரூ. 1069 கோடி ஒதுக்கீடு

* AIIMS போன்ற நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு

* மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு

* மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 13,215 கோடி ஒதுக்கீடு

* குழந்தைகள் நலம் மற்றும் கல்விக்கு ரூ. 17,700 கோடி ஒதுக்கீடு

* தண்ணீர் சுத்திகரிப்புக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு
* உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்கும்

* வேளாண் ஏற்றுமதியால் ரூ.1,38,403 கோடி வருவாய்

* வேளாண் அமைச்சகத்திற்கு ரூ. 27,049 கோடி  ஒதுக்கீடு

* கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

* சராசரி வேளாண் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருந்தது

* கிழக்கு இந்திய மாநிலங்களில் ரூ.1000 கோடி அளவுக்கு பசுமை புரட்சி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்துள்ளது.

* வேளாண் கடன் இலக்கு ரூ. 7 லட்சம் கோடி.

* ராய்ப்பூர் மற்றும் சட்டீஸ்கரில் தேசிய உயிரியில் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும்

* ராஞ்சியில் தேசிய உயிரியல் தொழில்நுட்ப மையம்

* தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ரூ.10000 கோடி பெறும்

*13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு.

*அனைத்து பொதுத்துறை வங்கிக் கிளைகளுக்கும் ஏடிஎம் வசதி 2014 ஆண்டிற்குள் வழங்கப்படும்.

*பசுமைப் புரட்சி செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.500 கோடி.

*சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ மேம்பாட்டிற்கு ரூ.1,061 கோடி ஒதுக்கீடு.

*கைத்தறி துறைக்கு கூடுதலாக ரூ.96 கோடி ஒதுக்கீடு.

*சிறு மற்றும் குறு தொழில்களுக்கு 3 ஆண்டு வரிச் சலுகை.

*விவசாயத் துறையின் சராசரி வளர்ச்சி 3.6 விழுக்காடாக உள்ளது.

*மேற்குவங்கம், ஆந்திராவில் 2 புதிய துறைமுகங்கள் உருவாக்க நிதி ஒதுக்கீடு.

*கிராமப்புற முன்னேற்றத்திற்காக ரூ.80,000 கோடி ஒதுக்கீடு.

*உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

*ரூ.25 லட்சம் வரையிலான முதல் வீட்டுக் கடன் வட்டியில் மேலும் ரூ.1 லட்சம் குறைக்கப்படுகிறது.

*தூத்துக்குடி துறை மேம்பாட்டிற்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு.

*மின் இயந்திரங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு.

*உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்களாக இருக்கும்.

*வேளாண் ஏற்றுமதி மூலம் ரூ.1,38,403 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

*நபார்டு மற்றும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

*ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.17,000 கோடி

*ஊட்டச்சத்து பயிர் சாகுபடி முன்னோடித் திட்டங்களுக்கு ரூ.300 கோடி

*மாற்றுப் பயிர் சாகுபடி வளர்ச்சிக்கு ரூ.75 கோடி

*கேரளா, அந்தமான் தென்னங்கன்று வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.75 கோடி

*புதிய தேசிய சுகாதாரப் பணித் திட்டத்திற்கு ரூ.21,239 கோடி.

*இந்திரா அவாஸ் திட்டத்திற்கு ரூ.80,195 கோடி ஒதுக்கீடு.

*சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.37,300 கோடி ஒதுக்கீடு.

*ஜவஹர்லால் நேரு தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.14,873 கோடி ஒதுக்கீடு.

*4 உள் கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.25,000 கோடி நிதி திரட்ட முடிவு.

* குழந்தைகள் நலனிற்காக ரூ.77,236 கோடி ஒதுக்கீடு. 
*ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 2,400 கோடி

* கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டிவிகிதத்தில் தொழில் மூலதனம்

*13 பொதுத் துறை வங்கிகள் 2013-14 ல் ரூ.14000 கோடி மூலதனமாக பெறும்

* அனைத்து கூட்டுறவு வங்கிகளும் CBS கீழ் கொண்டுவரப்படும்

* அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் தங்களது சொந்த இடத்திலேயே ஏடிஎம் இயந்திரங்கள் 

* ரூ. 100 கோடி தொடக்க முதலீட்டில், இந்தியாவின் முதல் பெண்கள் வங்கி பொதுத் துறை வங்கியாக தொடங்கப்படும்.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!

         அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.

         கடந்த ஆண்டுதான் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆண்டிற்கு ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வரி செலுத்துபவர்களுக்கு ரூ.2,500 வரி த‌ள்ளுபடி.

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

      2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி

         ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.

          2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு, அவர்களது வட்டியில் ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என்றா‌ர்.

                இதன்படி வீட்டு கடன் தொகை ரூ.25 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட கனவுகாணும் குடும்பங்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் கட்டுமானப் பணி, ஸ்டீல், சிமென்ட், செங்கல், மரம், கண்ணாடி போன்றவற்றின் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் எ‌ன்று‌ம் ‌சித‌ம்ப‌ர‌ம் கூ‌றினா‌ர்.
6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் அறிமுகம்

       அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
 
 
             அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும். தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது. தற்போதைய உலகில், கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல், 10ம் வகுப்பு வரை படித்தால், அது அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு,6 முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டு முதல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை, அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, அரசு பள்ளி மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்துள்ளனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை, சிறப்பாக நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்

       ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
 
      அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.

           எந்த நாகரிகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர். கம்ப்யூட்டர் முதல் 3ஜி மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், டெஸ்ட் டியூப் குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது.

           வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, கல்வி முறையிலும் புதுமையை புகுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளை, மீண்டும் இந்தியாவில் பணிபுரிய புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளில் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், வளமான இந்தியாவை உருவாக்கலாம்.

          இருளை விரட்டிய மின்விளக்கு; தொலைவில் இருந்தாலும் உரையாட தொலைபேசி; என்ன வேலைகளையும் செய்வதற்கும் கம்ப்யூட்டர்கள்; மரங்களில் நிழல்களில் தங்கிய மனிதனுக்கு வானளாவிய கட்டடங்கள்; எங்கு வேண்டுமானாலும் செல்ல கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; உடனுக்குடன் பறக்க விமானம்; வெள்ளத்தில் இருந்த பாதுகாக்க அணைக்கட்டுகள்; மேலே இருந்து தகவல்களை தர ராக்கெட்டுகள்; அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு; இலை தழைகளை உடுத்திய மனிதன், தற்போது உடுத்தும் பல வண்ண ஆடை; பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன், தற்போது உண்ண பல வகை உணவு என எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்துள்ளான். இதற்கு காரணம் அறிவியல்.

             தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவ., 7ல் திருச்சி அருகே திருவானைக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் - பார்வதி அம்மாள்.

             பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அதே நேரத்தில் "இந்தியன் அசோசியேசன் பார் கல்டிவேஷன் சயின்ஸ்" நிறுவனத்தில் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

           ஒருமுறை இவர், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிக் கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது" என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து 1928, பிப்., 28ல், "ராமன் விளைவை" கண்டுபிடித்தார்.

           "நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது" என கண்டுபிடித்தார். இதற்காக 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

      கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment